.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, February 28, 2006

ஃபிலிம் காட்றோம்... (குறும்படம் பார்க்க வாங்க)

Your Ad Here

நிறப்பிரிகை என்ற 5 நிமிட குறும்படம் எடுக்க நேர்ந்தது ஒரு சுவையான அனுபவம். ஐரோப்பிய குறும்பட விழாவுக்காக ஒரு இணைய தளம் வடிவமைத்துக் கொடுத்தேன் . அந்த விழாவின் அமைப்பாளர் அஜீவன் அந்த விழாவிற்கு ஒரு படம் எடுத்து அனுப்பலாமே என ஆலோசனை தெரிவித்தார். 'சான்ஸே இல்லை. கொஞ்சம் கூட அனுபவம் இல்லாமல் அது சரிவராது'' என்று உதறிவிட்டேன் . ஆனால் அவர் தொடர்ந்து ஊக்கப் படுத்திக் கொண்டே இருந்தார். சுற்றிப் பார்த்ததில் ஒப்பேற்றும் அளவுக்கு நண்பர்கள் சிலரிடம் படம் எடுக்கத் தேவையான கருவிகளும் திறமையும் இருததது கொஞ்சம் உற்சாகத்தைத் தந்தது.

ஆனால் கதை வேண்டும் அதற்கு நடிக்க ஆள் வேண்டும். கதையை எழுதிவிட்டு ஆள் தேடி கிடைக்காமல் சிரமப் படுவதை விட நடிக்க ஆளைத் தயார் செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுதலாம் என்று முடிவெடுத்தேன். தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்த தோழி ஒருவர் தன் குழந்தைகளையும் மாணவிகளையும் நடிக்க வைக்க ஆர்வம் தெரிவித்தார்.

குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டு கதை எழுதவேண்டும். ஆனால் அது குழந்தைகளுக்கான படமாய் மட்டும் அமைந்துவிடக்கூடாது என்று எண்ணினேன். அப்படி உருவானதுதான் நிறப்பிரிகை. மத நல்லிணக்கத்தில் குழந்தைகளின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்று சொல்ல விழைந்தேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒளிப்பதிவாளர் உரிய நேரத்தில் வரக் காணோம். நடிக்க வரவேண்டிய குட்டிப் பெண் வரவில்லை. வெறுத்துப் போய் கைவிட்டுவிடலாமென்ற நிலையில் ஒளிப்பதிவாளர் வந்து சேர, தன் அம்மாவுடன் வேடிக்கை பார்க்க வந்த பெண்ணை முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோம் (அவள் பின்னி எடுத்துவிட்டாள் என்பது வேறு கதை). தாமதமானதால் வெளிச்சம் போய்விட்டது. வெளியில் எடுக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்க முடியாமல் போக, திரைக்கதையில் அவசர மாற்றம் தேவைப்பட்டது.

கேமரா ஆங்கிள், லைட் செட்டிங் எல்லாம் குத்து மதிப்பாய் வைத்து படம்பிடித்து முடித்தோம். லைவ் சவுண்ட் வேறு! 5 நிமிடப் படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை பெண்டு நிமிர்த்தியது. இசைஞானமுடைய யாரும் பின்னணி இசைக்கு இல்லை. எடிட் செய்த பின்னும் காட்சிகளின் ஃப்ளோ சீராக இல்லை. எப்படியோ முடித்து அனுப்பி வைத்தோம். விழாவுக்கு வந்திருந்த 83 படங்களில் 27 படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் நிறப்பிரிகையும் ஒன்று. கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தோஷமான ஆச்சரியம்!

படைப்பில் எனக்குத் திருப்தியில்லாததால் வேறெங்கும் இதனை அனுப்பவில்லை. கதையில் எனக்கு நிறைவு இருக்கிறது; நடித்தவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அவர்களை இன்னும்கூட இயல்பாக செய்ய வைத்திருக்கலாம். டெக்னிகலாக நிறைய சொதப்பல்கள். அனைத்துக் குறைகளுக்கும் முழுப்பொறுப்பு என்னுடையதே.

இந்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள்:

* படம் எடுப்பது சுலபமல்ல.

* படம் எடுப்பதற்கு நுணுக்கமான திட்டமிடல் அவசியம்

* படப்பிடிப்பில் ஒலி ஒளி இரண்டுக்கும் மிக முக்கியத்துவம் தரவேண்டும்

* எடிட்டிங்கில் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம் என்பது தவறு. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

* கதை அழுத்தமாக இருந்தால் டெக்னிகல் சொதப்பல்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு

இந்தப் பாடமெல்லாம் கற்றுக் கொண்டு அதற்குப் பின் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தலை நிறைய கனவுகள் உண்டு. கனியும் காலம்தான் இன்னும் வரவில்லை.

படத்துக்குப் போகுமுன் இரண்டு விஷயங்கள்:

1. நிறப்பிரிகை என்பதற்கு விளக்கம் படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

2. இது 9/11க்குப் பிறகு அன்பே சிவம் படத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது என்பதை இங்கு நினைவில் கொள்வது அவசியம்

படம் பார்த்து கருத்தைச் சொல்லிவிட்டுப் போங்கள் :-)



nirapirigai (short movie)
Video sent by nilaraj
Tamil Short movie on religious harmony

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 6 ***

Your Ad Here

இந்த சுற்றில் அணிகளோட பாப்புலாரிட்டிக்குத்தான் மார்க். வலைப்பதிவர்கள் தங்களோட வாக்கை பின்னூட்டங்கள் மூலமாக தங்களது விருப்பமான அணிக்குத் தெரிவிக்கலாம். அணியினர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்குச் சமமான மதிப்பெண்கள் அணிக்குச் சேரும்.

விதிமுறைகள்:

1. வாக்களிப்பவர் கண்டிப்பாக தமிழ் வலைபதிவராய் இருக்கவேண்டும். தனக்கென்று ஒரு பதிவு வைத்திருக்கவேண்டும்

2. ஒருவர் ஒரு அணிக்குத்தான் வாக்களிக்க முடியும்

3. அணியினர் தமக்காகப் பிரச்சாரம் செய்யலாம்:-)

4.போட்டியாளர்கள் வாக்குகள் சேர்க்கப்படமாட்டாது.

சுற்று முடிவு: இந்திய நேரம் புதன் அதிகாலை 3.00 மணி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

***பூப்பறிக்க வருகிறோம் சுற்று 5 ***

Your Ad Here

விதிகள்:

இந்த சுற்றில் பார்வையாளர்கள் பங்குபெற முடியாது. அணி உறுப்பினர்கள் இருவரும் கண்டிப்பாக கலந்தாலோசித்தால் மட்டுமே பதிலைப் பெற முடியும். ஒரு அணிக்கு ஒரு விடை மட்டுமே அனுமதிக்கப்படும். முதலில் சரியான விடை தரும் அணிக்கு 25 மதிப்பெண்கள். அடுத்தடுத்த அணிகளுக்கு முறையே, 20, 15, 10 மதிப்பெண்கள். விடை தவறாகச் சொன்னால் அணியின் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். விடைக்கான விளக்கம் எழுதுதல் அவசியம். சரியான விளக்கம் இல்லையென்றால் மதிப்பெண் குறைக்கப்படலாம். ஒரு வேளை கேள்வியில் தவறு இருந்தால் அணியினர் சரியாக விடை கூறியதாகக் கருதப்படும்.

சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் இரவு 11.30 மணி

அணிகளுக்கான கேள்விகள்:

தாமரை:

சிறிலுடைய தகப்பனாரின் வயது , தேவின் தொலைபேசி இலக்கத்தின் கடைசி எண் -இவை இரண்டையும் கூட்டினால் ஒரு எண் வருமல்லவா, அதன் கூட்டுத்தொகையைக் கண்டுபிடியுங்கள். (எ.கா: 111 என்பதன் கூட்டுத்தொகை:1+1+1=3). ஆங்கில எழுத்து வரிசையில் இந்த எண்ணின் இடத்தில் என்ன எழுத்து இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த எழுத்தின் முன் பில்லைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பிரபல தொழிலதிபருடைய பெயருக்கான குறிப்பு கிடைக்கும். அவர் யாரென எழுதுங்கள்

ரோஜா (பா.நா.த):

கொத்தனாருடைய கதவிலக்கத்திலிருக்கும் ஆங்கில எழுத்துதான் இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து.

குமரனின் கதவிலக்கத்தின் கடைசி எண்ணுக்குரிய ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்) இந்த வார்த்தையின் மூன்றாவது எழுத்தாகும்

கொத்தனார் பிறந்த ஊரில் அருகருகே இருமுறை ரிபீட் ஆகும் எழுத்து இந்த வார்த்தையின் இரண்டாவது எழுத்து.

ஒளியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து இந்த வார்த்தையின் கடைசி எழுத்து.

இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடியுங்கள்

மல்லிகை:
தருமியின் வீட்டு இலக்கத்தின் கூட்டு எண்ணுக்குரிய ஆங்கில எழுத்தை (ஆங்கில எழுத்து வரிசையில்) கண்டு பிடியுங்கள். இது ஒரு நாட்டின் முதல் எழுத்து. இந்த நாட்டின் கடைசி எழுத்தும் செல்வன் பிறந்த ஊரின் முதல் எழுத்தும் ஒன்றே. இந்த நாட்டின் இரண்டாவது எழுத்தும் செல்வன் முதன்முதல் சென்ற அயல்நாட்டின் இரண்டாவது எழுத்தும் ஒன்றே

7 எழுத்துக்கள் கொண்ட இந்த நாட்டின் பெயரைக் கண்டுபிடியுங்கள்

சாமந்தி:

கீழ்க்கண்ட குறிப்புகளில் பிரபலமான ஒருவரின் பெயர் அடங்கி இருக்கிறது:
பெயரின் 4வது எழுத்து: கௌசிகனின் தொலைபேசி இலக்கத்தின் கடைசி மூன்று எண்களின் கூட்டுத் தொகைக்கு நிகரான ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்)

ஹரிகரன் முதன்முதலின் சென்ற அயல்நாட்டின் மூன்றாவது எழுத்தும், கடைசி எழுத்தும் இந்தப் பெயரின் மூன்றாவது எழுத்தாகவும் ஐந்தாவது எழுத்தாகவும் அமைகின்றன.

ஹரிகரனின் கதவிலக்கத்திலுள்ள ஆங்கில எழுத்து இந்தப் பெயரின் இரண்டாவது எழுத்தாகும்

இவர் இந்திய-பாகிஸ்தானிய இளைஞர்களின் கனவில் வருபவர் என்பது கூடுதல் க்ளூ

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பூப்பறிக்க வருகிறோம் - 2வது சுற்று முடிவுகள்

Your Ad Here

தாமரை அணி:

http://chennaicutchery.blogspot.com/2006/02/2_28.html
தேவ் ஒற்றையாய்த் தயாரித்த விளம்பரம். சில டச்-அப் கிராஃபிக்ஸ் வேலைகளோட ஆங்கிலத்தில 4 வரி கவிதையும் எழுதிருந்தார். ரொம்ப சிம்பிளா போயிருச்சி
சாதகம்:
தேவின் முயற்சி

பாதகம்:
ரொம்ப எளிமையாகப் போய்விட்டது

ரோஜா (பா.நா.த):
http://elavasam.blogspot.com/2006/02/2.html

கொத்தனாரும் செல்வனை மாதிரி பாட்டு போட்ருக்காரு. அவங்களுக்கு சொன்ன அதே கமென்ட் தான் இங்கேயும் - விஷுவல் வேணும். ரஜினி பாட்டு மட்டும் போட்டா தமிழ்நாட்ல வேணா ஓட்டு விழலாம், சாமி. ஜூலாவுக்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டாமா?

சாதகம்:
???

பாதகம்:
க்ரியேடிவிடி கம்மியா இருந்திச்சு. அவசரப்பட்டுட்டீங்களோ?

மல்லிகை:
http://dharumi.weblogs.us/2006/02/28/192

இவங்களோட விளம்பரம் பாட்டும் கிராஃபிக்ஸும் கலந்து இருந்தது. செல்வனோட பாட்டு சுமார்தான். ஆனாலும் தருமியோட கிராஃபிக்ஸ் ஆகா ரகம். ஒரு வித ஒரிஜினாலிடி இருந்தது. வாழ்த்துக்கள்.

சாதகங்கள்:

தருமியோட கிராஃபிக்ஸ்
செல்வனுடைய நகைச்சுவை

பாதகங்கள்:

விளம்பரம் என்ற கான்செப்ட் இல்லாமல் போனது -ஜூலா கிரகத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியுமா நகைச்சுவையை ரசிக்க? தமிழ் தெரியும் என்ற ஊகத்தை விட கண்தெரியும் என்ற ஊகத்துக்கு வலு இருந்திருக்கும். அதனால் விளம்பரம் விஷுவலாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தருமி விஷுவல் தர முயன்றிருந்தாலும் அது ரஜினியின் ஜூலா கிரக பிரதாபங்களைப் பற்றியதாக இருந்ததெ தவிர அவர்களை வசீகரிக்க ஷங்கர் குழு என்ன செய்ய வேண்டும் என்ற உத்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

சாமந்தி:


http://thaamiraparani.blogspot.com
விளம்பரம்னா என்னன்னு இந்த அணிக்குத்தான் தெரிஞ்சிருக்கு. கிராஃபிக்ஸ் போடலை, பாட்டு போடலை ஆனா எல்லாத்தையும் எப்படி செய்யணும்னு விளக்கமா எழுதிட்டாங்க. Ad conceptனா இதுதான். ஒரு இயக்குநர் இதைத்தான் எதிர்பார்ப்பார். நிதானமா நம்ம டிராவிட் மாதிரி ஆடினாங்க சாமந்தி அணி. வெரி ப்ரொஃபஷனல்!

சாதகம்:

அருமையான விவரிப்பு. அதைப் படிக்கும்போதே விஷுவல் எஃபக்ட் இருந்தது. (வெல் டன்!)

விளம்பர உத்தி அருமை - கொலோசியம் போல ஆடிட்டோரியம்... நடுவில் லேசர் மாடல் என்பதெல்லாம் நல்ல உத்திகள்

ஓபனிங்க் சூப்பர்ப். ஜூலியன்களுக்கு பூமியைப் பற்றி ஒரு முன்னோட்டம் குடுத்தது நல்ல டெக்னிக்

ரஜினியின் பல கெட்டப்களோடு இசையும் கலந்த இன்ட்ரோ நல்ல ஐடியா. ஏன்னா ஜூலியன்களுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ. ஆனா இப்படி ஒலி ஒளில அவங்க கவனதைக் கவர்றதுதான் சரியான வழி

Closing-ம் almost perfect. குழு மொத்தமும் சேர்ந்து அனுமதி கேக்கறது நல்லா இருக்கு. ஆனா கையேந்தி கேட்ருக்க வேண்டாம். அது கொஞ்சம் நாடகத்தனமா இருக்கு

பாதகம்:
ரஜினிக்கு 5 நிமிஷம் டயலாக் டூ மச். விளம்பரம் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா இருக்கணும்
பின்குறிப்பு நகைச்சுவையா இருந்தாலும் ஆவங்களோட கான்செப்ட் மேல ஒரு நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கற மாதிரி போயிடுச்சி. அதைத் தவிர்த்திருக்கலாம்


நிலா குழுவின் தீர்ப்பு:

தாமரை அணி - முடிஞ்சவரை முயன்றார் தேவ்.
ரோஜா அணி - ஒட்டு மொத்த ஏமாற்றம்!
மல்லிகை அணி - இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்
சாமந்தி அணி - எதிர்ப்பேதுமின்றி இந்த சுற்றில் வென்று 25 மதிப்பெண்கள் பெறுகிறார்கள்

சாமந்திக்கு வாழ்த்துக்கள். (எப்படிங்க, சேந்து ஒரு விளம்பர ஏஜென்ஸி ஆரம்பிச்சுடலாமா?)

பி.கு:

பார்வையாளர்களில் கைப்புவும் மதுமிதாவும் கலந்து கொண்டார்கள். பெனாத்தல் சுரேஷ் இன்று வரை கால அவகாசம் கேட்டிருக்கிறார். அவருடைய பதிவு வந்ததும் பார்வையாளர்களின் சிறந்த விளம்பரம் தேர்ந்தெடுக்கப்படும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, February 27, 2006

பூப்பறிக்க வருகிறோம் - மூன்றாவது சுற்று முடிவு

Your Ad Here

இந்த சுற்றில் 4 அணியினருமே 3 குறிப்புகளை வைத்து பதிலைக் கண்டு பிடித்து 10 மதிப்பெண்களைத் தங்கள் அணிக்கு சேர்த்திருக்கிறார்கள்.

குமரன் அருமையான விளக்கத்தோட அவரோட பதிலை அனுப்பி இருந்தாரு. அதுவே ஒரு பதிவு போல இருந்தது.

கொத்ஸ் மற்ற இரு அணியினரோட பதில்களை முதல் ஆளா அவங்களுக்கு முன்னாலேயே கண்டு பிடித்து 2 மின் நூல்கள் பரிசு பெறுகிறார்.

கௌசிகன் அதே போல ஒரு பதிலை முதலில் கண்டுபிடித்து மின் நூல் பரிசு பெறுகிறார்.

மின் நூல் பரிசுகளை இந்த முறை போட்டியாளார்களே வென்று பார்வையாளர்களை முறியடித்துவிட்டார்கள். இந்த சுற்றில் பார்வையாளர்கள் ஏனோ சுறுசுறுப்புடன் இல்லை.

மின் நூல் பரிசு பெறுபவர்கள் விபரம்:

1. இலவசக் கொத்தனார் (மல்லிகை, சாமந்தி அணிகளின் பதில்கள்)
2. கௌசிகன் (தாமரை அணியின் பதில்)

3 வது சுற்று முடிவில் அணிகளின் மொத்த மதிப்பெண்கள் நிலவரம்:
தாமரை (சிறில் - தேவ்) 10
ரோஜா (பா. நா. த) (கொத்தனார் -குமரன்) 20
மல்லிகை (செல்வன் - தருமி) 20
சாமந்தி (கௌசிகன் - ஹரிஹரன்ஸ்) 40

போட்டிக்கு ஆதரவு தருபவர்கள்: நிலாஷாப் & நிலாச்சாரல்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 4 ***

Your Ad Here

இந்தப் போட்டி பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html

இந்த சுற்றில் நீங்கள் கொஞ்சம் இணையத்தில் அலைய வேண்டி இருக்கும். ஐந்து கேள்விகள் கேட்கப்படும். பதிலைப் பெற்றுவது உங்கள் சாமர்த்தியம்.

