.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, January 30, 2006

முருக பூபதி Hero ஆயிட்டாரு...

Your Ad Here

நடிகர், நடிகையர் தேவை என்று சில வாரங்களுக்கு முன் நான் போட்ட பதிவின் பயனாக இந்த வாரம் நம்ம முருக பூபதி ஸ்டார் ஆகிட்டாரு. 'நன்றும் தீதும்'ங்கற கதையில் கதாநாயகனா அறிமுகமாகி இருக்காரு. நான் அனுப்பியிருந்த ஸ்டோரி போர்ட் படிச்சு அவர் எடுத்து அனுப்பியிருந்த படங்களப் பார்த்து அசந்து போயிட்டேன்.

முகத்திலயும் கண்ணிலயும் இயலாமை, வருத்தம், கோபம் தெரியணும்னு சொல்லிருந்தேன். படத்தைப் பாருங்க. எவ்வளவு அழகா அந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கார்னு தெரியும்:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_245a.asp

முருகபூபதிக்கு என் பாராட்டைத் தெரிவிச்சப்ப அவர் நான் ஏதோ பேச்சுக்கு சொல்றேன்னு நெனச்சார். ஆனா அது உண்மைன்னு நீங்களும் கொஞ்சம் அவர்கிட்ட சொல்லுங்க.

அவ்வளவு ஈடுபாட்டோட நடிச்சு, படம் பிடிச்சுக் கொடுத்த முருகபூபதிக்கு நிலாக்குழுவின் நன்றிகள்

அடுத்த வாரம் வலைப் பதிவுகளின் சூப்பர் ஸ்டார்கள் ரெண்டு பேர் நடிக்கிற படங்கள் நிலாச்சாரலில் வரப் போவுது. யாருங்கறதை முடிஞ்சா யூகிங்க பார்க்கலாம்.

அப்புறம் நண்பர்களே, நடிகர், நடிகையர் தேவை தொடர்ச்சியாக இருந்து கொண்டுதானிருக்கும். அதனால் ஆர்வமுள்ளவர்கள் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்: nila at nilacharal dot com

மத்தபடி, ஏலியன் படம் ஒண்ணு தேவையிருக்கு. ஆனந்த் மாதிரி கேமராவை பாக்கெட்லேயே வச்சிருக்கிறவங்க யாருக்காவது ஏலியனைப் படம் பிடிக்கிற வாய்ப்பு வந்திச்சின்னா பிடிச்சு அனுப்புங்க என்ன? :-)

அல்லது உங்க வீட்டுக் குட்டீஸ் யாரையாவது ஒரு ஏலியன் வரைஞ்சு எனக்கு அனுப்ப சொல்லுங்க. ஒரு குட்டிப் பையன் எழுதின கதையில் ஏலியனைப் பற்றி வர்ற வர்ணனை இங்கே:

She noticed that the aliens had blue skin, two antennas, eyes nearly
popping out of their sockets but their faces looked friendly

குட்டிப் பசங்கதான் வரையணும்னு இல்லை. நீங்க கூட வரையலாம்:-)

யார் வரைஞ்சாலும் சனிக்கிழமைக்குள் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும். வரையப் போறதுக்கு அட்வான்ஸ் நன்றிகள்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, January 24, 2006

குழந்தைகளை அடித்தால் ஜெயில்

Your Ad Here

குழந்தைகளை தடம் ஏற்படும் அளவுக்கு அடிக்கும் பெற்றோர்களை 5 வருடம் வரை ஜெயிலில் தள்ளுவதற்கான சட்டம் ஒன்று இங்கிலாந்தில் சென்ற வருடம் அமுலுக்கு வந்தது.

குழந்தைகளை நெறிப்படுத்த மென்மையாக அடிக்கும் சலுகையை (!) இந்த சட்டம் பெற்றோருக்கு வழங்கி இருக்கிறது. இச்சட்டத்தின்படி குழந்தைகளை வீக்கமோ, சிராய்ப்போ, வெட்டுக் காயமோ, அல்லது வேறெந்த விதமான அடையாளமோ ஏற்படும்படி தண்டிக்கும் பெற்றொர்களின் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'குழந்தைகளுக்கு எது நல்லதென்று பெற்றோர்களுக்குத் தெரியும்; அரசாங்கம் எங்களுக்கு சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை' என்று பெற்றோர்கள் கொடிபிடித்தார்கள். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு கூட்டம் குழந்தைகளை அடிப்பதை முற்றிலும் தடை செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை எழுப்பியது. எப்படி வயது வந்த ஒருவரை அடிப்பது சட்டப்படி குற்றமோ அது போல குழந்தைகளை அடிப்பதும் குற்றமாகக் காணப்படவேண்டும் என்பது இவர்கள் வாதம். அரசாங்கம் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததை ஒட்டி மீண்டும் இந்த விஷயத்தில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

அதே சமயம் கல்வித் துறை இந்த சட்டத்தை உள்ளபடியே வரவேற்றிருக்கிறது. இந்த சட்டம் குழந்தைகளையும் பெற்றோரின் உரிமையையும் ஒரளவு பாதுகாப்பதாக உள்ளது என்கிறது கல்வித் துறையின் நிலை

நம் சமுதாயத்தில் குழந்தைகளை அடிப்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று; சில இடங்களில் பாராட்டப் படுவதும் உண்டு. தமிழ் சமுதாயத்தில் நான் பார்க்கும் மிகப் பெரிய மாற்றங்களில் இந்த மனப்பான்மையும் மாறி இருக்க வாய்ப்புண்டு. உலகின் பல பாகங்களில் வசிக்கும் தமிழ்ப் பெற்றோர் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவல். எழுதுங்களேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, January 23, 2006

இந்த வார நட்சத்திரம்

Your Ad Here

தமிழ்மணத்தின் இந்தவார நட்சத்திரமான 'ஆன்மிகத் தென்றல்' (இன்னொரு பட்டம்) குமரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளும் இதே வேளை நிலாச்சாரலின் மூலம் இணைய உலகில் நட்சத்திரமாக (??!!) அறிமுகமாகியிருக்கும் மிஸ்டர் துளசிக்கு (அதாவது திரு.கோபால் அவர்களுக்கு) பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் மட்டுமா? நம்ம தானைத் தலைவி துளசியும் ஒளிப்பதிவாளராகிட்டாங்கல்ல. விபரத்துக்கு கீழே உள்ள இணைப்பைத் தட்டவும்:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_244a.asp

கதாநாயகருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நிலாக்குழுவின் சார்பில் நன்றிகள்

நடிகர் நடிகர் தேவை என்று இரண்டு வாரம் முன் கேட்டிருந்தேன் அல்லவா? பல நண்பர்கள் அன்புடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. சில நண்பர்களுக்கு ஸ்டோரி போர்ட் கொடுத்து அதற்கேற்றவாறு படமும் எடுத்து அனுப்பிவிட்டார்கள். படங்களில் அவர்கள் காட்டியிருக்கிற பாவமும் பாடி லேங்குவேஜும் என்னை அசரடித்துவிட்டன. கற்பனையை நாயகர்களை/நாயகிகளைப் படமாக உணர்ச்சிகளுடன் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது. (எனக்கே இப்படின்னா, சினிமா எடுக்கறவங்களுக்கு எப்படி இருக்கும்?)

