.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, March 28, 2006

TOP FACTS ABOUT ENGINEERS

Your Ad Here

Engineers at work:
Assignments solved by one and then carry out mass transfer operations
throughout the class

***

The most important machine for Engineers:
Xerox Machine (Without which assignment Completion couldn't be
possible)

****
Top two Engineering Rumours:
! Did you hear the results are being put up today at 5:30pm'
'Did you hear the exams are postponed by two weeks

****
The most dreaded acronym for Engineers: ATKT ( After Trying Keep
Trying)

****
Common Engineering Dialogues after a paper:
'What is this pal, 60% of the paper was out of the syllabus' 'This was
the worst paper set in the entire
engineering history' 'I am failing'

****

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, March 27, 2006

விருட்சம்

Your Ad Here

இலண்டனில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஒரு 19 வயது தீவிரவாதியின் தாய், தாக்குதல் நடந்த சில தினங்களுக்குப் பின் அடையாளங்களை மறைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் ஒரு அறிக்கை வாசித்தார். அதில், அவருக்குத் தன் மகனின் செயல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் இறந்த மகனுக்காக அல்லாமல் உயிரிழந்த அப்பாவிகளுக்காகவே முதலில் தான் துக்கம் அனுஷ்டிக்கப்போவதாக அவர் கண்ணீரோடு கூறியது என்னை மிகவும் நெகிழவைத்தது. உண்மையான தாயுள்ளத்துக்கு அனைத்து உயிர்களும் ஒன்றுதான் போலும் என்று என்னை எண்ண வைத்தது அந்த நிகழ்வு.

அதன் அடிப்படையில் எழுதிய விருட்சம் சிறுகதை இங்கே:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_250a.asp

படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பதிந்து விட்டுப் போனால் மகிழ்வேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, March 21, 2006

மாணவர்களின் படைப்புத்திறன் (1)

Your Ad Here

இந்த நகைச்சுவைத் துணுக்குகளை அவருக்கு யாரோ அனுப்பியதாக ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். இஞ்சினியரிங் மாணவர்கள் எவ்வளவு படைப்புத் திறனோடு இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதோடு நம்மை சிரிக்கவும் வைக்கின்றன:


Interviewer: Why is a thicker conductor necessary
to carry a current in A.C.as compared to D.C. ?
Candidate: An AC current goes up and down
(drawing a sinusoid) and requires more space inside the
wire, so the wire has to be thicker.



***

Interviewer: How will you tell if that wall
outlet carries AC or DC?
Candidate: I will put my finger in. If it is
pushed away, it is AC. If it gets stuck, it was DC.

***

Interviewer: How will you reverse direction of an
Induction motor?
Candidate: I will remove the four bolts at the
x-ud, turn the motor around, and put back the bolts.

***

Interviewer: How do y! ou start a synchronous
mo! tor?
Candidate: Vrrrrrrrmmmmmmmmmmmmmmmmmmm (in rising pitch)
Interviewer: Stop! Stop!
Candidate: rrrrrrrmmmmmmmmmmmmmmmmmmmm (in falling pitch)

***


Interviewer: How do you limit surge current within an integrated
circuit?
Candidate: By using a miniature circuit breaker.

***

External (to student) : "Why does a capacitor block DC but allow
AC To pass through ?
Student: See, a capacitor is like this --- --- ,
OK. DC comes straight, like this ----------,
and the capacitor stops it. But AC,goes UP, DOWN, UP DOWN and
jumps right over thecapacitor!"

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை

Your Ad Here

பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை. பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை' என்பது போன்ற ஒரு வசனம் பைபிளில் உண்டு. எனக்குப் பறவைகளைக் காணும்போதெல்லாம் இதுதான் தோன்றும். என்னைப் பொறுத்தவரை பறவை என்பது சுதந்திரத்தின் அடையாளம். இறக்கைகளை விரித்தபடி மனம் போன போக்கில் காற்றில் மிதப்பதைப் போல சுகம் என்ன இருக்கும். ஏதேனும் ஒரு பிறவியிலாவது பறவையாய்ப் பிறக்க வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு. (ஆனா கோழியா மட்டும் பிறந்திடக்கூடாதுப்பா... விதவிதமா சமைச்சிருவாங்கல்ல :-))

என் பறவைக்காதல் எபோது ஆரம்பித்தது என்று நினைவில்லை. சிறுவயதில் வீட்டில் கூடு கட்டும் சிட்டுக் குருவி தத்தித் தத்தி குப்பையைக் கிளறுவதைப் பார்த்து பரிதாபப்பட்டு அரிசி மணி கொடுத்து அது கொத்திக் கொண்டு போவதை ஆசையாய்ப் பார்த்திருக்கிறேன். பம்பு செட்டில் மறைந்து கொண்டு மைனா தன் குஞ்சுக்கு இறை ஊட்டுவதைக் காண தவமிருந்த காலங்கள் உண்டு. எவ்வளவு நேரமானாலும் கிணற்றுப் பக்கவாட்டுச் சுவரிலுள்ள கூட்டிலிருக்கும் மைனாக் குஞ்சுகள் தம் ஆரஞ்சு நிற வாயைத் திறந்து தன் தாயிடம் இரை வாங்கிக் கொள்வதை.... மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 16, 2006

பாஸ்டன் பாலாவுக்கு பதில்

Your Ad Here

நான் விளையாட்டாக நினைத்த நட்சத்திரப் பேட்டிக்காக பாஸ்டன் பாலா அவர்கள் தேர்ந்த பத்திரிகையாளரைப் போல கேட்டிருந்த முத்தான கேள்விகளுக்குத் தனிப்பதிவாக பதில் சொல்வது சரியாக இருக்கும் என எண்ணியதால் இந்தப் பதிவு. தாமதத்திற்கு சாக்கு சொல்வது வீண் வேலை என்பதால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நேராக கேள்விகளுக்குச் செல்கிறேன்:


1. தமிழ் இணையத்தின் தவறவிடக் கூடாத வலையகமாக நிலாச்சாரல் உள்ளது. நிலாச்சாரலின் அடுத்த கட்டமாக என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி, பாலா. நிலாச்சாரலின் அடுத்த கட்டமாக நிலா புக்ஸ் என்ற அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மின் நூல்களையும் பின் அச்சு நூல்களையும் வெளியிட ஆவல். முதல் கட்டமாக 3 மின் நூல்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறோம். இன்னும் 5 நூல்களுக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எளிய துவக்கம் என்றாலும் அதன் பின் பெரிய கனவு இருக்கிறது. சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

2. வெப்2.0 கரைபுரண்டோடும் காலம் இது. தமிழ் தொழில் நுட்பங்கள் பிறமொழித் தளங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

தொழில் நுட்ப வளர்ச்சியால் பார்வையாளரை வசத்தப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. அதே சமயம் வலையகங்கள் பயன்படுத்த எளிமையாக இருத்தல் அவசியம்(உதாரணத்துக்கு எழுத்துரு பதிவிறக்கத்தை தேவையற்றதாக்குவது). அதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியை பயன்படுத்திக் கொள்வது நலம்

வாசகர்களை தக்கவைத்துக் கொள்வதை விடுத்து கணித் தமிழ் வளர்ச்சி குறித்து மட்டும் பார்த்தோமானால் நாம் பெருமைப்படும் விதத்தில் பல தன்னார்வத் தொண்டர்களும் நிறுவனங்களும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து கணித்தமிழை வளர்த்து வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.


3. மனத்திருப்திக்காக செயல்படும்போது விமரிசனங்களினாலும் பார்வையாளரைத் திருப்திப்படுத்தும் செய்கைகளும் கொள்கைகளை நீர்த்துப் போகவைக்கும் அபாயம் உள்ளது. தங்களின் சிந்தனை என்ன?

நல்ல கேள்வி. ஒருவருக்கு எதில் ஆன்ம திருப்தி என்பதைப் பொறுத்தே கொள்கைகள் நீர்த்துப் போவது அமைந்திருக்கிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டுமே மனதிருப்தி தருமானால் அங்கே கொள்கைகள் தாக்குப் பிடிப்பது கடினம்தான். அப்படியான சூழல் இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதற்கான காரணத்தை அடுத்த பதிலில் தந்திருக்கிறேன்.


4. லாபத்தில் இயங்கினால் மட்டுமே தமிழ் வலையகங்கள் நீண்டநாள் நீடிக்க முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது. Eyeballs, pageviews போன்றவை முக்கியமான அளவுகளாகக் கருதுகிறீர்களா? வருகையாளர்களில் எவ்வளவு பேர் ஜனரஞ்சகமும் காத்திரமும் சம அளவில் நிறைந்த நிலாச்சாரல் போன்ற தமிழ்த்தளத்திற்கு சந்தா கட்டிப் படிக்க முன் வரக் கூடும்? இலவசமாக சேவை நடத்துவதன் மூலமே பொருளாதார ரீதியில் தன்னிறைவு உடைய வலையகத்தைத் தொடர முடியுமா?

நிலாச்சாரலுக்கு முன்னும் பின்னும் ஆரம்பித்த எண்ணற்ற தமிழ் வலைத்தளங்கள் பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்டுவிட்டன. நிலாச்சாரலிலிருந்து வருவாய் தேவையில்லை என்ற எங்கள் நிலைப்பாடே நிலாச்சாரல் இன்னும் தொடர்வதற்குக் காரணம்.

இந்த தெளிவான நிலைப்பாடு காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டிய நெருக்கடி எங்களுக்கில்லை. அதனால் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவும் தேவை இருக்கவில்லை.

பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பார்வையிடும் பக்கங்களின் விபரமும் நிலாச்சாரலின் ரீச் பற்றி அறிய பயன்படுமாதலால் விபரங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவை பெருக வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு எதுவும் செய்ததில்லை. உண்மையாகவே இதுவரை நிலாச்சாரலுக்கென்று எங்கும் எந்தக் கட்டண விளம்பரமும் நாங்கள் தந்ததில்லை. நிலாச்சாரலில் விளம்பரம் செய்யுங்கள் என்று யாரிடமும் போய் கேட்டதில்லை. Organic growth என்று சொல்வார்களல்லவா - அப்படித்தான் நிலாச்சாரலின் வளர்ச்சி இயற்கையாகவே அமைந்தது. வாய்மொழி விளம்பரம் தந்த அனைத்து வாசகர்களுக்கும்தான் நன்றி சென்றடையும்

ஆனால் எத்தனைதான் இருந்தாலும் சந்தா கட்டி படிக்க வாசகர்கள் பெருமளவில் முன்வருவார்களா என்பது சந்தேகமே. பெரிய பெரிய பத்திரிகைகளெல்லாமே இந்த இணைய சந்தா விஷயத்தில் தடுமாற்றம் காண்பதாகத்தான் அறிகிறேன். ஆனாலும் சில வாசகர்கள் நிலாச்சாரல் இலவசம் என்பதை அறியாமல் சந்தா விபரங்கள் கேட்டு அஞ்சல் அனுப்பும்போது ஆச்சரியமாகவே இருக்கிறது.