விதிகள்:

1. கீழே தரப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை போட்டியாளர்கள் பின்னுட்டமாக இடவேண்டும்.

2. ஒவ்வொரு கேள்விக்கும் முதலில் பதில் சொல்லும் போட்டியாளரின் அணிக்கு 10 மதிப்பெண்கள் சேரும்.

3. போட்டியாளர்களுக்கு முன் பதில் தரும் முதல் பார்வையாளருக்கு நிலாச்சாரல் வழங்கும் மின் நூல் பரிசு. (சுற்று முடிந்த பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்படும்)

4. போட்டியாளார்கள் ஒரு கேள்விக்கு ஒரு முறைதான் பதில் தரலாம்

5. சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் மாலை 9.00 மணி

போட்டிக் கேள்விகள்:

1. டி.பி.ஆர் ஜோசப் அவர்கள் வசிக்கும் வீட்டின் கதவு இலக்கம் என்ன?

2. நிலாஷாப்பில் சோவின் எத்தனை நாடகங்கள் விறபனைக்குள்ளன?

3. சிவபுராணம் சிவா படித்த ஆரம்பப் பள்ளியின் பெயர் என்ன?

4. மதி கந்தசாமி வசிக்கும் தெருவின் பெயர் என்ன?

5. நான் தமிழ்க்காதலர் என்ற அடைமொழியுடன் ஒரு பதிவில் குறிப்பிட்ட கவிஞர் வசிக்கும் நாடு எது?

போட்டிக்கு ஆதரவு தருபவர்கள்: நிலாஷாப் & நிலாச்சாரல்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

"பாவிகளே... மனம் திரும்புங்கள்"

Your Ad Here

'பாவிகளே... மனம் திரும்புங்கள். அறுவடைநாள் சமீபத்தில் இருக்கிறது' இப்படிப்பட்ட போதனைகளைக் கேட்கும்போது எனக்கு பல கேள்விகள் எழுகின்றன.

எதற்காக இந்த பயங்காட்டுதல்? பயமுறுத்திக் கொண்டுவரும் நம்பிக்கைகள் நிலைக்குமா? அதனால் யாருக்கு நன்மை? எத்தனை பேரை மனமாற்றினாய் என்று கடவுள் கணக்குக் கேட்பாரா? அப்படிக் கணக்குக் கேட்பாராயின் அவர் சர்வவல்லமை படைத்த, அன்பே உருவான கடவுள்தானா?

கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. காற்றை உணர்வது போல கடவுளை மனிதன் உணரத்தான் முடியும். ஒருவனுக்காக அடுத்தவன் அதை உணர முடியுமா? இல்லை நான் உணர்வதுதான் சரி என்று சாதிக்க முடியுமா? தம் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்க எண்ணும் மனிதர்களைக் கண்டால் பரிதாப உணர்ச்சியே எனக்கு மேலிடுகிறது.

ஆனாலும் மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன; பலரும் அதை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். எப்படி மதமாற்றத்துக்குப் பாடுபடுபவர்களைப் பார்த்தால் பரிதாபம் தோன்றுகிறதோ அதே உணர்ச்சிதான் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்தாலும் வருகிறது.

ஒருவரின் மதம் என்ன என்பதை எதை வைத்து நிர்ணயிக்கிறோம்? வெளி அடையாளங்களை வைத்தா, அல்லது அவர் நம்பும் கோட்பாடுகளை வைத்தா,அல்லது அவர் நம்பும் கடவுளை வைத்தா?

இஸ்லாமுக்கு மதம் மாறி காதலனைக் கைப்பிடித்த கிறித்துவத் தோழி ஒருத்தியை ஒரு முறை மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் சந்தித்தபோது, 'என்னதான் இருந்தாலும் ஒரு கஷ்டம்னா வேளாங்கண்ணி மாதாவும் ஏசுவும்தான் நெனப்புல வர்றாங்க' என்று கண்ணீர் மல்க என்னிடம் பகிர்ந்து கொண்டாள். அவள் கிறித்தவளா? முஸ்லீமா?

அவள் அடையாளங்கள் மாற்றிக்கொண்டது அவளின் வசதிக்காக. அதிலென்ன தவறு இருக்கமுடியும்? காட்டுவாசிகளைப் போல் உடையணிந்தால் 1 பில்லியன் டாலர் தரப்படும் என்று ஒரு அறிவிப்பு வந்தால், ஒட்டு மொத்த உலகமே வரிசையில் நிற்காதா?

பணத்துக்காக மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதே ஒரு அபத்தமான வாதம்.அப்படியே மாறுகிறார்கள் என்றே இருக்கட்டும். அது பில்லியன் டாலர் உதாரணத்திலிருந்து எங்ஙனம் வேறுபடுகிறது?

உங்களுக்கு பச்சை நிறம் பிடிக்கும் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சிவப்பு நிறத்தை விரும்பினால் 1 மில்லியன் தருகிறோம் என்று யாராவது சொல்கிறார்கள் என்று கொள்வோம். நீங்கள் சிவப்பு ஆடை அணிந்து அந்த நிறத்தை விரும்புவதாக பாசாங்கு காட்டலாமே ஒழிய, உண்மையிலேயே உங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்வது சாத்தியமா?

கடவுளும் அப்படித்தான். அந்த அடிப்படை புரிதலை, அது தரும் நம்பிக்கையை அவரவர் மாற்றிக் கொண்டால்தானுண்டு. மாற்றிக் கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அப்படி இருக்க, கட்டாய மத மாற்றம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்?

'பாவியே' என்று என்னை அழைக்காதே என்று வேண்டுமானால் நாம் சொல்லலாம். ஆனால் என் பக்கத்துவீட்டுக்காரனின் அடையாளத்தை மாற்றக்கூடாது என்று குதிப்பது தன்னம்பிக்கை இன்மையையும் பாதுகாப்பின்மையையுமே காட்டுகிறது.

அதே போல அவரவர் மதங்களைப் போதிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கும் ஒரு வரம்பு உண்டு. 'நான் ஒரு கடைக்குப் போகிறேன். ஒரு நல்ல சாமானைக் குறைந்த விலையில் வாங்குகிறேன். அதை உபயோகித்துப் பார்த்து பயன் பெற்றால் அனைவரிடமும் சொல்கிறேன். அது போலத்தான் எனக்கு பலனளித்த என் நம்பிக்கை பற்றியும் சொல்கிறேன். இதில் என்ன தவறு?' என்று கேட்கும் நண்பர்களுக்கு -

நல்லவற்றைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு நேரம், காலம், இடம், பொருள் மற்றும் வரம்பும் உண்டு. பகிர்ந்து கொள்கிற சாக்கில் அடுத்தவர் நம்பிக்கையைத் தூஷிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. உங்களிடம் யாராவது, "என் அம்மா மிகவும் நல்லவள். என்னை மிகுந்த அன்போடு நடத்துகிறாள். என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறாள். ஆனால் உன் அம்மா வேஷம் போட்ட பிசாசு" என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தீர்களானால் உங்கள் செய்கையின் கனம் புரியும்.

எல்லா மதங்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டவை; எந்தக் கடவுளும் அடுத்தவரைக் காயப் படுத்துவதை விரும்ப மாட்டார் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. இறைவனின் பெயரால் சகமனிதனைத் தூற்றுவதும் துன்புறுத்துவதும் அந்த இறைவனுக்குச் செய்யும் துரோகம் என்றே நான் கருதுகிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

***பூப்பறிக்க வருகிறோம் சுற்று 3***

Your Ad Here

இந்தப் போட்டி பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html

ஒவ்வொரு அணிக்கும் ஒரு பிரபலத்தைப் பற்றிய 3 குறிப்புகள் தரப்படும். இந்த மூன்று குறிப்புகளை வைத்து பதிலைக் கண்டுபிடிக்கும் அணிக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். பதில் தெரியாவிட்டால் அடுத்த குறிப்பைக் கேட்கலாம். 4வது குறிப்பில் பதில் சொன்னால் 5 மதிப்பெண்கள். 5வது குறிப்பில் பதில் சொன்னால் 2 மதிப்பெண்கள். பதிலே சொல்லாவிட்டால் - 5 (மைனஸ் 5) மதிப்பெண்கள்
விதிகள்:
1. ஒரு அணியிலிருந்து ஒரு பதில் மட்டுமே அனுமதிக்கப்படும். அதனால் அணி உறுப்பினர்கள் இணைந்து செயல்படுதல் அவசியம்.