படம் எடுத்து அனுப்பிய நண்பர்களின் ஈடுபாடும் சிரத்தையும் ஒவ்வொரு படத்திலும் கண்கூடாகத் தெரிகிறது. எந்த வித எதிர்பார்ப்புமின்றி தங்கள் நேரத்தை கலைக்காக செலவிடும் இத்தகைய நண்பர்கள்தான் நிலாசாரலுக்கு உந்துகோல். சஸ்பென்ஸ் உடைந்துவிடக்கூடாது என்கிற காரணத்தால் நண்பர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அடுத்தவாரம் இன்னொரு நட்சத்திரத்தை அறிமுகம் செய்ய வெண்டுமே:-)
நடிகர், நடிகையரின் தேவை தொடர்ச்சியான ஒன்று. அதனால் ஆர்வமுள்ள நண்பர்கள் தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளவும் :nila at nilacharal dot com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, January 19, 2006

பூஜ்யன்

Your Ad Here

அசோக்குக்கு மதிய உணவு இடைவேளை ரொம்பப் பிடிக்கும். அரை மணி நேரமே ஆனாலும் காலாற தனியே நடந்து போய் தனக்குள் சிந்தித்து தனக்குள் பேசிக் கொள்கிற நேரம் அது மட்டும்தான். அது தனக்கான நேரம். ஆபீஸ் கவலைகள், கடன் தொல்லைகள் என்று தன்னை இம்சிக்கிற எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டுத் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தான். பிரச்சனைகளில் மூழ்கிக் கிடக்கிற வாழ்க்கையிலிருந்து ஒரு அரை மணி நேரமாவது இப்படி வெளியேறாவிட்டால் மூச்சு முட்டிப் போகாதோ?

தினமும் இப்படி நடந்து போகும் போது தவறாமல் அந்த அழுக்குப் பிச்சைக்காரனைப் பார்க்கிறான். நாற்பது நாற்பத்தைந்து வயதிருக்கும். திடகாத்திரமான உருவம். சடைபிடித்த முடி. பத்தடி தூரத்திற்கு நாற்றமடிக்கும் சுத்தம். இந்தக் கோலத்தில்தான் சிக்னலில் வழக்கமாய் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பான். சிக்னலுக்காகக் காத்திருக்கும் வாகனத்திலிருப்போரைத் தொட்டுத் தொட்டுக் காசு கேட்பதும் அவர்கள் அவனை வசை பாடிப் போவதும் நித்தம் நடக்கும் ஒன்று. ....மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, January 18, 2006

சில எளிய தியான முறைகள்

Your Ad Here

முத்துக்குமரனின் விபாஸனா தியானமுறை குறித்த கட்டுரை என்னை சற்று மிரளவைத்தது. அவர் சொல்வதில் தவறேதுமில்லை. ஆனால் அந்த தியான முறை கடுமையாகப் படுகிறது. தியானம் என்றாலே 10 நாள் பயிற்சியும் உலகை வெறுத்தலும் மௌனமும் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் எனது அனுபவ அறிவை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை தியானத்தின் நோக்கம் அமைதியும் சமாதானமும் அடைவது; எதையும் வெறுக்கவோ மறுக்கவோ செய்யாமல் அனைத்தையும் அவ்வப்படியே ஏற்றுக்கொளும் உள்ளொளி பெறுவது. தியானத்தின் பலன்கள் பற்பல. மனம் அமைதி அடையும்போது சிந்தனைகள் தெளிவுபடும். வாழ்க்கையை மேம்படுத்த வழிமுறைகள் தானாய்ப் பிறக்கும்.

இந்தப் பலன்களை அடைய பொறுமையும் ஒழுங்கும் கொஞ்சம் தேவை. நானும் quick fix தேடுகிற ஆசாமி ஆதலால் பலமுறை ஆரம்பித்து உடனே விட்டுவிட்டு இப்போது கடந்த இரு வருடங்களாக ஒரளவு ஒழுங்காகப் பயிற்சி செய்கிறேன். நல்ல பலன் இருக்கிறது.

ஒழுங்கு என்றவுடன் பயந்துவிடவேண்டாம். 10 நிமிட தியான முறையிலிருந்து ஒரு மணி நேர தியான முறை வரை பல வித தியான முறைகள் இருக்கின்றன. இணையத்திலேயே பல Guided meditation மையங்கள் உள்ளன.

நான் பயன்படுத்திப் பயன்பெற்ற தியான முறைகள் இங்கே:

Soham:

http://swamij.com/soham-mantra.htm

10-minute mindfulness meditation:

http://www.beliefnet.com/story/3/story_385_1.html

Guided Vipasana, Forgiveness, Guided Metta Meditation (can be downloaded):

http://www.imcw.org/audio/audio.php

இன்னும் முயன்று பார்க்க இருப்பவை இங்கே:

http://www.learningmeditation.com/room.htm

http://download.meditation.org.au/meditationmusic.asp

http://www.wildmind.org/realaudio/


தமிழில் கைடட் மெடிடேஷன் எதுவும் இணையத்தில் இல்லை என நினைக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் ஞானம் (!!!) பெற்றபிறகு போடுகிறேன் :-))

தன்னால் இப்படி அமைதியாகவெல்லாம் உட்கார்ந்து தியானம் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் சுகப்பயிற்சியை முயன்று பார்க்கலாம் (தமிழில்):

http://www.nilacharal.com/tamil/specials/sugam.html

இதையெல்லாம் முயற்சி செய்து பலன் இருந்தால், விருப்பப்படி குருதட்சணை அனுப்பலாம். (அடிக்க வராதீங்க சாமியோவ்:-))))))) பலன் எசகு பிசகாக இருந்து நீங்கள் சாமியாராகிவிட்டால் நான் பொறுப்பல்ல.

On a serious note, என் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேனே தவிர எதுவும் கற்றுக்த்தர முனையவில்லை. எதுவானாலும் முயற்சி செய்யுமுன் நன்றாக அதுகுறித்து அறிந்துகொண்டு முயற்சி செய்யுங்கள். விளைவுகளுக்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே.