எனினும் சந்தா என்ற Revenue model வழி செல்லாமல் பொருளாதாரத் தன்னிறைவுக்கு புதிது புதிதாகத் தோன்றும் மற்ற வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் நிலாஷாப். நிலா புக்ஸ் மூலம் மின் நூல்கள் விற்கும் திட்டமும் உள்ளது.

லாபத்தில் இயங்கினால் மட்டுமே தமிழ் வலையகங்கள் நீண்ட நாள் நீடிக்கமுடியும் என்ற கருத்தை என்னால் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருவாயில்லாமல்/ வருவாயை எண்ணாமல் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றனவே? ஒருமித்த கருத்துடைய குழு அமையுமானால் பொருளாதார ரீதியில் தன்னிறைவு உடைய வலையகத்தைத் தொடர்வது சாத்தியமே.


5. நிலாச்சாரலில் தங்களை மிகவும் பாதித்த வாசகர் செய்கை/மறுமொழி எது?

ஒரு பிரபல இசையமைப்பாளரின் மகாரசிகரான மருத்துவர் ஒருவர், ஒரு இசை விமரிசனம் அனுப்பியிருந்தார். அது நடுநிலையாக இல்லாதது போல் தோன்றவே அதைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து மடல் அனுப்பியிருந்தேன். அவருக்கு வந்ததே கோபம்! என்னைத் தனிப்பட்ட விதத்தில் மிகவும் கடுமையாக விமரிசித்து பதில் அனுப்பியிருந்தார். என்னைப் பற்றி முன்பின் தெரியாமல் அத்தகைய கடும் சொற்களை அவர் வீசியது என்னைச் சற்றுப் புண்படுத்தியது.

பொதுவாகவே படைப்பாளிகள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாதலால் நான் இது போன்ற எதிர்வினைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால் இவ்வளவு படித்த, பொறுப்பான பணியிலிருக்கும் மனிதர் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவாரே ஆனால், அவரது நோயாளிகளின் நிலைமை குறித்த கவலை எனக்குப் பெரிதாக எழுந்தது :-)


***
பாலா, பதில்களில் ஏதேனும் கேள்விகளிருந்தால் தயங்காமல் கேளுங்கள்

கேள்விகளைத் தந்து என்னை சிந்திக்கச் செய்த அனைவருக்கும் நன்றி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, March 05, 2006

பொயிட்டு வாறேன்... நல்லா இருங்க சாமி...

Your Ad Here

மேடையிலிருந்து இறங்கும் நேரம் வந்தாகிவிட்டது. முள்கிரீடமாக இருக்குமென்றெண்ணியிருந்ததை மலர்க் கிரீடமாக ஆக்கித் தந்த பெருமை உங்கள்
ஒவ்வொருவருக்குமுண்டு. ஒரு வாரம் ஓடியது தெரியாமல் காலம் கரைந்துபோனது. ஒரு வாரத்தில் எவ்வளவோ மாற்றங்கள்! எத்தனையோ பரிமாற்றங்கள்!

நட்சத்திர வாரத்தின் வெற்றி எத்தனை பதிவு போட்டிருக்கிறோம் என்பதிலோ அல்லது பின்னூட்டப் புள்ளி விபரங்களிலோ இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. யார் யாரை விஞ்சி நின்றார்கள் என்று கணக்குப் போடுவதற்கு இது வியாபாரமில்லை. அதனால்தான் நான் என் பதிவுகளின் எண்ணிக்கையையோ அல்லது பின்னூட்ட விபரங்களையோ இங்கு தரவில்லை.

வெற்றி தோல்வி என்றெல்லாம் கவலைப் படாமல் எனக்கும் உங்களுக்கும் இந்த வாரம் எவ்வளவு நிறைவாக இருந்தது என்று பார்ப்பதில்தான் பயன் இருக்கிறது.
இந்த வாரத்தை ஒரு பல்சுவை வாரமாக நான் கொண்டு சென்ற திருப்தி எனக்கிருக்கிறது. விளையாட்டு, ஆன்மீகம், குறும்படம், சிறுகதை, சமூக சிந்தனை, வாழ்க்கைப் பதிவு, நட்சத்திரப் பேட்டி (!!!) என்று ஒரு வெரைடி கொடுத்தது எனக்கு நிறைவாகத்தானிருக்கிறது.

உங்களில் சிலர் என்ன கூறி இருக்கிறீர்கள் என்பதை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

//உங்கள் நட்சத்திர வார சிறப்பு போட்டிகள் மூலம் சோம்பிக் கிடந்த தமிழ்மணத்தை புத்துயிர் பெறச் செய்துள்ளீர்கள். - மணியன்//

//சாதாரணமாக நட்சத்திரங்கள் கவனிக்கப் படுவார்கள். இதில் நீங்கள் நட்சத்திரமாகி போட்டியில் கலந்து கொண்ட எங்களையும் எல்லாரும் கவனிக்க

வைத்துவிட்டீர்கள். - குமரன்//

//அடடா.. இந்த கேம் ஷோ மூலமா என்னோட பேரு பிரபலமாயிருச்சி போலருக்கு..- டி.பி.ஆர்.ஜோசப்//

//மிகப்பெரிய ஞானிகளின் அருள் வாக்குகளிலிருந்தும் வறட்சியான போதனைகளிலிருந்தும் மனிதனுக்கு கிடைக்கும் நம்பிக்கையை விட இது போன்ற ஜீவனுள்ள கதைகள் மனதுக்குள் விதைக்கும் நம்பிக்கைகள் அழுத்தமானவை. படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்கி சிறப்படைந்தது. - பாரதி//