2. பதிலைப் பின்னுட்டமாக இடும்போது உங்கள் அணியின் பெயரையும் சேர்த்து இடவும்

3. போட்டி அணிக்கு முன்பாக முதன்முதல் பதில் சொல்லும் மற்ற அணியினருக்கோ அல்லது பார்வையாளருக்கோ மின் நூல் பரிசு உண்டு. ஆனால் இவர்கள் முதல் மூன்று குறிப்புகளிலேயே சொல்லிருக்க வேண்டும் (இந்தப் பின்னூட்டங்கள் அணியினரின் வாய்ப்பு முடிந்த பின்னரே வெளியிடப்படும்)

சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் காலை 11.30 மணி

இனி போட்டிக் கேள்விகள்:

தாமரை:

அமெரிக்கப் பாடகி
பாடகரின் மகள்
பாடகரை மணந்தவர்

ரோஜா:

என்னைத் தன் பெயரில் கொண்ட மர்ம இந்தியர்
படை திரட்டிப் பெயர் பெற்றவர்
இவரது பெயரில் தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன

மல்லிகை:

சதமடித்த முக்கால் நூற்றாண்டு மனிதர்
மனசு கையளவு
இப்போது பொய் சொல்லக் கிளம்பியிருக்கிறார்

சாமந்தி:

சகோதரருடன் விரைந்து போட்டியிடும் விளையாட்டுப்பிள்ளை
நடிகையின் கணவர்
1991ல் களமிறங்கிய உலக சாதனையாளர்

போட்டிக்கு ஆதரவு தருபவர்கள்: நிலாஷாப் & நிலாச்சாரல் (விளம்பரம் இல்லாம எப்படிப்பா:-))

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** பூப்பறிக்க வருகிறோம் - முதல் சுற்று முடிவுகள் ***

Your Ad Here

இந்தப் போட்டி பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்:

http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html

முதல் சுற்றுக்கான பதிவு இங்கே:

http://nilaraj.blogspot.com/2006/02/1_114102190745146458.html

முதல் சுற்று நான் எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பா போச்சு. வீக் எண்டா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு நெனக்கிறேன்.

பாவம் செல்வனுக்கும் சிறிலுக்கும் வாய்ப்பே இல்லாம சுற்று முடிஞ்சு போச்சு. அதனால என்ன இருக்கவே இருக்கு மீதி சுற்றுக்களெல்லாம்.
இந்த சுற்றில பார்வையாளர்கள் நல்ல ஆர்வத்தோட கலந்துகிட்டாங்க. ஆனா யாருமே விளையாட்டைப் பற்றி முழுமையா தெரிஞ்சிக்காததால ஏன் என் பதில் வெளிவரலைன்னு கேட்டு துளைச்சிட்டாங்க. அதனால இனிமே ஒவ்வொரு சுற்றுக்கு முன்னாலேயும் விளையாட்டு குறித்த சுட்டி கொடுத்திடுவேன் .

ரெண்டு விடைகள் சரியா சொன்ன ஒரே பார்வையாளர் நம்ம காணாமல் போய் திரும்பி வந்த கைப்புள்ள :-) ஆனா பாவம் பரிசு மிஸ் ஆயிடுச்சு

முதல் சுற்றில முதல் முதல் பதில் சொன்ன போட்டியாளர் தருமி

ரெண்டு விடைகள் சரியா சொன்ன ஒரே போட்டியாளர் ஹரிஹரன்ஸ்

மின் நூல் பரிசு பெற்ற பார்வையாளர்கள் விபரங்கள்:

1. ராகவன் (4வது கேள்விக்கு )
2. ஜோ (2 வது கேள்விக்கு )
3. மதுமிதா (3வது கேள்விக்கு )

பரிசு பெற்ற ராகவன், மதுமிதா இருவரது மின்னஞ்சல் முகவரியும் என்னிடமுள்ளது. ஜோ எனக்கொரு தனி மடன் அனுப்புங்கள் ப்ளீஸ் : nila at nilacharal dot com

நிலாச்சாரலின் 250 இதழ் கொண்டாட்டங்களை ஒட்டி அடுத்த திங்கள் 3 மின் நூல்கள் வெளிவருகின்றன. விருப்பமான புத்தகம் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும்.

வெற்றி பெற்ற பார்வையாளர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்கு பெறுவீர்கள் என நம்புகிறேன்.

இனி அணி நிலவரம்:

தாமரை (சிறில் - தேவ்) 0
ரோஜா (பா. நா. த) (கொத்தனார் -குமரன்) 10
மல்லிகை (செல்வன் - தருமி) 10
சாமந்தி (கௌசிகன் - ஹரிஹரன்ஸ்) 30

மல்லிகை அணி போட்டியின் முதல் மதிப்பெண்ணைப் பெற்றாலும் சாமந்தி 30 மதிப்பெண்களுடன் பளிச்சென்று முன்னணியில் இருக்கிறது

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2 ***

Your Ad Here

*** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2 ***

இந்தப் போட்டி பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்:

http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html



முதல் சுற்றுக்கான பதிவு இங்கே:



http://nilaraj.blogspot.com/2006/02/1_114102190745146458.html



இந்தியாவிலிருக்கிற போட்டியாளர்கள் தூக்கத்தைக் கெடுக்க ரெண்டாவது சுற்று இப்போ.


கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்பனை சூழலை கவனமாகப் படிக்கவும்:
இயக்குநர் ஷங்கர், எதையும் பிரம்மாண்டமா செய்றவராச்சே, அதனால சிவாஜி படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியை நாசா புதுசா கண்டு பிடிச்சிருக்கிற 'ஜூலா' கிரகத்தில எடுக்கணும்னு விரும்பறார். அந்தக் கிரகவாசிகளான ஜூலியன்ஸ் கிட்ட அனுமதி வாங்கணும். அதுக்காக விளம்பரம் தயாரிக்கிற பொறுப்பை என்கிட்ட கொடுத்திருக்கிறார். நான் உங்கள்கிட்ட கொடுத்திட்டேன்.

நீங்க செய்ய வேண்டியது:
ஜூலியன் தலைவர்களக் கவர்ற மாதிரி விளம்பரம் ஒண்ணு செய்யணும் - இது வெறும் சுலோகனா இருக்கலாம். கிராஃபிக்ஸ், வீடியோன்னு என்ன வேணுமின்னாலும் சேத்துக்கலாம். ஏன் ரஜினியையே பேசவச்சாலும் சரிதான். ஆனா நச்சுன்னு இருக்கணும்

விதிகள்:

1. ஒரு அணிக்கு ஒரு என்ட்ரிதான் அனுமதிக்கப்படும். அதனால அணி உறுப்பினர்கள் இணைந்து செயல்படவேண்டும்

2. விளம்பரங்களைப் பின்னூட்டமாகவோ அல்லது ஒரு பதிவாகப் போட்டுவிட்டு சுட்டியாகவோ இங்கு தரலாம்

3. சிறந்த விளம்பரத்துக்கு 25 மதிப்பெண்கள் சேரும்.

4 பார்வையாளர்களும் கலந்து கொள்ளலாம். பார்வையாளர்களில் சிறந்த
விளம்பரத்துக்கு நிலாச்சாரல் வழங்கும் மின் நூல் பரிசு.

சுற்று முடிவு: (இந்திய நேரம்) புதன் அதிகாலை 3.00 மணி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, February 26, 2006

*** பூப்பறிக்க வருகிறோம் - சுற்று 1 ***

Your Ad Here

விளையாட்டு பற்றிய முன்குறிப்பிற்கு இங்கே செல்லவும்:

விதிமுறை:

கீழே தரப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை போட்டியாளர்கள் பின்னுட்டமாக இடவேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் முதலில் பதில் சொல்லும் போட்டியாளரின் அணிக்கு 10 மதிப்பெண்கள் சேரும்.

போட்டியாளர்களுக்கு முன் பதில் தரும் முதல் பார்வையாளருக்கு நிலாச்சாரல் வழங்கும் மின் நூல் பரிசு. (சுற்று முடிந்த பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்படும்)

சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் அதிகாலை 3.00 மணி


1. இவர் தமிழுக்கு வந்தது எந்த ஆண்டு?















2. இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இரு நாடுகள் யாவை?












3. படத்திலிருப்பது எந்த நாட்டின் சம்பிரதாய உடை?



















4. இந்தப் படத்தின் கதாநாயகி யார்?













5. இப்படிச் சொன்னவர் யார்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** நட்சத்திர விளையாட்டு - பூப்பறிக்க வருகிறோம்***

Your Ad Here

தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங். வித்தியாசமா ஏதாவது முயற்சி செய்யலாம்னு ஒரு ஆன் லைன் விளையாட்டு ஏற்பாடு பண்ணிருக்கேன்.

விளையாட்டுக்கு பெயர் பூப்பறிக்க வருகிறோம். இந்தப் பேரை தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் இந்த மாதிரி கிராமிய விளையாட்டுக்களை நினைவு படுத்தத்தான். பேருக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தமில்லை. ஒரு நினைவுப் பெயர். அவ்வளவுதான்

மொத்தம் 4 அணிகள். ஒவ்வொரு அணியிலேயும் 2 பேர். ஒருத்தர் அமெரிக்காவில இருந்து இன்னொருத்தர் இந்தியாலருந்து (அப்படின்னு ஆரம்பிச்சோம். கைப்புள்ள காணமப் போயிட்டதுனால மதுரை குமரன் களமிறங்க நேரிட அவர் விளையாட்டு ஆரம்பிக்கும்போது அமெரிக்காவில் இருப்பாராம். அவங்க அணிக்கு அது கொஞ்சம் பலவீனம்னாலும் பரவாயில்லைன்னு இறங்கியாச்சு). அணி விபரங்கள் கீழே:

தாமரை அணி:

சிறில் அலெக்ஸ் - தேவ்

ரோஜா அணி (இவங்க வச்சுக்கிட்ட பேரு பாண்டி நாட்டுத் தங்கம்ஸ் - பா.நா.த):

இலவசக் கொத்தனார் - குமரன்

மல்லிகை:

செல்வன் - தருமி

சாமந்தி:

கௌசிகன் - ஹரிஹரன்ஸ்

விளையாட்டில் மொத்தம் 6 சுற்றுக்கள் - இதில உலக அறிவு, படைப்புத் திறன், புத்திசாலித்தனம், வேகம் - இப்படி எல்லத்துக்கும் கலவையா சவால் இருக்கும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு பதிவு வரும். அணியினர் தங்கள் பதில்களை பின்னுட்டங்களாக இட வேண்டும். என் மெயில் பாக்ஸுக்கு எந்தப் பின்னூட்டம் முதலில் வருகிறதோ அவர்தான் முதலில் பதிலளித்ததாகக் கருதுவேன்.