சரி, தியானத்தைப் பற்றி பேசறதால நடிகர் நடிகர்கள் தேவை என்பதை மறந்துட்டேன்னு நினைக்காதீங்க. அடுத்தடுத்த வாரங்கள்ல அறங்கேறப் போறவங்களைப் பாத்து அசந்து போகப் போறீங்க. இன்னும் உதவி தேவை. முக்கியமாக அவசரமாக இரு இளம்பெண் மாடல் தேவை (22 - 26 வயது). யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, January 16, 2006

நடிகர்கள் அரங்கேற்றம்

Your Ad Here

என் இனிய நந்தவன நண்பர்களே, (டைரக்டருக்கான களை கட்டிருச்சில்ல:-)
நடிக, நடிகையர் வேணுமின்னு கேட்டிருந்தேனில்ல, முதல் கட்டமா இரண்டு பேரை அரங்கேத்தியாச்சு. நிலாச்சாரல்ல என்.கணேசன் எழுதற 'நீ...நான்... தாமிரபரணி' ங்கற சஸ்பென்ஸ் தொடரின் முதல் அத்தியாயத்தில பத்திரிகை ஆசிரியரா சத்தி சக்திதாசனும் ரிப்போர்ட்டரா சுந்தரும் (அகரமுதல சுந்தர் இல்லைங்க) அறிமுகமாயிட்டாங்க. படத்தை இங்கு பார்க்கலாம்:

http://www.nilacharal.com/stage/kathai/nnt//tamil_novel_1.asp

(ஆனந்தோட அழகான கோவில் ஃபோட்டோவை கொஞ்சம் கெடுத்துட்டதுக்கு அவர் மன்னிக்கணும்)

தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தகுந்தாப்ப்ல ஃபோட்டோ எடுத்து போடப் போறோம். இந்தக் கதையில வர்ற மற்ற பாத்திரங்களுக்கு இன்னும் ஆள் கிடைக்கலை (அதில ஒரு பாத்திரத்துக்கு துளசி பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுது. அவங்ககிட்டே கேக்கணும்). அதனால தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். கொஞ்சம் அப்படியே வாய் வழியே விஷயத்தைப் பரப்புங்க.

அப்புறம், இந்த ஐடியா நல்லா வொர்க் அவுட் ஆகறதால மத்த கதைகளுக்கும் இப்படி ஃபோட்டோ எடுத்து படம் போடலாம்னு இருக்கேன். முருக பூபதிக்கும் அகரமுதல சுந்தருக்கும் கேரக்டர்ஸ் இருக்குங்கோவ் (வத்ராப் சுந்தரை விட அகர முதல சுந்தர்னு சொல்றது பரவாயில்லையா?). உங்க ரெண்டு பேருக்கும் தனியா மடல் போடறேன்.

உதவி செய்த/செய்ற/செய்யப்போற எல்லாருக்கும் நன்றிங்கோவ்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, January 15, 2006

இதர பாடல்கள் - பதிவிறக்கம்

Your Ad Here

நமக்கு இசை என்றால் பெரும்பாலும் தமிழ்த்திரை இசை என்றாகிவிட்டது. திரை இசைக்கு அப்பாற்பட்ட, பிரபலமான கர்நாடக இசைப்பாடல்களுக்கும் அப்பாற்பட்ட சில நல்ல பாடல்கள் குறித்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

ஒரு பாடல் வெற்றி பெற முக்கியமானது மெட்டு. மெட்டு நன்றாக இருந்தால்தான் நம் கவனத்தையே கவர்கிறது பாடல். அதன் பிறகுதான் பாடல் வரிகளும் பாடகரின் குரலும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அதனால் நான் மொழி வித்தியாசமில்லாமல் எல்லா வகைப் பாடல்களையும் தேடித் தேடிக் கேட்பது வழக்கம். எந்த மதப் பாடல்கள் என்ற பாகுபாடும் எனக்கில்லை. மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் தரும் எந்த இசையானாலும் எந்த வரியானாலும் எனக்குப் பிரச்சனை இல்லை. கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கொட்டிக்கொடுக்க இணையம் என்ற சுரங்கம் இருக்கவே இருக்கிறது!

முதலில் அப்படி பிடிபட்ட தமிழ்ப்பாடல்களிலிருந்தே ஆரம்பிப்போம். சிவசங்கர பாபாவின் ராம ராஜ்யாவிற்கு ஒரு முறை சென்றிருந்த போது கேட்ட பாடல்கள் எல்லாமே சட்டென்று பிடித்துப் போக, அவர்களது இணையதளத்திற்கு சென்று தேடினேன். பல அருமையான பாடல்கள் பதிவிறக்கம் செய்யும் வசதியோடு தரப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே காணலாம்:

http://www.samratchana.net/hymns/songs/en-us/default.asp

இந்தப்பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்:

காதல் கொண்டேனடி
சங்கரம் என்னும் மந்திரம்
சங்கரனே தெய்வம்
மனமே ஆலயமே
வேண்டும் வேண்டும்
எனக்கொன்றும் தெரியாது
குரு அல்ல இறை
இறைவன் வர மாட்டாரா
ஒளி வெள்ளம்
ஓ மேரே
சிவசங்கரனே பள்ளியெழு
சங்கரம் சிவ சங்கரம்

பாடல்களைக் கேட்டுவிட்டுக் கருத்துச் சொல்லுங்கள்.

அடுத்தடுத்த பதிவுகளில் சில இந்தி, ஆங்கிலம், சீன மொழிப் பாடல்களைக் காண்போம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, January 14, 2006

நடிக, நடிகையர் தேவை

Your Ad Here

தொடர்கதை ஒன்றுக்கு நண்பர்களை மாடலிங் செய்ய வைத்து புகைப்படத்தோடு அதனை வெளியிட விருப்பம். நடிகர், நடிகையர் தேடிக் கொண்டிருக்கிறேன். கதையில் பல பாத்திரங்கள் இருப்பதால் பலரின் உதவி தேவை. விருப்பமுடையவர்கள் தயவ்வு செய்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்களேன். நான் ஸ்டோரி போர்ட் சொன்னால் நீங்களே நேரம் கிடைக்கும் போது படம் எடுத்து அனுப்பிவிடலாம். அதனால் உலகின் எந்தக் கோடியில் நீங்கள் இருந்தாலும் எனக்கு சம்மதமே.

புகைப் படங்களில் பார்த்தவர்களில் மாலன், சுந்தர், ரஜினி ராம்கி, டி.பி.ஆர்.ஜோசஃப், டோண்டு, ரசிகவ் என்று பலர் பாத்திரங்களுக்குப் பொருத்தமாகத் தெரிகிறார்கள் (இன்னும் எனக்குத் தெரியாமல் எவ்வளவோ பேர் இருக்கலாம்). அவர்களுக்கும் ஆர்வம் இருப்பின் இது ஒரு இனிய புதுமையான அனுபவமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

எனது மின் அஞ்சல் முகவரி: nila at nilacharal dot com

பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

பி.கு 1: பெண் பாத்திரங்களும் கதையில் உண்டு.

பி.கு 2: இதை விளையாட்டாக எழுதவில்லை.