//நல்ல கருத்து, எளிமையான அதேநேரம் அருமையான காட்சியாக்கம். டைட்டில், சப்-டைட்டில், தேவையான இசை, ஒளிப்பதிவு என்று ஒரு நல்லதொரு முழுக் குறும்படமாகவே வந்துள்ளது. ....உங்கள் பன்முக ஆர்வமும், திறமையும் ஆச்சரியமூட்டுகிறது. தொடருங்கள் - அன்பு//

//இயல்பான, அடுத்தவர் மனம் புண்படாத வகையில் இடப்பட்ட பாங்கு என்னை மிகவும் கவர்கிறது. - ஞானவெட்டியான்//

//உங்களுக்கு எழுத்து, சிந்தனையும் நன்கு வசப்படுகிறது. நிலாச்சாரலை, 250 வாரம் கொண்டு சென்றதன் ரகசியம் இது! பாராட்டுக்கள். -அன்பு//

//அன்று இளவரசன் சித்தார்த்தனுக்கு தோண்றிய கேள்வி, காலங்காலமாக ரிஷிகளும், சித்தர்களும் பதில் தேடியலைந்த கேள்வி,ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வடிவத்தில் அதே பொருளைத்தேடிய கேள்விகள்,இதோ இப்போது வலைப்பதிவு உலகத்திலும் கேட்கப்படுகிறது!
எல்லாம் கிடைத்து விட்டால் என்ன செய்வாய்?நல்லாதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு! - Agent 8860336 ஞான்ஸ்//

//எண்ணிக்கையில் வளரும் பின்னூட்டங்களை விட எங்கோ ஓர் மூலையில் ஏதோ இருவரை சிந்திக்க வைக்கிறதே ! அதுதான் உங்கள் எழுத்தின் உண்மையான வெற்றி! நடந்து வந்த பாதையை தடம் தெரியாமல் அழிக்கும் உலகில் நன்றியோடு நடை பயின்ற நாற்றங்காலை உளமார தளிர் கரங்களால் தடவி பார்ப்பதில்தான் எத்துனை சுகங்கள்! - ஒரு அன்பரின் தனிமடல்//


இந்தப் பாராட்டுக்கள் மனதை நிறைத்தாலும் இவற்றைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வேனே தவிர தலையில் ஏறிக்கொள்ள அனுமதிக்க மாட்டேன்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் உங்கள் அனைவருக்குமே இருக்க வேண்டியதில்லை. எத்தகைய விமரிசனங்களாக இருந்தாலும், நான் முதல் பதிவில் சொன்னது போல் - 'தட்டினாலும் குட்டினாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்' - இன்னும் என்னைத் தட்டவோ குட்டவோ உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

டம்மிப் பதிவென்று போட்டும் கூட என்னை நட்சத்திரமாய் பாவித்து சிந்தனையைத் தூண்டும் பேட்டிக் கேள்விகள் கேட்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அடுத்த வாரம் ஒவ்வொரு கேள்விக்காய் நேரம் கிடைக்கையில் பதில் சொல்கிறேன்.

ஒரு சில நண்பர்கள் எனது ஒரு பதிவுக்கு 100க்கு மேல் பின்னூட்டம் வந்ததை சாதனையாகச் சொன்னார்கள். எனக்கு அதில் துளிகூட பெருமையில்லை. அதைவிட எனது 'சந்தோஷம் பொங்குதே' என்ற பதிவுக்கு வந்த பதினைந்தோ இருபதோ பின்னூட்டங்கள் முத்தானவை என்பதில்தான் எனக்குப் பெருமை.

விளையாட்டில் பரபரவென சுற்றித் திரிந்த நண்பர்களின் உற்சாகம், பூப்பறிக்க வருகிறோம் கேள்வி ஒன்றில் நான் செய்த பிழையை (அது விளையாட்டை எந்த விதத்திலும் பாதிக்காவிட்டாலும்) தனி மெயிலில் சுட்டிக் காட்டிய போட்டியாளரின் நாசூக்கு, சக படைப்பாளி என்ற பொறாமை இல்லாமல் உள்ளத்திலிருந்து பாராட்டிய எத்தனையோ அன்பர்களின் பெருந்தன்மை, தனி மெயிலிலும் சாட்டிலும் விசேஷமாய்ப் பரிமாறிக் கொண்ட அன்பு என்று இந்த நட்சத்திர வாரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது... உள்ளம் நிறைந்திருக்கிறது. பெயர் சொல்லி உங்கள் ஒவ்வொருவரையும் விளித்து நன்றி சொல்ல ஆசைதான். நேரமில்லாமல் போனதற்காய் வருந்துகிறேன். மொத்தமாய் அனைவருக்கும் ஆழ்மனதின் அடியிலிருந்து கோடானு கோடி நன்றிகள்!

(கியர் சேஞ்ச் இங்கே)

'எப்பேர்ப்பட்ட புருஷன் உங்களுக்கு! நீங்க குடுத்துவச்சவங்க', 'எப்பிடி எப்பவும் சந்தோஷமா இருக்கீங்க?' - அப்பிடீன்னெல்லாம் தனி மெயில் வருது. நான் எழுதுறத வச்சு எங்க வீட்டுக்காரர் புனிதர்னோ, எங்களுக்கு வாழ்க்கையில குறையே இல்லைன்னோ எடுத்துக்கக் கூடாது. நாங்களும் அடிச்சுக்கிட்டிருக்கோம். எங்களுக்கும் குறை இருக்கு. ஆனா எங்க தப்புகள்லருந்து நெறையவே கத்துக்கிட்டிருக்கோம். இன்னும் கத்துக்கிறோம். வாழ்க்கை கடுமையான ஆசிரியரப்பா. பரீச்சைய நடத்திட்டுத்தான் பாடம் சொல்லிக் குடுக்கும். படிக்க நெறய இருக்கில்ல, நம்மளே எல்லாத் தப்பும் பண்ணிக் கத்துக்கிட எங்க நேரம்? அதனால அடுத்தவங்க பண்ற தப்புலருந்தும் நம்ம பாடம் கத்துக்கிடணும் (நம்ம சரக்கில்ல. எங்கயோ படிச்சது).