பார்வையாளர்களும் பதிலளிக்கலாம். ஆனால் அவை சுற்று முடிந்தவுடன் வெளியிடப்படும். பார்வையாளர்களின் மற்ற பின்னூட்டங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும்

இந்திய நேரப்படி, திங்கள் மதியம் 12 மணியிலிருந்து புதன் அதிகாலை 3 மணி வரை எந்த நேரமும் சுற்றுகள் நடக்கலாம். விழிப்புடன் விரைந்து செயல்படுபவர்கள் வெல்வார்கள்.

வெற்றி பெறும் குழுவுக்கு நிலாஷாப்.காம் வழங்கும் பரிசு உண்டு. பரிசுபெறும் பார்வையாளர்களுக்கு நிலாச்சாரல் வழங்கும் மின்நூல் பரிசு.

இந்த முயற்சி புதிதாகையால், சில தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. மன்னிக்கணும், ஒகே? ஆனாலும் தவறுகளைத் தவிர்க்க கண்டிப்பாக முயல்வேன்

பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

'ஹையா... நான் ஸ்டார் ஆயிட்டேன்'

Your Ad Here

'ஹையா... நான் ஸ்டார் ஆயிட்டேன்' என்றோ 'வாழ்வினிலே ஒரு திரு நாள்' என்றோ இந்த நட்சத்திர வாரத்தை எனக்குக் கொண்டாடத் தோன்றவில்லை. (அப்படிக் கொண்டாடிய நட்சத்திரங்களுக்கு எழுத்து விரல் நுனியில் இருக்கிறது என்றுதான் அர்த்தம்).

படைப்பாளிகளை மேடையில் அமர வைத்து வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஒரு நல்ல ஏற்பாடுதான். இத்தகைய அங்கீகாரம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும்தான். ஆனால் எனக்கு வெளிச்சத்தின் நடுவில் முள்கிரீடத்தோடு அமர்ந்திருப்பதாய்ப் படுகிறது.

எழுத்தாளர்களில் இருவகை உண்டு - எழுதுபவர்கள்; எழுதப்படுபவர்கள். எழுதுபவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எதைக் குறித்து வேண்டுமானாலும் எழுதமுடியும் - பத்திரிகையாளர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. எழுத்து அவர்களின் கட்டளைக்கு அணிபடியும். பெரும்பாலும் இவர்கள் மூளையை பயன்படுத்தி எழுதுபவர்கள்.

அடுத்த வகையினருக்கு நினைத்த மாத்திரத்தில் எழுத முடியாது. எழுத்து அவர்களை எழுதும்; அவர்கள் மூலமாய் வெளிப்படும். எப்போது, எப்படி என்று அவர்களாலேயே கணிக்க முடியாது. எழுத்துதான் அங்கே முதலாளி; எழுத்தாளனல்ல. இவர்களின் எழுத்து பெரும்பாலும் இதயத்திலிருந்து புறப்படும். நிலாச்சாரலின் வழியாய் இந்த இரு வகை எழுத்தாளர்களின் பரிச்சயமும் எனக்குண்டு. அதனால்தான் இவ்வளவு நிச்சயமாக எனக்குக் கூறமுடிகிறது.

நான் இந்த இருவகைகளுக்கும் நடுவில் வருவேன் என நினைக்கிறேன். இதயத்தை ஏதேனும் ஸ்பரிசிக்கும்போது எனக்குள்ளிருந்து படைப்புகள் பீறி எழும்; பரபரவென்று வார்த்தைகள் குதித்தோடும்; எழுத முடியாத நிலையிலிருந்தால் கூட மனச்சுவரில் தானாகவே படைப்புகள் எழுதிக்கொள்ளும். அப்படியான சமயங்களில் எனக்கு ஆன்ம திருப்தி தருகிற சிறந்த படைப்புகள் பிறந்திருக்கின்றன. சில சமயம் எழுத ஆவலாய் இருக்கும். ஆனால் ஒரு கமா, புள்ளிகூட வெளிவராமல் எல்லாமும் எங்கோ சுருண்டு கொண்டதாய் ஒரு திணறலிருக்கும்.

ஆனால் எழுதியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் வருகிறபோது முனகிக்கொண்டாகினும் எழுத்து வெளிவந்துவிடுகிறது :-) பிரச்சனை என்னவென்றால் அப்படி ஒரு நிலை வருகிறபோது எழுத்தும் மனமும் ஒரு மாதிரியான விடுதலையைத் தேடித் தவிக்கும். இந்த சூழலில்தான் இப்போது நானிருக்கிறேன். அதனால்தான் வெளிச்சம் கிடைக்கிற மகிழ்ச்சி இருந்தாலும் முள்கிரீடம் குத்துகிற நெருடலும் இருக்கிறது.

வெகு தெளிவாகச் சொல்லிவிடுகிறேன் - நான் இலக்கியவாதியல்ல; அறிவு ஜீவியுமல்ல. கேள்விகள் அதிகம் கேட்கும் ஒரு சாமான்ய மனுஷி. என் படைப்புகளால் சமூகப் புரட்சி செய்ய வேண்டுமென்றெல்லாம் எனக்கு பேராசை கிடையாது; ஆனால் கண்டிப்பாக எந்தவிதத்திலும் சிதைவையோ சீரழிவையோ உருவாக்கக் கூடாது என்பதில் குறிப்பாய் இருக்கிறேன். நான் செய்யும் படைப்புக்களில் நான் கற்றுக்கொண்ட பாடங்களும் நானறிந்த வாழ்க்கை முறை குறித்த பதிவும் சேர்த்துத் தர முயற்சி செய்வேன் - அறிவுரையாக இல்லாமல் வெறும் பகிர்தலாய்.

'எல்லாம் சரி, இந்த வாரம் என்ன எதிர்பார்க்கலாம்?' என்ற கேள்வி புரிகிறது. நான் 'Jack of all trades. Master of none'. Jack ஆக இருப்பதில் ஒரு வசதி உண்டு. பல்வேறு தரப்பட்ட களங்களைத் தொடலாம். இயன்றவரை அகலமாக எழுதப் பார்க்கிறேன்.

எதையும் வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்ற என் அதீத ஆர்வத்தால் சில பரீட்சாத்த முயற்சிகள் செய்யப் போகிறேன். தட்டினாலும் குட்டினாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் .

ரசிகப் பெருமக்களாகிய நீங்கள் (ஆதான் நம்ம ஸ்டார் ஆயாச்சில்ல:-))) தரப்போகும் ஆதரவுக்கு அட்வான்ஸ் நன்றிகள் :-)))

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

***பூப்பறிக்க வருகிறோம் சுற்று 5 ***

Your Ad Here

விதிகள்:

இந்த சுற்றில் பார்வையாளர்கள் பங்குபெற முடியாது. அணி உறுப்பினர்கள் இருவரும் கண்டிப்பாக கலந்தாலோசித்தால் மட்டுமே பதிலைப் பெற முடியும். ஒரு அணிக்கு ஒரு விடை மட்டுமே அனுமதிக்கப்படும். முதலில் சரியான விடை தரும் அணிக்கு 25 மதிப்பெண்கள். அடுத்தடுத்த அணிகளுக்கு முறையே, 20, 15, 10 மதிப்பெண்கள். விடை தவறாகச் சொன்னால் அணியின் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். விடைக்கான விளக்கம் எழுதுதல் அவசியம். சரியான விளக்கம் இல்லையென்றால் மதிப்பெண் குறைக்கப்படலாம். ஒரு வேளை கேள்வியில் தவறு இருந்தால் அணியினர் சரியாக விடை கூறியதாகக் கருதப்படும்.

சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் இரவு 11.30 மணி

அணிகளுக்கான கேள்விகள்:

தாமரை:

சிறிலுடைய தகப்பனாரின் வயது , தேவின் தொலைபேசி இலக்கத்தின் கடைசி எண் -இவை இரண்டையும் கூட்டினால் ஒரு எண் வருமல்லவா, அதன் கூட்டுத்தொகையைக் கண்டுபிடியுங்கள். (எ.கா: 111 என்பதன் கூட்டுத்தொகை:1+1+1=3). ஆங்கில எழுத்து வரிசையில் இந்த எண்ணின் இடத்தில் என்ன எழுத்து இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த எழுத்தின் முன் பில்லைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பிரபல தொழிலதிபருடைய பெயருக்கான குறிப்பு கிடைக்கும். அவர் யாரென எழுதுங்கள்

ரோஜா (பா.நா.த):

கொத்தனாருடைய கதவிலக்கத்திலிருக்கும் ஆங்கில எழுத்துதான் இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து.