பி.கு 3: உதவி கிடைக்கும் வரை மீள்பதிவு போட்டுக் கொண்டே இருப்பேன்:-)))

பி.கு 4: இந்த ஐடியாவுக்கு பேடன்ட் ரைட்ஸ் வாங்கி வத்திருக்கிறேன் :-)))

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, January 12, 2006

ஒழுக்க விதிகள்

Your Ad Here

கற்பு பற்றிய ஆரவாரம் சற்று ஓய்ந்தாலும் இன்னும் நமக்கு இந்த சங்கதியில் தெளிவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆளாளுக்கு இங்கு நாட்டாமைகளாக தங்களை வரித்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார்களே தவிர, எது அவர்களின் பார்வையில் ஒழுக்கம் என்று தெளிவாகச் சொல்லக் காணோம்.

இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முன்பே நிலாச்சாரலில் வெளிவந்த ஸ்வர்ண சுந்தரியின் 'ஒழுக்க விதிகள் - சில கேள்விகள்' என்ற கட்டுரையில் கேட்கப்பட்ட சில கேள்விகளை இங்கு வைக்கிறேன்:

ஒழுக்கம் என்பது ஏன் நம் சமூகத்தில் பாலியலுடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கப் படுகிறது? அடுத்தவருக்குத் தரும் மரியாதையில், சமூக அக்கறையில், தனிமனித நேர்மையில் - இவற்றிலெல்லாம் ஒழுக்கம் தேவையில்லையா? அடுத்தவரை ஏமாற்றுபவன் ஏகபத்தினி விரதனாய் இருந்தாலவன் ஒழுக்கசீலன் ஆகிவிடுவானா?

சரி, பாலியல் ஒழுக்கத்தையே எடுத்துக் கொள்வோம். அதிலாவது நாம் தெளிவாக இருக்கிறோமா? ஒழுக்கமென்பது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதா? அப்படியானால் நமது அரசியல்வாதிகளில் பலர் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று தமிழகம் ஒப்புக் கொள்ளுமா?

‘கேரக்டர் சரியில்லை’ என்று பெரும்பாலும் பெண்களே சுட்டிக் காட்டப்படுவது ஏன்?

முழுக்கட்டுரையையும் இங்கு காணலாம்:
http://www.nilacharal.com/tamil/specials/tamil_vithi_191.html

நாட்டாமைகள் இந்தக் கட்டுரையில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் சொன்னால் என்னைப் போன்ற சிற்றறிவுகளுக்கு எட்டாத நம் ஒழுக்கவிதிகளில் கொஞ்சம் தெளிவு பிறக்கும். (ஏன் அவர்களே இந்த விதிகளுக்கென்று ஒரு புத்தகம் போட்டுவிட்டால் அவ்வப்போது ரெஃபர் பண்ணிக் கொள்ள வசதியாக இருக்கும் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

முகமூடி

Your Ad Here

வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பற்பல முகமூடிகளை அணிந்திருக்கிறோம். இடத்திற்கேற்றவாறு மனிதர்களுக்கேற்றவாறு சில பல முகமூடிகளைக் கழற்றி வைக்கிறோம். ஆனால் முகமூடி இல்லாமல் நாம் வாழ்வது மிகவும் குறைவு - எங்கோ படித்த இந்தக் கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.

உலகம் ஒரு சிறிய கிராமமாகிப் போனதில் மேலும் மேலும் புதிய சூழல்கள், மனிதர்கள் என்று சந்திக்க நேர்கையில் இன்னும் பல முகமூடிகள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. இப்படி முகமூடிகளை மாற்றிக் கொண்டே இருப்பதில் நாம் யார் என்றே நாளாவட்டத்தில் நமக்கு மறந்து போகிறது.

உண்மையான ஆன்மீகம் நாம் யார் என்பதை அறிந்து கொள்வதே என்று படித்திருக்கிறேன். ஒரு புத்த மதப் பாடலின் கருத்து இது - ஒரு மனிதன் தான் பட்டாம் பூச்சியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதும் கற்பனை செய்து கொண்டிருப்பானாம்; இறக்கைகளை அடித்துக் கொண்டு உலகெலாம் சுற்றிவரலாம், மலர்களின் வாசனைக்குள் மதிமயங்கி திளைத்திருக்கலாம் என்றெல்லாம் கனவு கொண்டிருப்பானாம். கடைசியில் அவனுக்குத் தான் மனிதன் என்பதே மறந்து போய் பட்டாம்பூச்சியாகவே தன்னைப் பாவிக்கத் தொடங்கிவிட்டானாம்.. அது போலத்தான் மனிதனும் உலக இச்சைகளில் உழன்று தன் உண்மையான (ஆன்மாவின்) இயல்பை மறந்து போகிறான். (கருத்தைப் போலவே பாடலின் ட்யூனும் அற்புதமாய் இருக்கும். கேட்க விரும்பினால் சொல்லுங்கள்)

எனக்கும் அடிக்கடி 'நான் யார்? எங்கே இருக்கிறேன்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்?' என்பது போன்ற கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. பதிலுக்காக பரதேசி போல அலைவதில் பல புதிய விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன். அப்படி கற்றுக் கொண்ட ஒரு விஷயம் இந்த சுகம் செயல்முறை:

http://www.nilacharal.com/tamil/specials/sugam.html

எளிதானதும் பயனுள்ளதும். முயற்சித்துப் பாருங்கள்.

நேரம் கிடைக்கும்போது நான் கற்றுக் கொண்ட மற்றவற்றைப் பற்றியும் எழுதுகிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, January 10, 2006

5 ஸ்டார்ஸ்

Your Ad Here

பெரும்பான்மையான எனது சிறுகதைகள் இதயத்திலிருந்து எழுதப்பட்டவை. சில கதைகளை புத்தியிலிருந்து எழுதியதுண்டு. அப்படி எழுதிய கதைகளில் '5 ஸ்டார்ஸ்' என்ற கதை ஒன்று. இதிலுள்ள சிறிய பிரச்சனை கணினி தெரிந்தவர்களுக்கு மட்டுமே இக்கதை புரியும். கதை இங்கே:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_230b.asp

மாணாவர்களை மனதில் வைத்து எழுதிய கதை. அநேகமாக இங்கு வரும் எல்லோரும் முடிவை முன்பே ஊகித்துவிடுவீர்கள் என்றுதான் நினைக்கிறேன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, January 09, 2006

பிரபஞ்சப் பூர்த்தி

Your Ad Here

ஓஷோ பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. அவரை செக்ஸ் சாமியார் என்று நம் ஊடகங்கள் தரம் தாழ்த்தியதில் அவரின் அரிய கருத்துக்களைக் கேட்க முடியாமல் போய்விட்டதோ என்ற ஐயம் எனக்குண்டு. அதற்குக் காரணம் அவ்வப்போது துளித்துளியாய் நான் படிக்க நேரிடும் அவருடைய படைப்புக்கள்.

எப்போதாவது வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டால் ஓஷோவின் இந்தக் கவிதையைப் படியுங்கள்; மனதை தென்றல் தடவிக் கொடுத்தது போன்ற இதம் கிடைக்கும்: (நல்ல கவிஞர்கள் யாரேனும் இதனைத் தமிழ்ப்படுத்தினால் நலமாயிருக்கும்)


You are not accidental.
Existence needs you.
Without you something
will be missing in existence
and nobody can replace it.