பொதுவா நெறைய பேரு என்கிட்ட கேட்ட கேள்வி 'எப்படி உங்களுக்கு இவ்வளவு டைம் கிடைக்குது?' - வாழ்க்கையில எல்லார்க்கும் எல்லாம் கிடைக்காதுல்ல - எங்களுக்குப் பிறந்த ஒரே குழந்தை இறந்து போயிட்டான். ரொம்ப வேதனைதான். சோகம்தான். ஆனா கதாநாயகர் அடிக்கடி எங்கிட்ட சொல்வாரு 'குறைகளை வச்சு நிறைகளைச் செய்'ன்னு. அதத்தான் நான் இப்போ செய்ய முயற்சி செய்றேன். குழந்தை இல்லாதது குறைதான். ஆனா அந்தக் குறையினால கிடைக்கிற நேரத்தை இப்படி மனசுக்குப் பிடிச்ச ஏதாவது காரியத்தில செலவழிக்கிறேன். அவ்வளவுதான். நானொண்ணும் பெரிசா செஞ்சிடலை.

இதெல்லாம் நான் சொல்றதுக்குக் காரணம் உங்ககிட்ட வீசுற அனுதாப அலைல அடுத்த தேர்தல்ல ஓட்டு வாங்கணும்கறதுக்காக இல்லீங்க...:-)) வாழ்க்கைன்னா இப்படித்தான் - எல்லாருக்கும் எல்லாம் கிடைச்சிறாதுன்னு நம்ம அனுபவத்த சொல்லத்தான். மனசிருந்தா எல்லாருக்கும் நம்ம குறைகளை வச்சு நிறைகள் செய்ய வாய்ப்பிருக்குன்னு பகிர்ந்துக்கணும்னுதான்.

(அடுத்த கியர்)

நச்சத்திர வாரத்துக்குப் பொறகு சன்னப் பேரு காங்காமப் போயிர்றாகன்னு சனமெல்லாம் பேசிக்கிடத கேட்ருக்கேன். நானும் அப்பிடித்தேன் போலாம்னு ரோசனைல இருக்கேன். வேற ஒண்ணுமில்லைய்யா. நம்ம நெலாச்சாரல்ல எல்லாம் போட்டது போட்டபடி கெடக்கு. தெனைக்கும் புதுசா புதுசா எதுனாச்சும் கண்டுபிடிக்குறாய்ங்க. நம்ம இன்னும் ரெண்டு வருசம் பின்னால கெடக்கோம்னு நெஞ்சு அடிச்சிக்கிடுது. எந்திரிச்சு வெரசா ஓடணும்ல.

கொஞ்ச காலமா நம்ம கூட்டாளிக வேற கதை பொஸ்தவம் போடுன்னு சொல்லிக்கிட்டிருக்காக. நாந்தேன் நம்ம கதைய என்னத்த பொஸ்தவமா போடுததுன்னு கம்முன்னு கெடந்தேன். ஆனா இப்ப ரெண்டு நாளாத்தேன் நீங்கலாம் சொல்ததெ படிச்ச பொறகு ரோசனையா கெடக்கு... பாப்பம்... அப்படிப் பொஸ்தவம் போடுததார்ந்தா அத வேற பாக்கணுமுல்ல? பெரிய கத ஒண்ணு பாதி முடிச்சாக்ல கெடக்கு... அதயும் செத்த பாக்கணும்...

நெலாச்சாரல்லர்ந்து இ-பொஸ்தகம் போடுத வேலையும் கெடக்கு... அதேன் கொஞ்ச நா ஆளு காணாமப் போனாலும் பொயிருவேன்.

ஆனா சொல்ல முடியாதுய்யா... என்னமோ ஆடுன காலும் பாடுன வாயும்னு சொல்லுவாகளே அது போல ஆயிப்போனாலும் பொயிரும். எதுக்கும் இருக்கட்டும்னுதேன் சொல்லி வக்கேன்.

என்னமோய்யா, செவனேன்னு கெடந்த என்னிய மேடைல ஏத்தி உட்டு வேடிக்க பாத்துட்டீக. மேலுக்கு நின்னு பாத்த பொறவுதான்ய்யா இங்கிட்ருக்க சனம் எம்புட்டு நல்லவுகன்னு தெரியுது.

எறங்குத நேரம் வந்திருச்சுன்னு வெசனமொண்ணும் இல்ல சாமி. ஆனா இம்புட்டு பாசத்தையும் சொமந்துகிட்டு கீழ எறங்கும்போது என்னமோ கண்ண மறைக்காப்ல இருக்குய்யா...

பொயிட்டு வாறேன்... நல்லா இருங்க சாமி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** நட்சத்திர பேட்டி ***

Your Ad Here

நட்சத்திர வாரத்து ஸ்பெஷலா ஒரு நட்சத்திரப் பேட்டி செய்யலாம்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்லர்ந்து சண்டக்கோழி விஷால் வரைக்கும் ட்ரை பண்ணியாச்சு. ஒண்ணும் நடக்கல. அதினால என்ன, நம்மதான் இந்த வாரத்து ஸ்டார் ஆச்சே. அதனால நம்ம பேட்டியைப் போட்டா போச்சுன்னு முடிவு பண்ணினேன். நம்ம இன்டர்வ்யூவை நம்மளே பண்ணினா நல்லா இருக்காதுல்ல, அதான் நம்ம ரசிகக் கண்மணிகளாகிய (அடிக்க வராதீங்கப்பா:-) உங்கள்கிட்டேயே அந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்னு நினைக்கிறேன்.