குமரனின் கதவிலக்கத்தின் கடைசி எண்ணுக்குரிய ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்) இந்த வார்த்தையின் மூன்றாவது எழுத்தாகும்

கொத்தனார் பிறந்த ஊரில் அருகருகே இருமுறை ரிபீட் ஆகும் எழுத்து இந்த வார்த்தையின் இரண்டாவது எழுத்து.

ஒளியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து இந்த வார்த்தையின் கடைசி எழுத்து.

இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடியுங்கள்

மல்லிகை:
தருமியின் வீட்டு இலக்கத்தின் கூட்டு எண்ணுக்குரிய ஆங்கில எழுத்தை (ஆங்கில எழுத்து வரிசையில்) கண்டு பிடியுங்கள். இது ஒரு நாட்டின் முதல் எழுத்து. இந்த நாட்டின் கடைசி எழுத்தும் செல்வன் பிறந்த ஊரின் முதல் எழுத்தும் ஒன்றே. இந்த நாட்டின் இரண்டாவது எழுத்தும் செல்வன் முதன்முதல் சென்ற அயல்நாட்டின் இரண்டாவது எழுத்தும் ஒன்றே

7 எழுத்துக்கள் கொண்ட இந்த நாட்டின் பெயரைக் கண்டுபிடியுங்கள்

சாமந்தி:

கீழ்க்கண்ட குறிப்புகளில் பிரபலமான ஒருவரின் பெயர் அடங்கி இருக்கிறது:
பெயரின் 4வது எழுத்து: கௌசிகனின் தொலைபேசி இலக்கத்தின் கடைசி மூன்று எண்களின் கூட்டுத் தொகைக்கு நிகரான ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்)

ஹரிகரன் முதன்முதலின் சென்ற அயல்நாட்டின் மூன்றாவது எழுத்தும், கடைசி எழுத்தும் இந்தப் பெயரின் மூன்றாவது எழுத்தாகவும் ஐந்தாவது எழுத்தாகவும் அமைகின்றன.

ஹரிகரனின் கதவிலக்கத்திலுள்ள ஆங்கில எழுத்து இந்தப் பெயரின் இரண்டாவது எழுத்தாகும்

இவர் இந்திய-பாகிஸ்தானிய இளைஞர்களின் கனவில் வருபவர் என்பது கூடுதல் க்ளூ

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, February 25, 2006

ஃபிலிம் காட்றோம்... (குறும்படம் பார்க்க வாங்க)

Your Ad Here

நிறப்பிரிகை என்ற 5 நிமிட குறும்படம் எடுக்க நேர்ந்தது ஒரு சுவையான அனுபவம். ஐரோப்பிய குறும்பட விழாவுக்காக ஒரு இணைய தளம் வடிவமைத்துக் கொடுத்தேன் . அந்த விழாவின் அமைப்பாளர் அஜீவன் அந்த விழாவிற்கு ஒரு படம் எடுத்து அனுப்பலாமே என ஆலோசனை தெரிவித்தார். 'சான்ஸே இல்லை. கொஞ்சம் கூட அனுபவம் இல்லாமல் அது சரிவராது'' என்று உதறிவிட்டேன் . ஆனால் அவர் தொடர்ந்து ஊக்கப் படுத்திக் கொண்டே இருந்தார். சுற்றிப் பார்த்ததில் ஒப்பேற்றும் அளவுக்கு நண்பர்கள் சிலரிடம் படம் எடுக்கத் தேவையான கருவிகளும் திறமையும் இருததது கொஞ்சம் உற்சாகத்தைத் தந்தது.

ஆனால் கதை வேண்டும் அதற்கு நடிக்க ஆள் வேண்டும். கதையை எழுதிவிட்டு ஆள் தேடி கிடைக்காமல் சிரமப் படுவதை விட நடிக்க ஆளைத் தயார் செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுதலாம் என்று முடிவெடுத்தேன். தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்த தோழி ஒருவர் தன் குழந்தைகளையும் மாணவிகளையும் நடிக்க வைக்க ஆர்வம் தெரிவித்தார்.

குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டு கதை எழுதவேண்டும். ஆனால் அது குழந்தைகளுக்கான படமாய் மட்டும் அமைந்துவிடக்கூடாது என்று எண்ணினேன். அப்படி உருவானதுதான் நிறப்பிரிகை. மத நல்லிணக்கத்தில் குழந்தைகளின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்று சொல்ல விழைந்தேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒளிப்பதிவாளர் உரிய நேரத்தில் வரக் காணோம். நடிக்க வரவேண்டிய குட்டிப் பெண் வரவில்லை. வெறுத்துப் போய் கைவிட்டுவிடலாமென்ற நிலையில் ஒளிப்பதிவாளர் வந்து சேர, தன் அம்மாவுடன் வேடிக்கை பார்க்க வந்த பெண்ணை முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோம் (அவள் பின்னி எடுத்துவிட்டாள் என்பது வேறு கதை). தாமதமானதால் வெளிச்சம் போய்விட்டது. வெளியில் எடுக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்க முடியாமல் போக, திரைக்கதையில் அவசர மாற்றம் தேவைப்பட்டது.

கேமரா ஆங்கிள், லைட் செட்டிங் எல்லாம் குத்து மதிப்பாய் வைத்து படம்பிடித்து முடித்தோம். லைவ் சவுண்ட் வேறு! 5 நிமிடப் படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை பெண்டு நிமிர்த்தியது. இசைஞானமுடைய யாரும் பின்னணி இசைக்கு இல்லை. எடிட் செய்த பின்னும் காட்சிகளின் ஃப்ளோ சீராக இல்லை. எப்படியோ முடித்து அனுப்பி வைத்தோம். விழாவுக்கு வந்திருந்த 83 படங்களில் 27 படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் நிறப்பிரிகையும் ஒன்று. கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தோஷமான ஆச்சரியம்!

படைப்பில் எனக்குத் திருப்தியில்லாததால் வேறெங்கும் இதனை அனுப்பவில்லை. கதையில் எனக்கு நிறைவு இருக்கிறது; நடித்தவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அவர்களை இன்னும்கூட இயல்பாக செய்ய வைத்திருக்கலாம். டெக்னிகலாக நிறைய சொதப்பல்கள். அனைத்துக் குறைகளுக்கும் முழுப்பொறுப்பு என்னுடையதே.

இந்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள்:

* படம் எடுப்பது சுலபமல்ல.

* படம் எடுப்பதற்கு நுணுக்கமான திட்டமிடல் அவசியம்

* படப்பிடிப்பில் ஒலி ஒளி இரண்டுக்கும் மிக முக்கியத்துவம் தரவேண்டும்

* எடிட்டிங்கில் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம் என்பது தவறு. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

* கதை அழுத்தமாக இருந்தால் டெக்னிகல் சொதப்பல்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு

இந்தப் பாடமெல்லாம் கற்றுக் கொண்டு அதற்குப் பின் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தலை நிறைய கனவுகள் உண்டு. கனியும் காலம்தான் இன்னும் வரவில்லை.

படத்துக்குப் போகுமுன் இரண்டு விஷயங்கள்:

1. நிறப்பிரிகை என்பதற்கு விளக்கம் படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

2. இது 9/11க்குப் பிறகு அன்பே சிவம் படத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது என்பதை இங்கு நினைவில் கொள்வது அவசியம்

படம் பார்க்க கீழ்க்கண்ட இங்கே தட்டுங்கள்.

பார்த்துவிட்டு வந்து கருத்தைச் சொல்லிவிட்டுப் போங்கள் :-)


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இலவசக் கொத்தனாருக்குத் துணை

Your Ad Here

தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங். வித்தியாசமா ஏதாவது முயற்சி செய்யலாம்னு ஒரு ஆன் லைன் விளையாட்டு ஏற்பாடு பண்ணிருக்கேன். விளையாட்டுக்கு பெயர் பூப்பறிக்க வருகிறோம். இந்தப் பேரை தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் இந்த மாதிரி கிராமிய விளையாட்டுக்களை நினைவு படுத்தத்தான். பேருக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தமில்லை. ஒரு நினைவுப் பெயர். அவ்வளவுதான்

மொத்தம் 4 அணி. ஒவ்வொரு அணியிலேயும் 2 பேர். ஒருத்தர் அமெரிக்காவில இருந்து இன்னொருத்தர் இந்தியாலருந்து. விளையாட்டில் மொத்தம் 6 சுற்றுக்கள் - இதில உலக அறிவு, படைப்புத் திறன், புத்திசாலித்தனம், வேகம் - இப்படி எல்லத்துக்கும் கலவையா சவால் இருக்கும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு பதிவு வரும். அணியினர் தங்கள் பதில்களை பின்னுட்டங்களாக இட வேண்டும். என் மெயில் பாக்ஸுக்கு எந்தப் பின்னூட்டம் முதலில் வருகிறதோ அவர்தான் முதலில் பதிலளித்ததாகக் கருதுவேன். பார்வையாளர்களும் பதிலளிக்கலாம். ஆனால் அவை சுற்று முடிந்தவுடன் வெளியிடப்படும்.இந்திய நேரப்படி, திங்கள் மதியம் 12 மணியிலிருந்து புதன் அதிகாலை 3 மணி வரை எந்த நேரமும் சுற்றுகள் நடக்கலாம். விழிப்புடன் விரைந்து செயல்படுபவர்கள் வெல்வார்கள்.