That's what gives you dignity,
that the whole existence will miss you.
The stars and sun and moon, the trees
and birds and earth - everything in the universe
will feel a small place is vacant
which cannot be filled by anybody except you.

This gives you a tremendous joy,
a fulfillment that you are related to existence,
and existence cares for you.
Once you are clean and clear,
you can see tremendous love
falling on you from all dimensions.
~Osho

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, January 07, 2006

வாடி... வாடி... நாட்டுக் கட்டை

Your Ad Here

நம் வீடுகளுக்கு விருந்தினர்கள் வந்துவிட்டால் நம் வீட்டுக் குழந்தைகளின் வித்தைகளைக் காட்டி குழந்தைகளையும் விருந்தினர்களையும் டார்ச்சர் செய்துவிடும் பழக்கம் பரவலாகக் காணப் படுகிறது.

"கண்ணா, ஐ எங்க இருக்கு?"

"இது பேர் என்ன?"

"ரெட் கலர் பால் எடு"

குழந்தை சரியாகச் செய்யும் வரை அதை விடுவதில்லை. விருந்தாளிகள் இதற்கு முன் இதைக் கண்டு களித்திருந்தாலும் அவர்களையும் விடுவதில்லை. இப்படிக் காட்டப்படுகிற வித்தைகளில் சினிமா பாடலுக்கு தனி மகத்துவம் உண்டு.

சில வருடங்களுக்கு முன் என் தோழியின் மகனிடம் அவள், 'கண்ணா, உனக்குப் பிடிச்ச அந்தப் பாட்டைப் பாடு" என்றதும், அவன், "வாடி... வாடி... நாட்டுக் கட்டை" என்று பாட எனக்கு என்னவோ போலிருந்தது.

இன்னொரு குழந்தையை அவள் தாய் மிகவும் வற்புறுத்தி 'மன்மத ராசா' பாடலைப் பாட வைக்க அவள் முழுப்பாடலையும் சிரத்தையாய்ப் பாடி 'என்னைக் கணக்குப் பண்ணேண்டா' என்று முடித்ததும் அந்த அன்னையின் முகத்தில் அத்தனை பெருமிதம்.

என்னதான் குழந்தைகள் வார்த்தைகளின் பொருள் தெரியாமல் பாடினாலும் இது போன்ற பாடல்களை அவர்கள் வாயிலிருந்து கேட்கும்போது எனக்கு பெரிய உறுத்தலாக இருக்கிறது. யோசித்துப் பார்த்ததில், நம் 'டிவி- சென்டிரிக்' உலகத்த்தில், ஒரு வேளை தமிழில் குழந்தைகளின் பொழுது போக்கு அம்சங்கள் குறைவாக இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றியது. குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள், பாடல்கள், குறும்படங்கள் தமிழில் அதிகம் வரவேண்டும் என்பதே என் ஆசை.

ஆனால் தம் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதையே விரும்பும் போக்கைத்தானே பெற்றோரிடம் பொதுவாகக் காண்கிறோம். நிலை அப்படி இருக்க, தமிழில் இப்பொழுது போக்கு அம்சங்கள் வந்தாலும் அவற்றை வாங்கி பயன்படுத்துவார்களா என்பது பெரிய கேள்விக் குறியே.

சென்ற முறை சென்னை சென்றிருந்தபோது தமிழில் சிறுவர் பாடல்கள் வாங்க மிகவும் அலைய வேண்டியதாய் இருந்தது. 'மேடம், இந்தக் காலத்தில யார் மேடம் தமிழ் ரைம்ஸ் வாங்கறாங்க' என்று ஏளனமாய்க் கேட்டார்கள் கடை ஊழியர்கள். கஷ்டப் பட்டுக் கொஞ்சம் ஒலி நாடாக்களும் கதைப் புத்தகங்களும் வாங்கி வந்து பார்க்கும் குழந்தைகளுக்கெல்லாம் பரிசாக வழங்கி வருகிறேன்.

'ரா ரா...' என்ற சந்திரமுகி பாடலை இன்னொரு குழந்தை பாடாமலிருக்க (ஒரு குழந்தை பாடி கேட்டாகிவிட்டது) ஏதோ என்னாலான சிறிய முயற்சி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, January 06, 2006

ஒரு முறை அடித்தால் ஒன்பது முறை திருப்பி அடி

Your Ad Here

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக நண்பர் வீட்டில் குழுமியிருந்த போது ஒரு இரண்டு வயதுக் குழந்தைக்கு சோஃபாவில் லேசாக அடிபட்டுவிட்டது. அவன் மூச்சடக்கி பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டான். அவன் தாய் பதறியடித்து அவனை சமாதானப் படுத்தினார். அவன் அழுகை நின்றதும் சோஃபாவுக்குக் கூட்டிப்போய் 'இந்த சோஃபாதானே அடித்தது. நீயும் திரும்ப அடித்துவிடு" என்று தாய் சொல்ல, குழந்தையும் அடித்துவிட்டு ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

சற்று நேரம் பொறுத்து தன் தந்தையை அழைத்து வந்து சோஃபாவில் அடிபட்டுவிட்டதைச் சொன்னது. உடனே தந்தை விஜயகாந்த் ஸ்டைலில் சோஃபாவை ஓங்கி உதைத்தார். "பேட் சோஃபாவை நல்லா உதைக்கணும்" என்று சொல்லியபடி மேலும் மேலும் உதைத்து 'டிஷ்யூம் டிஷ்யூம்' என்ற சத்தத்துடன் நாலைந்து குத்துக்களும் விட்டார். அந்தக் குழந்தைக்கு அப்படியொரு சந்தோஷம். கைகொட்டி சிரித்துவிட்டுத் தானும் சோஃபாவை உதைக்கவும் குத்தவும் ஆரம்பித்தது.

இது போன்ற காட்சிகள் நம் குடும்பங்களில் சகஜமானதுதான் என்றாலும் எனக்கு பெரிய உறுத்தலாய் இருந்தது. குழந்தை பெரியவர்கள் வாயிலாய் உலகைத் தெரிந்து கொள்ளும் பருவம் இது. இது போன்ற நிகழ்வுகளிலிருந்து என்ன கற்றுக் கொள்ளும் என்று எண்ணிப் பார்த்தேன். 'தெரிந்தோ தெரியாமலோ தனக்குத்தீங்கு செய்பவர்களைத் தண்டிக்கவேண்டும்' என்றும் 'ஒரு முறை அடித்தால் ஒன்பது முறை திருப்பி அடிக்கவேண்டும்' என்றும்தான் அந்தப் பிஞ்சு மனதில் பதிந்திருக்கும் என என் சிற்றறிவுக்குப் பட்டது.