இதில பல நன்மைகள் இருக்கு. நம்மைப் பற்றி சுயதம்பட்டம் அடிக்கிற வேலை மிச்சம். யாராருக்கு என்ன தெரியணுமோ கேட்டுத் தெரிஞ்சிக்கிடலாம்; பத்திரிகையாளராகணும்னு ஆசைப்பட்டவங்க ஆசையைப் பூர்த்தி செய்துக்கலாம்:-) அதோட நமக்கும் பேட்டி குடுத்த பழகினாப்ல இருக்கும்ல :-)))

இன்டர்வ்யூ பண்றது ஒண்ணும் லேசான விஷயம் இல்லீங்கப்பு. நல்ல கேள்விகள் கேட்கறதுக்கு ரிசர்ச் பண்ணணும். நல்ல பதில் கொண்டு வர்றதுக்கு சாமர்த்தியம் வேணும்; அதனால நல்ல கேள்வி கேட்கறவங்களுக்கு என் ஆட்டோகிராஃப் போட்ட புகைப்படம் ஒண்ணு அனுப்பிவைப்பேன் :-))) (ஓடீறாதீங்க. சும்மா சொன்னேன்).

அப்புறம்... சும்மா கன்னா பின்னான்னு பெர்சனலா கேள்வி கேட்டா போட மாட்டேன். கேலி, கிண்டல் எல்லாம் இருக்கலாம். ஆனா ஒரு அளவோட இருக்கணும். சரிதானே?

முதல் கேள்வி கேட்கிறவங்களுக்கு ஒரு பட்டம் வேணா குடுக்கலாம் :-)))

வருங்கால முதல்வரை பேட்டி காண்கிற அரிய வாய்ப்பை இழந்துடாதீங்க. (பின்னே, ஸ்டார் ஆகியாச்சு. அதுக்கடுத்த படி அதுதானே:-)))

Shoot your questions!

முக்கியமான பின்குறிப்பு:

இந்தப் பதிவை வார துவக்கத்திலயே போடறதா இருந்தேன். ஆனா பூப்பறிக்க பொறப்பட்டதுல நேரம் பறந்திருச்சி. இதிலயும் எறங்கிட்டோம்னா நிலாச்சாரலோட 250வது இதழைக் கோட்டை விட்ருவோம்னு நிறுத்திட்டேன்.... இப்போ இது சும்மா ஒரு டம்மி பதிவு. ஆனாலும் வருங்கால முதல்வரைப் பேட்டி கண்டே ஆவேன்னு நீங்க பிடிவாதம் பிடிச்சீங்கன்னா, நடத்துங்க உங்க ஆட்டைய. நேரம் கெடைக்கும்போது பதில் சொல்றேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, March 04, 2006

மந்திரச் சிற்பிகள் 3

Your Ad Here

முதல் 2 பாகத்தை படிக்க இங்கே போங்க:

http://nilaraj.blogspot.com/2006/03/1.html

http://nilaraj.blogspot.com/2006/03/2.html

இங்கதான் வாழ்க்கைல ஒரு திருப்புமுனை...

லண்டன் வந்த புதுசுல ஒரு தமிழ் இணையதளத்துக்கு வாலன்டியரா வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன். திருப்தியா இல்லை. நம்ம பதி ராஜு, 'நீயே ஒரு தமிழ் சைட்
ஆரம்பிச்சிறேன்'னார். அவருக்கென்னெ நெலாவைப் புடின்னு சொல்லிட்டுப் போயிருவாரு. ஆகிற காரியமான்னு பேசாம இருந்துட்டேன். ஆனா அவர் திரும்பத் திரும்ப என்னால முடியும்னு சொல்லிக்கிட்டே இருந்தார். எறும்பு ஊற ஊற கல்லே தேயுமாம், மனுஷி தேயமாட்டாளா?

இப்படி இணையம்கற சமுத்திரத்தில தள்ளிவிட்டுட்டு ஆள் எட்டி நின்னு வேடிக்கை பாக்கறது. நம்ம முழுகற மாதிரி தெரிஞ்சா ஓடி வந்து ஒரு கயித்தைப் போடறது, அப்பறம் திரும்ப ஒளிஞ்சிக்கிடறது. கயித்தப் பிடிச்சு கஷ்டப்பட்டு மேல வந்ததுக்கப்புறம் 'என்ன நீந்தறே நீ'ன்னு கடுமையா விமர்சனம் செய்யறது. முதல்ல ரொம்பக் கடுப்பா இருந்துச்சி 'இந்த ஆளு நம்மளத் தள்ளிவிட்டதுமில்லாம இப்படிக் கடிச்சு வேற குதறணுமா'ன்னு. நீந்த கத்துக்கறதுக்குள்ளா உசுரு போயில்ல வந்துச்சி. ஓரளவு நீந்தக் கத்துக்கிட்ட பெறகு பாத்தா நம்மள சுத்தி அழகழகா உசுருங்க... நம்ம கூட நீந்தறதுக்கு... அப்பறமென்ன, மெல்ல மெல்ல எல்லாருமா சேந்து சின்னச் சின்னக் கல்லா போட்டுக் கட்ட ஆரம்பிச்சோம்... இன்னைக்கு அது நிலாச்சாரல்னு ஒரு அழகான மாளிகையா வந்திருக்குன்னு நெனக்க பெருமையா இருக்கு.