வெற்றி பெறும் குழுவுக்கு nilashop.com வழங்கும் பரிசு உண்டு.

நியாயமா இந்தப் பதிவை திங்கட்கிழமைதான் போட்டிருக்கணும். என்ன ஆகிப்போச்சின்னா, போட்டியாளர் கைப்புள்ளயை ஆளையே காணோம். நம்ம இலவசக் கொத்தனாரோட டீம் மேட் அவரு. அவருக்கு பதிலா யாராவது ஒருத்தர் இந்தியாவிலருந்தோ இல்லைன்னா ஏதாவது ஆசிய நாடுகளிலிருந்தோ களத்தில இறங்கலைன்னா கொத்தனார் ஒத்தையா க்ரீஸ்ல நிக்க வேண்டி இருக்கும். கொத்தனாருக்கு சாதனை அளவு பின்னூட்டம் தந்து அவரை வாழவைக்கும் நண்பர் படையிலிருந்து யாராவது கைகொடுத்தா நல்லா இருக்கும். இன்றைக்கு இதை முடிவு செஞ்சே ஆகணும். அதனால ஆர்வமிருக்கிறவங்க சட்டுன்னு ஒரு தனி மெயில் தட்டிவிடுங்க: nila at nilacharal dot com

பாவம், இலவசக் கொத்தனாரைக் கைவிட்டுடாதீங்க

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 16, 2006

இராக் போர்க்கைதிகளுக்குக் கொடூரம் -வெட்கக்கேடு

Your Ad Here

இராக் கைதிகளின் சித்திரவதைகள் குறித்த படங்களைத் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பார்க்க நேரிட்டபோது மனம் மிகவும் விசனத்துக்குள்ளானது. போர் என்பதே ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். அதிலும் இத்தைகைய சித்ரவதைகளைச் சேர்த்துக் கொள்வது மிருகச் செயல் அல்லவா? எப்படி ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இப்படி நடத்த முடியும் என்பது எனக்குப் புரியாத புதிராகத்தானிருக்கிறது. ராணுவப் பயிற்சியில் மனித நேயத்தைக் கொன்று போடுகிறார்களோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.

கடந்த ஏப்ரலில் இம்மாதிரிக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது கூட தவறு எப்போதாவது நடப்பது சகஜம் என மக்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் அதுவே ஒரு மரபாக இங்கு கடைப்பிடிக்கப்படுகிறதோ என்று எண்ணும் வண்ணம் மேலும் மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.இது வெட்கக்கேடான விஷயம் மட்டுமல்ல; மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.

'சதாம் உசேன் சித்திரவதை செய்தார்; கும்பல் கும்பலாக வெட்டிக் குவித்தார்' என்று குற்றம் சாட்டுவதற்கு இப்போது யாருக்கு இங்கு தகுதி இருக்கிறது? சதாமுக்கும் இத்தகைய கொடுஞ்செயல்களைச் செய்த ராணுவத்தினருக்கும் கடுகளவும் வேறுபாடு இல்லை.

இத்தகைய படங்களை வெளியிட்டது மேலும் பிரச்சனைகளை வளர்க்கும் என்று அமெரிக்கத் தரப்பில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. உண்மை எதுவாயிருந்தாலும் அதனை அறிந்துகொள்ளும் உரிமை உலகமக்களுக்கு உண்டு.

ஆதாரத்தின் அடிப்படையில் தவறு செய்தவர்களாக நிரூபிக்கப் படும் ராணுவத்தினர் மேல் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. இந்தப் பிரச்சனையின் ஆணி வேரைக் கண்டு அதை நீக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். இனி எக்காரணம் கொண்டும் இத்தகைய வன்செயல்கள் நடக்கா வண்ணம் தடுத்தல் அனைத்து அரசுகளின் பொறுப்பு; கடமை.

சமாதானமும் மனித நேயமும் நிலவும் உலகைப் படைக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை இங்கு அனைவரும் உணர்தல் மிக அவசியம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, February 15, 2006

பாகிஸ்தானில் கபடி

Your Ad Here

எங்கள் இரயில் நிலையத்தில் பெரும்பாலான டாக்ஸி டிரைவர்கள் பாகிஸ்தானியர்களே. நான் அவ்வப்போது டாக்ஸி எடுக்க நேரிடும் போதெல்லாம் அன்பாக என்னைப் பற்றி விசாரிப்பார்கள். நேற்று புதிதாக ஒரு டிரைவர். என்னைப் பார்த்ததும் 'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்றார். 'இந்தியா' என்றேன் புன்னகையோடு. 'நான் உங்கள் அடுத்த வீட்டுக்காரன்' என்றார். நானும் சிரித்துக் கொண்டே' உங்களைப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன்' என்றுவிட்டு 'கிரிக்கெட் பார்ப்பீர்களா?' என்றேன்.

ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அவர், "எனக்கு கிரிக்கெட் புரியாது. கபடிதான் பார்ப்பேன்' என்றார். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். நான் சுவராஸ்யமாய்க் கவனிக்க ஆரம்பித்ததும் அவருக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டது. 'நான் இங்கே (இங்கிலாந்தில்) கபடி போட்டிகளெல்லாம் நடத்துகிறேன். சிறுவயதில் நிறைய விளையாடி இருக்கிறேன். ஆனால் இப்போது வயதாகிவிட்டது. நான் பாகிஸ்தானில் பள்ளியில் படிக்கும் போது 99% பேர் கபடியில் ஆர்வம் காண்பிப்பார்கள். 1% பேர்தான் கிரிக்கெட் விளையாடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழ். ஆனால் நான் இப்போதும் பாகிஸ்தானில் கபடி சீசன் ஆரம்பிக்கும் போதுதான் ஊருக்குப் போவேன். கிராமங்களில் மட்டும்தான் இந்தப் போட்டிகள் நடக்கும். நாங்களெல்லாம் இலவசமாக சந்தோஷத்துக்காகத்தான் விளையாடுவோம். இப்போது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் நிறைய பணம் கொடுக்கப் படுகிறது. போட்டிகள் மேளதாளங்களோடு நடக்கும். மிகவும் கோலாகலமாக இருக்கும். உங்களுக்கு விருப்பமிருந்தால் கேசட் தருகிறேன். பாருங்கள்.' என்றார். அதற்குள் வீடு வந்து விட்டதால் அடுத்த முறை மீதியைக் கேட்கவும் கேசட்டைப் பார்க்கவும் ஆவலாக இருப்பதாகக் கூறி விடை பெற்றேன்.

அட நம்ம ஊர் கபடி இவ்வளவு புகழ் பெற்றிருக்கிறதா என்று வியப்பாய் இருந்தது. கூகுளில் கபடி என்று தேடினால் இரு வருடங்களுக்கு முன் ஆக்ஸ்போர்டு பல்க்லைக் கழகத்தில் கபடி போட்டித்தொடர் நடந்த செய்தி தெரிந்தது.

கபடி 4000 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் தோன்றியதாகத் தகவல். இத்தனை தொன்மையான விளையாட்டை கிரிக்கெட் முற்றிலுமாய்க் கொன்று போடாமலிருந்தால் சரி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, February 12, 2006

ஓஷோவும் பாக்கியராஜும்

Your Ad Here

ஓஷோவின் குட்டிக் கதைகளில் ஒன்று:

ஒரு மனிதன் இரவில் மலைவழியாய்ப் பயணப் பட்டுக் கொண்டிருந்த போது பாறை ஒன்று இடறிவிட்டது. ஆனால் அவன் அருகிலிருந்த மரத்தின் கிளையைப் பற்றிவிட்டான். அந்தப் பிரதேசம் மிக ஆழமான பள்ளத்தாக்குகளைக் கொண்டதானதால் அவனுக்கு அந்தக் கிளையை விட்டால் அதல பாதாளத்தில் விழுந்து மாண்டுபோவோம் என்ற பயம். இரவு முழுவதும் அதைப் பற்றிக் கொண்டு உதவி கேட்டு கத்திக் கொண்டிருந்தான். அவன் குரல் எதிரொலியாகத் திரும்பி வந்ததேயன்றி எந்த உதவியும் கிட்டவில்லை. குளிர் வாட்டியது. பிடி வழுகியது. கைகள் துவண்டு கொண்டே வந்தன . எந்த நிமிடமும் பிடி தளர்ந்து பாதாளத்தில் விழுந்து மரணமடைவோம் என்ற பயத்தோடேயே அவன் இரவு முழுவதையும் கழித்தான். சூரியனின் முதல் கதிர் வெளிவரவும்தான் அவனது காலுக்கு அரையடி கீழே ஒரு பெரிய பாறை இருந்தது தெரியவந்தது. அவன் அந்தப் பிடியை விட்டிருந்தால் இரவு முழுவதும் அந்தப் பாறையில் நிம்மதியாக உறங்கி நேரத்தைக் கழித்திருக்கலாம்.

கதையின் நீதி: பயம் அரையடி ஆழமுடையதே. அதனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வாழ்வை நரகமாக்குவதும் அதனை விட்டொழித்து வாழ்வை சொர்க்கமாக்குவதும் நம் கையில்தானிருக்கிறது.