ஒரு சாதாரண சிறிய விபத்து அது. வாழ்க்கையில் விபத்துக்கள் சகஜம் என்று அந்தக் குழந்தைக்கு இப்போதே புரிய வைத்தால் அவன் வளர்ந்ததும் வாழ்க்கையை சரியான கோணத்தில் பார்க்க உதவியாக இருக்குமல்லவா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பூஞ்சிட்டு சிறுவர் இதழ் பதிவிறக்கம்

Your Ad Here

அருணா ஸ்றீனிவாசனின் சிறுவர் இதழ் குறித்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு தருவது பூஞ்சிட்டு சிறுவர் இதழைப் பதிவிறக்கம் செய்ய பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். (பூஞ்சிட்டு தமிழ், ஆங்கில படைப்புகளை உள்ளடக்கி இருக்கிறது)

பின்னூட்டம் இங்கே:

அருணா,
2004 - ஏப்ப்ரல் மாதம் எனக்கு தனிப்பட்ட வகையில் அன்லிமிடட் என்கிற தொண்டு நிறுவனத்திடமிருந்து தமிழ் குழந்தைகளுக்காகு 5 மாதாந்திர செய்தி மடல்கள் தயாரிக்க நிதியுதவி கிடைத்தது. அந்த உதவியோடும் நிலாக்குழுவின் உதவியோடும் செய்திமடலுக்குப் பதிலாக பூஞ்சிட்டு என்ற 5 சிறுவர் இதழ்கள் தயாரித்தோம். அவற்றை நிலாச்சாரலில் வலையேற்றமும் செய்தோம். இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

http://www.nilacharal.com/download/index.html

மிக நல்ல வரவேற்பு. உலகின் பல பாகங்களிலிருந்தும் குழந்தைகள் எழுதினார்கள். இரு சிறுமிகள் ஆசிரியர் குழுவிலும் இருந்தார்கள்நிதியுதவி செய்த நிறுவனம் இதழின் தரத்தைப் பாராட்டி மேலும் ஒரு வருடத்துக்கு நிதியுதவி அளிக்க முன் வந்தது. ஆனால் எனக்கு முழு நேரப் பணியோடு சேர்த்து தனியாக அச்சுக்கும் விநியோகத்திற்கும் ஓடிக் கொண்டிருக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அப்போது சரியான உதவி கிடைக்கவில்லை. அதனால் என்னால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியமல் போஇவிட்டது.


இப்போதும் ஏதேனும் தமிழ் அமைப்புகள் முன்வந்தால் நிதி உதவி வாங்குவதும் விநியோகிப்பதும் வெகு சுலபம். நானும் தொடர்ந்து கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.இப்போதைக்கு நிலாச்சாரலில் சிறுவர் பகுதி மூலம் இளம் படைப்பளிகளை ஊக்குவித்து வருகிறோம்:
http://www.nilacharal.com/poonchittu/poonchittu_index.html

ஆறு வயதுக் குழந்தைகூட கதை எழுதியிருக்கிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, January 05, 2006

சுயம்

Your Ad Here

என்னுடைய சிறுகதைகள் தொடர்ந்து பாக்யாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கதை பிரசுரமாகிறதா இல்லையா என்பது உடனுக்குடன் தெரிந்துவிடுகிற வசதி உண்டு பாக்யாவில். கல்லூரி படிக்கும் போது நான் எழுதிய முதல் கதை விகடனில் பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளை என்றைக்கும் மறக்க முடியாது. வார வாரம் விகடனில் கதையைத் தேடி ஏமாந்து தமிழ் மன்ற நண்பர்களின் விசாரிப்புகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் வழிந்து பின் 8 மாதங்கள் கழித்து வெளியான பொது அதன் சுவை மட்டுப்பட்டுவிட்டது. பின் ஏனோ விகடனுக்கு அனுப்பவே தோன்றவில்லை.
கல்கிக்கு மின்னஞ்சலில் அனுப்பினாலும் தபாலில் அனுப்பினாலும் கிணற்றில் போட்ட கல் போல ஒரு பதிலும் கிடைப்பதில்லை. அதனால்தான் வசதியாக நிலாச்சாரலிலும் அவ்வப்போது திசைகளிலும் மட்டும் எழுதி வந்தேன்.

நேரப் பற்றாக்குறை காரணமாக என்னால் கணிசமாக எழுத முடிவதில்லை. அவசரமாய் எழுதுவதில் சில சமயம் தரம் சறுக்கிவிடுவது எனக்கே புரிகிறது. இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.கற்றுக் கொள்ள இன்னும் நிறைய நேரம் வேண்டும். அதோடு விலகி நின்று பார்த்து குறைகளைச் சுட்டிக்காட்டி விமரிசனம் பண்ணும் நண்பர்களும் வேண்டும்.

சுயம் என்ற கதைக்கு முற்றிலும் எதிர்மாறான விமரிசனங்கள் வந்தன. இது இங்கே:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_193.html

படித்துவிட்டுக் கருத்துச் சொன்னல் மகிழ்வேன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, January 02, 2006

ஒளிபடைத்த கண்ணினாய்

Your Ad Here

குழந்தைகளுடன் பணி புரியும் அனுபவம் இனிமையானது மட்டுமல்ல பல சமயங்களில் இஸ்பையரிங் ஆகவும் எனக்கு அமைந்திருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக படம்பிடித்த விளம்பரம்தான் சிறுவர்களுடனான எனது முதல் அனுபவம். அவர்களை அவர்களாகவே படம் பிடித்தாலே போதும் அருமையாக நிகழ்ச்சி அமைந்துவிடும் என்பது அதில் நான் செய்து பார்த்து கற்றுக் கொண்ட பாடம். ஒரு நிமிட விளம்பரத்துக்காக 5 மணி நேரம் படம்பிடித்தோம். ஆவலாக அந்தக் குழந்தைகள் தந்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. 3 மணி நேரம் எடிட் செய்து அவர்களுக்குப் போட்டுக் காட்டியபோது அவர்கள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைப் பார்க்கவேண்டுமே! எத்தனை முறை தொலைக்காட்சியில் அது வந்தாலும் ஓடிச் சென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் என பெற்றோர் சொன்னார்கள். முதல் ஒளிபரப்புக்குப் பின் நாங்கள் செய்த சிறு மாற்றங்களைக் கூட கண்டுபிடித்து தொலைபேசி என்னிடம் காரணம் கேட்டார்கள்.

பின்பு நிறப்பிரிகை என்ற என் குறும்படத்துக்காக இரு அருமையான குழந்தைகளுடன் பணியாற்றினேன். அற்புதமாய் நடித்துக் கொடுத்தார்கள்.


பூஞ்சிட்டு சிறுவர் இதழ் வெளியிட்ட போது ஆசிரியர் குழுவிலிருந்த இரு சிறுமியரின் வேகமும் துடிப்பும் எனக்கு உந்துதல் தந்திருக்கின்றன. பூஞ்சிட்டு இதழின் முதல் அட்டைப் படத்தை வடிவமைத்த பெண்ணின் திறமை கண்டு பூரித்திருக்கிறேன்.