'இந்த மாளிகை கட்ட நீதான்யா காரணம்'னு வீட்டுக்காரர்கிட்ட சொன்னா 'அட போடி, பைத்தியக்காரி... நீ கஷ்டப்பட்டுக் கட்டீட்டு என் பேரை ஏண்டி சொல்றே'ன்கறாரு. யாருங்க இதில பைத்தியம்?

நம்ம என்னமோ அதுக்கு அஸ்திவாரம் போட்டாம்னு வச்சுக்கிட்டாக் கூட, நம்ம கூட சேந்து கட்டின கூட்டுக்காரங்கதான் மாளிகை எந்திருச்சதுக்கு காரணம். உலகத்தில சந்து பொந்திலர்ந்துல்லாம் கல்லெடுத்துக் குடுத்துருக்காக... கஷ்டப்பட்டு சிமெண்ட் போட்டுருக்காக... எதுக்கு... இந்த மாளிகை தங்கமா துப்பும்னா? இல்ல சாமி, மனசந்தோசத்துக்கு... கட்ற மாளிகைல நம்ம சனமெல்லாம் தங்கட்டும்னுதேன்.

70 வயசு குமரர் ஜம்பு, அவரு குடும்பத்தையே கூட்டியாந்து கொத்துவேலைக்குட்டத சொல்லவா? அவரு தம்பி பத்மநாபன், பாத்து பாத்து கோபுரம் கட்றத சொல்லவா? எதுக்குன்னாலும் மொதல்ல நிக்கற இஞ்சினியரு ஏ.கே.ஆர சொல்லவா? கல்லு கொஞ்சங்காட்டி கொறையறாப்ல இருந்தா போட்டுக் குமிச்சிர்ற நாகராஜனைச் சொல்லவா? வீட்ல எம்புட்டு வேல இருந்தாலும் இந்த கூட்டுவேலைல நானும் என் பங்கை செஞ்சே ஆவேன்னு பாத்துப் பாத்து அலங்கரிக்கிற
சுகந்தியை சொல்லவா? கடைசி நிமிசம் வரைக்கும் தன் வீட்டு வேலை மாதிரி இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யற பூங்கொடியச் சொல்லவா? இல்ல, சின்னப் பசங்கன்னாலும் செட்டுமையா, செறப்பா தூக்கிக் குடுக்கற ஜோதி, கார்த்திக் பத்தியெல்லாம் சொல்லவா? யாரைச் சொல்ல யாரை விட.... பிரேமா, தெரஸா, சக்திதாசன், மணிவண்ணன், திருமலை, விக்னேஷ்.... இப்பிடி கல்லு சொமந்தவகள அடுக்கிக்கிட்டே போலாம்யா...

இதுல கொஞ்ச பேர இங்க பாக்கலாம்:
http://www.nilacharal.com/about.html

கதாநாயகர் ரோல் இதோட முடிஞ்சி போயிறலை. நிலாச்சாரல்லதான் நம்ம ஆட்டமே ஆரம்பமாச்சின்னு வச்சிக்கோங்களேன்...

ஏதோ ஒரு கூட்டத்தில லண்டன் சத்சங்கம் ப்ரசிடென்ட் சுவாமிநாதனை சந்திச்சேன். எவ்வளவோ ஜாம்பவான்களுக்கு ரொம்பத் திறமைசாலின்னு இந்தக் கத்துக்குட்டியைப் பெருமையாய் அறிமுகம் செய்து வச்சார்! நான் என்ன செஞ்சுட்டேன்னு என்னை திறமைசாலின்னு சொல்றாருன்னு நான் பல சமயம் யோசிச்சிருக்கேன். அவர் என் மேல நம்பிக்கை வச்சு கொடுத்த பொறுப்புகள் ரொம்பப் பெருசு. திடீர்னு நீங்கதான் இந்த விழாவைத் தொகுத்து வழங்கணும்பார், தீடீர்னு உங்களை பட்டிமன்றத்தில போட்ருக்கேன்பார்... இதெல்லாம் நான் முன்ன பின்ன செஞ்சு அவர் பாத்ததுமில்லை. நான் செஞ்சதா அவர்கிட்ட சொன்னதுமில்லை. எங்கருந்து அவருக்கு இந்த நம்பிக்கை வந்தது? முன்பின் பார்த்திராத சிலர் கூட 'சுவாமிநாதன் உங்களைப்பத்தி சொல்லிருக்கார்'ம்பாங்க. இப்பிடி அவரோட நம்பிக்கையை எனக்குப் படிகளா அமைச்சுக் கொடுத்துட்டார். நானென்ன செய்து இந்தக் கடனை எல்லாம் தீர்க்கப் போறேனோ தெரியலை.

வருஷத்துக்கு ஒரு சில கதைகள், கட்டுரைகள்னு நிலாச்சாரல்ல எழுதிக்கிட்டிருந்த என்கிட்ட 'உங்க தமிழ் மிக அழகு. அதிகம் எழுதுங்கள்' அப்படீன்னு ஏத்திவிட்டது கவிஞர் புகாரி. அப்புறம் மாலன் போன வருடம் திசைகள் பெண்கள் சிறப்பிதழுக்கு எழுதச் சொல்லி கேட்டப்ப இன்னொரு 'ஆங்?' 'மாலனுக்கு எப்படி என்னைத் தெரியும்'னு. ஏன்னா நான் அப்போ நிலாச்சாரல் தவிர வேற எதிலயும் எழுதலை. உண்மையா சொன்னா அதுக்கப்புறம்தான் நிறைய எழுத ஆரம்பிச்சேன்.