இதுக்கும் பாக்யராஜுக்கும் என்ன சம்பந்தம்னு டார்லிங் டார்லிங் டார்லிங் படம் பார்த்தவங்களுக்குப் புரிஞ்சிருக்கும். படத்தின் க்ளைமாக்ஸில பாக்யராஜ் தற்கொலை பண்ணிக்கறதுக்காக மலை உச்சிக்குப் போவார். பூர்ணிமா அவரைத் தடுக்கறதுக்காக பதறி ஓடுவாங்க. உச்சில போய் அவரோட திருட்டு முழியோட நிப்பார். பூர்ணிமா திகைச்சுப் போய்ப் பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிப்பாங்க. காரணம் என்னன்னா மலை உச்சிக்கு அந்தப்பக்கம் அவர் எதிர்பார்த்தபடி பாதாளம் இருக்காது . சமதளம் இருக்கும். அங்க உள்ள ரோடுல மனுஷங்க நடந்துக்கிட்டிருப்பாங்க. கார் எல்லாம் போய்க்கிட்டிருக்கும். பாக்யராஜோட ட்ரேட் மார்க் காமெடி க்ளைமாக்ஸ் அது :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, February 08, 2006

வெள்ளை மனிதர்கள்

Your Ad Here

இந்தியாவில் வசித்தபோது பக்கத்து ஃப்ளாட் பெண்மணி வேலை செய்த வங்கியில் கணக்கு வைத்திருந்தேன். அவர் மூலமாகவே பணம் எடுப்பது போடுவது போன்ற பல வேலைகள் நடக்கும். ஒரு முறை அதற்காக அவரின் ஃப்ளாட்டுக்குச் சென்ற போது பல உறவினர்கள் வந்திருந்ததைப் பார்த்தேன். வங்கி சம்பந்தமாக ஏதோ நான் உதவி கேட்க அவர் அன்று தான் அலுவலகம் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்தார். நானும் சாவகாசமாக, 'உறவினர்கள் வந்திருப்பதால் விடுமுறை எடுத்திருப்பீர்கள்' என்றேன். "இல்லை நேற்று என் மகள் இறந்துவிட்டாள். அதனால்தான்" என்றார். நான் ஆடிப் போய்விட்டேன். அடுத்த வீட்டிலிருந்து கொண்டு தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டதை விட அவர் துக்கம் புரியாமல் போய் உதவி வேறு கேட்டேன் என்பதை நினைத்தால் மிகவும் அவமானமாக இருந்தது.

துக்கிக்கும்போது துணை இருந்தால் பாரம் எவ்வளவோ குறையும் என்றுதான் நம் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் மேலை நாட்டினர் போல நாமும் தனியாய் துக்கம் அனுஷ்டிப்பது போலத்தான் அமைந்துவிடுகிறது. சென்ற வருடம் நெருங்கிய உறவினர் இருவர் இறந்துவிட்ட செய்தி கிடைத்தபோது என்ன செய்வதென்று கூட தெரியவில்லை. ஊரில் இருந்தால் ஆளோடு சேர்ந்து அழுதுவிடலாம். தனியே என்னவோ உணர்வுகள் உறைந்துவிடுவது போலிருக்கிறது. அந்தத் தாக்கத்தில் எழுதிய கதை இந்த வெள்ளை மனிதர்கள் :

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_207.html

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, February 06, 2006

சூப்பர்ஸ்டார்களின் படங்கள்

Your Ad Here

நடிகர் நடிகையர் தேவைன்னு கேட்டிருந்தேனில்லை, இந்த வாரம் வலைப்பதிவுகளின் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படங்கள் நிலாச்சாரலில் ரிலீஸ்.

துளசி ஊருக்குப் போறதுக்கு முன்னாலேயே சமத்தா ஷூட்டிங் எல்லாம் முடிச்சுக் குடுத்துட்டுப் போயிட்டாங்க. தலைவி கண்ணாம்பாள் ரேஞ்சுக்கு நடிப்பில் கலக்கி இருக்காங்க. நீங்க பார்த்தே ஆகவேண்டிய படம்:

http://www.nilacharal.com/stage/kathai/nnt/tamil_novel_4.asp

திரைப்படம் முடிக்கிற தருவாயில் முக்கியமான கதாபாத்திரங்களோட க்ளோஸ் அப் பல கோணங்கள்ல, பல எக்ஸ்ப்ரஷன்ஸ் காட்ற மாதிரி எடுத்து வச்சுக்குவாங்களாம். தேவையானப்ப எடிட்டிங்க்ல புகுத்திருவாங்க. அது மாதிரி தலைவி நிறைய ஃபோட்டோஸ் சுட்டுக் குடுத்துட்டுத்தான் ஊருக்குப் போயிருக்காங்க. அவை வரும் வாரங்களிலும் வரும்.

கமல் ரசிகர் சுந்தருக்கு வாழ்வே மாயம் போல ஒரு கேரக்டர். அவங்க தலைவரைப் போலவே பர்ஃபாமன்ஸில பிச்சு உதறிட்டார். பார்த்துப் பாராட்ட வேண்டிய படம்:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_246a.asp

இதுவரைக்கும் எனக்காக நடிச்சுக் கொடுத்த எல்லாருமே நான் எதிர்பார்த்ததுக்கு மேலாகவே பெர்ஃபாம் பண்ணி இருக்காங்க. உண்மையாகவே இந்த அனுபவம் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு. நீங்களும் முயலலாமே? என் மின்னஞ்சல் முகவரி: nila at nilacharal dot com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, February 04, 2006

'இஸ்லாமை அவமதிப்பவர்களின் தலையைக் கொய்யுங்கள்'

Your Ad Here

கார்டூன் பிரச்சனையில் சாத்வீகமாகப் போராடும் முஸ்லீம்களின் ஊர்வலத்தில் கண்ட சில தட்டி வாசகங்கள்: (courtesy: BBC television)

Behead those who insult Islam
Slay those who insult Islam
Learn from 9/11
7/7 is coming again (I did not see this but the presenter mentioned it)


ஆர்பாட்டக்காரர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் சாத்வீகத்தையும் மனதார வரவேற்கிறேன் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, February 01, 2006

தலைப்பு

Your Ad Here

பி.எஃப் போன்ற ஆபாசத் தலைப்புகளும், சுவுண்ட் பார்ட்டி, லொள்ளு போன்ற கேணத்தனமான தலைப்புகளும், மதுர,சின்னா போன்ற க்ரியேடிவிடி ஏதும் தேவைப்படாத தலைப்புகளும் மலிந்துவிட்ட நிலையில் அர்த்தமுள்ள தலைப்புகள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

சிவசங்கரியின் கப்பல் பறவை, சுட்ட மண் என்ற இரு தலைப்புகளும் அவற்றின் பொருள் காரணமாய் மனதில் பதிந்து விட்டன.


துறைமுகத்தில் நிற்கும் கப்பல் தளத்தில் சிதறிக் கிடக்கும் தானியங்களைத் தின்னப் போகும் பறவைகள், உணவின் மயக்கத்தில் கப்பல் நகருவதைக் கவனிக்கத் தவறிவிடுமாம். கப்பல் வெகுதூரம் சென்றபின் அவை நடுக்கடலில் இருப்பதை உணராது கரை நோக்கிப் பயணப்படுமாம். வெகு நேரம் பறந்தும் கரையைக் காண முடியாமல் கப்பல் நோக்கித் திரும்ப முயலுமாம். ஆனால் அதற்குள் கப்பல் எட்ட முடியாத தொலைவு சென்றுவிடுமாம். இதனால் கரைக்கும் போக முடியாமல், கப்பலுக்கும் திரும்பமுடியாமல் இளைப்பாறவும் இடமில்லாமல் பறந்து பறந்தே கடலில் விழுந்து செத்துப் போகுமாம். ஒரு சின்னத் தலைப்பில் எவ்வளவு அருமையான வாழ்க்கைத் தத்துவம்!

***
குயவர்கள் பானை செய்வதற்கு பச்சை (raw) மண்ணை பயன்படுத்துவார்கள். மண் பச்சையாக இருக்கும் போது அதனை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம், வனையலாம். அப்படி ஒரு வடிவத்துக்குக் கொணர்ந்தபின் அதனை தணலில் சுடுவார்கள். அப்படி சுட்டபின் அந்தப் பொருள் உடைந்துவிட்டால் என்ன முயன்றாலும் மீண்டும் அதனை ஒட்ட வைக்க முடியாது. மண் ஒன்றுதான் ஆனால் சுட்டபின் அதன் குணம் மாறிவிடுகிறது. அதனை நாம் நினைக்கிறபடி மாற்ற இயலாது. சில சமயம் சுட்ட மண் என்று உணராமல் நாம் மனிதர்களின் இயல்பை மாற்ற முயன்று தோற்றுப் போகிறோம்.

இம்மாதிரி நியதிகள் நாம் அறிந்தவைதான் என்றாலும் யதார்த்த வாழ்க்கையில் பல சமயம் நமக்கு உறைக்காமல் போயிருக்கிறது. இந்தப் புரிதல் எனக்கு வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மிகுந்த உதவியாக இருந்திருக்கிறது. அதுதானே நல்ல எழுத்துக்கு அழகு!

சிவசங்கரி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். த.மா.க.வில் இருந்து சூடுபட்டு பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் குறித்த மேல் தகவல்கள் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.