பின்பு நிலாச்சாரலில் குழந்தைகள் சிறப்பிதழ் வெளியிட்டபோது குட்டிப் படைப்பாளிகள் காட்டிய ஈடுபாடு என்னை வாயடைக்க வைத்துவிட்டது.
6 வயதில் கதை எழுதுகிற குழந்தையைப் பார்த்து மலைத்துப் போகிறேன். அதற்கேற்ற ஒரு படமும் அது வரைந்து அனுப்பியபோது மனது வெகுவாய்ப் பெருமிதப்பட்டது. அவை இங்கே:

http://www.nilacharal.com/poonchittu/children_stories/children_story_234a.asp


இந்தக்காலக் குழந்தைகள் எவ்வளவு புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள் என்று இந்த அனுபவங்கள் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியிருக்கின்றன


சென்றவாரம் நிலாச்சாரலில் வெளியான வண்ணங்கள் பலவிதம் என்ற என் சிறுவர் கதையில் வரும் சிறுவன் சச்சினின் புத்திசாலித்தனம் அந்த அனுபவத்தின் வெளிப்பாடே. அந்தக் கதை இங்கே:

http://www.nilacharal.com/poonchittu/children_stories/children_story_240.asp

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, January 01, 2006

உள்ளொளி (சிறுகதை)

Your Ad Here

நன்றி: திசைகள் மற்றும் பாக்யா

சுகுமார் உலக சுற்றுப் பயணத்துக்கு எல்லாவிதத்திலும் தயாராகிக் கொண்டிருந்தான். அவனது பொறுப்புகளை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டுப் போவது எளிதில்லைதான். ஆனாலும் இந்தப் பயணம் அவசியம். இந்தப் பயணத்திலாவது அவனது தேடலுக்கு விடை கிடைக்குமா எனத் தெரியவில்லை.

சுகுமாரைக் கடந்த சில மாதங்களாய் இனம்புரியாத ஒன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தான் என்று ்குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் அவன் ஆன்மா ஏதோ ஒன்றை எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறது.

38 வயதில் அவனது வாழ்க்கை நிறைவாக இருப்பதாகத்தான் எல்லோரும் எண்ணுவார்கள். லாபகரமான பிஸினஸ், அழகான அளவான குடும்பம், தமிழக இளைஞர்கள் அவனை ரோல் மாடலாகக் கருதும் அளவு புகழ்.. என்ன இல்லை?

ஆனாலும் அவன் ஆன்மா மூச்சிறைக்க ஓடி ஓடி எதையோ தேடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் ஒற்றை ஆளாய் எவ்வளவோ சாதித்தாயிற்று. ஆனால் இந்த ஆத்ம சந்தோஷத்தை அடைவது மட்டும் ஏனிவ்வளவு சிரமமாய் இருக்கிறது என அவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படியே உழன்று கொண்டிருந்தபோது உதித்ததுதான் அந்த யோசனை. ‘பேசாமல் ஒரு நாலைந்து மாதம் தனியாக உலகத்தை வலம் வந்தாலென்ன? இமயமலையில் ஆன்மீகத்தையும் ஐரோப்பாவில் அமைதியையும் ஆப்பிரிக்காவில் அட்வென்சரையும் முயற்சித்தாலென்ன? இதில் எதிலாவது அந்த ஆத்ம சந்தோஷம் கிடைக்கலாமே!’

மனைவி மஞ்சுவிடம் தனது முடிவை ஒரு தகவலாகத்தான் சொன்னான். அவனைப் பொறுத்தவரை அவள் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குடும்பத்துக்காகத்தானே தினம் 12 மணி நேரம் உழைக்கிறான்! இந்த பிரேக் தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் மிகவும் அவசியமான பரிசு என்பது அவன் எண்ணம்.

பயணத்துக்கு இரு வாரங்களிருக்கும் போது தொடர்ந்து உடம்பு வலியாக இருக்க, மருத்துவமனைக்குச் சென்று செக்கப் செய்து கொண்டபோது வந்ததுதான் பிரச்சனை. ரத்தத்தில் வைரல் அட்டாக் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள். கண்டிப்பாக ஒரு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.

சுகுமாருக்கு வீட்டில் வெறுமனே படுத்துக் கொண்டிருப்பது வெறுப்பாக இருக்கிறது. சுறுசுறுப்பாக ஆடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தவனை இப்படி தலையில் தட்டி வீட்டில் உட்கார வைத்துவிட்டதே விதி என்று விரக்தியாக இருந்தது. ஆரம்பத்தில் சும்மா இருப்பது மிகப்பெரிய வேதனையாக இருந்தது. அடிக்ட் ஆனவன் போல கை காலெல்லாம் நடுங்கிற்று. மூச்சு விட சிரமமாயிருந்தது. மனசு பரபரவென்றிருந்தது. இப்போது கொஞ்சம் பழகிவிட்டது. ஆனாலும் அவனை ஆக்கிரமித்திருந்த மாயத் தேடலுடன் வாழ்க்கையின் நிச்சயமின்மையும் இயலாமையும் சேர்ந்து அவனை மனதளவில் மேலும் பலவீனப்படுத்தி இருந்தன.

இயலாமையின் வெளிப்பாடாக கோபம் குமுறிக் கொண்டு வந்தது. எல்லோர் மேலும் எல்லாவற்றிற்கும் எரிச்சல் மண்டிற்று.

தரையின் மெல்லிய அதிர்வில் கண் திறந்தான். மஞ்சு நின்று கொண்டிருந்தாள். "ஒரு வாரமா ரூம்லயே இருக்கீங்க. தோட்டத்துக்கு வந்து உக்கார்றீங்களா?" ஆதரவாய்க் கேட்டாள்.

"அங்கே வந்த எல்லாம் சரியாயிடுமா?" என்றான் கடுப்போடு.

மஞ்சு விடாப்பிடியாக, "வெளில நல்லா ஜிலுஜிலுன்னு காத்து வருது. உங்கம்மாவும் இப்ப வர்றதா ·போன் பண்ணினாங்க. எல்லாருமா தோட்டத்தில உக்காந்திருக்கலாமேன்னுதான் சொல்றேன்"

சுகுமார் வேண்டா வெறுப்பாக எழுந்து நடந்தான். தோட்டதில் வண்ணக் குடைக்கடியில் நாற்காலிகள் பதவிசாய் அடுக்கப்பட்டிருந்தன. காட்டு மல்லி மணம் கும்மென்று தூக்கிற்று. வித்தியாசமாய் பல வண்ணங்களில் பூக்கள் கண்ணில் பட்டன.

டீ எடுத்து வருவதாய்ச் சொல்லிப் போனாள் மஞ்சு. வானத்தை அண்ணாந்து பார்த்தான் சுகுமார். நீர்க்குவியலாய் மேகங்கள் - விதவிதமான வடிவங்களில். ஏதோ முதல் முறை மேகத்தைப் பார்த்தாற் போலிருந்தது சுகுமாருக்கு. காற்றில் மண்மணம் மிதந்து வந்தது. அருகில் எங்கோ மழை பெய்கிறது போலும். காற்றை ஆழமாய் உள்ளிழுத்த போது மண் வாசனையும் காட்டு மல்லியின் சுகந்தமும் ஒன்றாய் இழைந்து உட்சென்று அவனுக்குள்ளிருந்த கோபத்தை சற்று மட்டுப் படுத்தினாற்போலிருந்தது.

“அம்மா எங்கேப்பா?" எட்டு வயது மகள் ஸ்ருதி கையில் ஏதோ நோட்டுப் புத்தகத்தோடு நின்றிருந்தாள்.

"கிச்சன்ல இருப்பாங்கடா. என்ன வேணும்?"

"அம்மாகிட்ட நான் வரைஞ்ச பார்பியைக் காட்டணும்."

"ஏன் அப்பாகிட்ட காட்டமாட்டியா?"

"நீங்க பாப்பீங்களாப்பா?" சந்தேகத்தோடு கேட்டாள் மகள்.

அந்த விநோதமான கேள்வியை ரசித்துப் புன்னகைத்து நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தான்.

"அட, இவ்வளவு இவ்வளவு அழகா வரையத் தெரியுமா உனக்கு?" என்றான் சுகுமார் அதிசயித்து.

"ஓ. ப்ரைஸ் கூட வாங்கிருக்கேன்பா. நான் நல்லா பாட்டு கூட பாடுவேன், தெரியுமா?"

"வெரி குட்" என்ற சுகுமார் தன் குழந்தையைப் பற்றித் தனக்கு இன்னும் என்னென்ன தெரியவில்லையோ என்று எண்ணிக் கொண்டான்.

"பாடட்டாப்பா?" ஸ்ருதியின் கண்களில் மின்னிய ஆர்வத்தைக் கவனித்தான், தன்னைப் போல்தான் இருக்கிறாள் என்று பெருமையாய் இருந்தது.

"பாடு கண்ணு" என்றான்.

"இருங்கப்பா. மேட் எடுத்துட்டு வர்றேன்" என்றாள்

"பக்க வாத்தியம் கூட வேணும்னு கேட்ப போலிருக்கு" என்று சிரித்தான் சுகுமார்.

ஒரு விநாடி நின்று அவனை உற்றுப் பார்த்து, "அப்பா, நீங்க சிரிச்சா கன்னத்தில அழகா குழி விழுது" என்றாள் அவன் கன்னத்தைக் கிள்ளி.

சுகுமாருக்கு அடிமனதிலிருந்து சிரிப்பு எழுந்தது. அவளை இழுத்தணைத்துக் கொள்ள விழைந்தபோது வழுக்கிக் கொண்டு பாய் எடுக்க உள்ளே ஓடிப்போனாள்.
'என்னமாய் வளர்ந்துவிட்டது இந்தப் பிள்ளை! பார்த்துக் கொண்டிருந்தாலே கண்ணும் மனசும் நிறைகிறது. ரசிக்க ரசிக்கப் பேசுகிறது. அது இருக்கிற இடத்தையே தன் பிரசன்னத்தால் நிறைக்கிறதே!'

அவனுக்கு அந்த அனுபவம் வித்தியாசமாய் இருந்தது. முக்கால்வாசி நேரம் அலுவலகம், கொஞ்சம் நேரம் கிடைத்தால் கிளப் என்று சுற்றித் திரிவதில் தனது வீட்டுத் தோட்டமும் பிள்ளையும் கூட அந்நியமாய்த் தெரிவது வினோதமாக இருந்தது. மழை மெலிதாய்த் தூற ஆரம்பித்தது. இந்த சுகானுபவம் கலைந்து போய்விடுமோ என்று சுகுமார் ஏமாற்றத்தோடு நினைத்துக் கொண்டிருக்கையில், மஞ்சு கையில் தட்டோடு வந்தாள்.

தட்டிலிருந்த பஜ்ஜி கமகமத்தது. காற்றில் சில்லிப்பும் சுகந்தமும் அதிகரித்திருந்தன. ஆழமாய் மூச்சை இழுத்து விட்டபோது பிரபஞ்சத்தின் சக்தி தன்னுள் நிரம்புவதாய் உணர்ந்தான் சுகுமார்.

"இந்தாங்க" என்று மஞ்சு டீ கோப்பையை நீட்டினாள். டீயின் சுவை தன் பால்ய நினைவுகளைக் கிளப்பவே, "அம்மா போட்டதா?" என்றான்.

"ம்ம்.. பரவாயில்லையே. கண்டு பிடிச்சுட்டீங்களே. உங்கம்மா இஞ்சி, ஏலக்காயோடா அன்பையும் கலந்திருக்காங்களா, என்ன?" சிரித்தபடியே கேட்டாள் மஞ்சு.

அவளே தொடர்ந்து, "அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஏதோ கஷாயம் போட்டுக்கிட்டிருக்காங்க. இப்ப வருவாங்க" என்றாள்.

ஸ்ருதி பாயை அவன் காலடியில் விரித்து வாகாய் அமர்ந்துகொண்டாள்.
தொடையில் தாளமிட்டபடியே, "மகா கணபதிம்..." என்று அவள் கணீர்க் குரலில் பாட ஆரம்பித்ததும் சுகுமாருக்கு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடிற்று. தூறல் பலமாகி குடையில் மிருதங்கம் வாசித்தது. ஸ்ருதியின் ஜிமிக்கி அவள் குண்டுக் கன்னத்தில் நர்த்தனமாடியதை வெகுவாய் ரசித்தான் சுகுமார். மஞ்சுவும் மெல்லிய குரலில் ஸ்ருதியோடு பாடலில் இணைந்து கொள்ள, அந்த சூழல் அவனைத் தன்னுள் அமிழ்த்துக் கொண்டது. கண்கள் தானாக மூடிக் கொள்ள உலகை மறந்து லயித்திருந்தான் சுகுமார்.

கண்களை லேசாய்த் திறந்த போது ஒற்றைக் குடையில் குறுகிக் குழைந்து அப்பாவும் அம்மாவும் அவர்களை நோக்கி வந்தது ஹைக்கூவாய்த் தெரிந்தது. அவர்களுக்கு மேலே வானவில் ஒன்று பிரகாசமாய் ஒளிர்ந்தது.

மழை இரைச்சலையும் சங்கீதச் சாரலையும் மீறிய ஒரு பேரமைதி தன்னை ஆக்கிரமித்தாற்போலிருந்தது சுகுமாருக்கு. உள்ளுக்குள் உற்று நோக்கினான். அவன் ஆத்மா பெரிதாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தது.

உலகமெலாம் தான் தேடவிருந்த இந்த மாயமான் அவன் வீட்டுத் தோட்டத்தில் கிட்டுமென்று அவன் நினைத்திருக்கவில்லை

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.