காலேஜ்ல ராம்கின்னா அதே லெவல்ல இப்போ சத்தி சக்திதாசன். நிபந்தனையில்லாத ஆதரவு. அவரோட முதல் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை புத்தக ஆய்வு செய்யச் சொல்லி அன்புக் கட்டளை போட்டார். அசந்துட்டேன் - நான் மேடையில பேசி அவர் முன்னே பின்னே
பார்த்ததில்லை. புத்தக விமரிசனங்கள் கூட நான் எழுதினதில்லை. மனுஷனுக்கு என் மேல இவ்வளவு நம்பிக்கை வர்றதுக்கு போன ஜென்மத்தில நான் ஏதாவது செய்திருந்தால்தானுண்டு. புத்தக ஆய்வுரை நல்லா இருந்திச்சின்னு மக்கள் பாராட்டினாங்க. ஆனா பாராட்டு சக்திக்குத்தான் போகணும்னு எனக்குத்தான் தெரியும்.

நான் என்ன செய்தாலும்- 'டமார்'னு கீழேயே விழுந்தா கூட 'நல்லா விழுந்தீங்க'ன்னு நம்மள சுதாரிக்க வைக்கற ஆளு சக்தி. அவரோட எழுத்தை நான் குறை சொன்னா அதுக்காக எனக்கு நன்றி சொல்ற நல்ல மனுஷன்.

என்னடா, கதாநாயகர் ஒரு சீனுக்கு மாத்ரம் வந்துட்டு போயிட்டாருன்னு நெனக்காதீங்க. நான் இப்பிடி இணையத்தில சுத்திக்கிட்டும் எழுதிக்கிட்டும் இருக்கறதுக்கு பின்னால யாருங்கறீங்க... தலைவர்தான். நான் சின்ன ஸ்டெப்பா வச்சா 'ப்பூ... கடுகு மேல ஏறி நின்னுகிட்டு பெருமை வேறயா... அந்தா இருக்கு பாரு மலை... அதை ஏறுனா பெருமை. உனக்கு முடியும். செய்ய மாட்டங்கற'ன்னு போற போக்கில போட்டுட்டுப் போயிருவார். நமக்கு அவர் சொல்லிட்டா வேத வாக்கு ( பதிபக்தி... ஹி...ஹி...). அதில நான் ஏறும்போது பொறுமையா என்னோட எல்லா கோபதாபங்களையும் தாங்கிப்பார். ஏறி முடிச்சிட்டு அந்த ஆளைப் பாத்தா ஏதோ தானே பண்ணிட்டாப்ல முகத்தில பெருமை தாண்டவமாடும். எப்பவாவதுதான் அதை வாய்விட்டு சொல்றது. முக்காவாசி நேரம் அடுத்த மலையத் தேடிக்கிட்டிருப்பார், நம்ம
பாய் ஃப்ரண்ட்.

புதுசா யாரையாவது பாத்தா 'நான் ராஜு. நி(ர்ம)லாவோட ஹஸ்பெண்ட்'ன்னு சொல்லிட்டு சிரிப்பார். 'என்னைவிட என் ஒய்ஃபைத்தான் நெறய பேருக்குத் தெரியும். அதான்'ம்பார்... எத்தனை பேருக்கு இந்த பரந்த மனசு வரும், சொல்லுங்க.

பத்திரிகை ஆசிரியரா இருக்கறதினால நமக்கு உலக ஞானம் நிறைய இருக்கும்னு வேற மக்கள் நெனப்பாங்க. அவரு அறிவில பத்தில ஒரு பங்கு கூட நமக்குக் கிடையாது. சில சமயம் காலேஜ்ல ராஜன் சொல்லிக் குடுத்து பரிச்சை எழுதன மாதிரி இவரு கருத்தை வச்சு கட்டுரை எழுதிருக்கேன்; ரேடியோ ப்ரோக்ராம் செஞ்சிருக்கேன். இவருதான் இந்த நிலாவுக்கு ஒளி தர்ற சூரியன் - அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும்

தங்கத் தாம்பாளத்தில எனக்கு பழம் வரலைன்னு எம்பாட்டுக்கு இருந்த என்னை 'அட, கூமுட்டை உனக்கு உழைச்சு சம்பாதிக்க வக்கிருக்கு'ன்னு ஒவ்வொரு கட்டத்திலயும் காட்டிக் குடுத்தவங்க இப்ப நான் சொன்ன எல்லாரும்தான். சம்பாதிச்ச கனிக்குத்தானே ருசி அதிகம்?

இவங்களுக்கெல்லாம் நான் பட்ட கடன் எத்தனை ஜென்மத்தில அடையுமோ, தெரியலை. இவங்க யாருமே என்கிட்ட எதுவுமே எதிர்பார்க்கலை. ஆனா எனக்குக் கிடைச்ச இந்தக் குட்டி மேடையில அவங்களை கௌரவப்படுத்தணும்னு எனக்குத் தோணிச்சு.

முதல் அத்தியாயத்தில சொன்ன மாதிரி, என்னோட நன்றி நவிலலைப் படிச்ச உங்களுக்கும், குறிப்பாக பின்னூட்டமிட்ட Srikanth, தருமி, தெய்வா, வெளிகண்டநாதர், ஜெய.சந்திரசேகரன், சிங் ஜெயகுமார், சிறில், கைப்பு, ராகவன் ஆகியோருக்கும் நன்றி நவில கடமைப் பட்ருக்கேன் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பெற்றோருக்கு சுய பரிசோதனை

Your Ad Here

(இந்தப் பதிவு பரஞ்சோதிக்கு சமர்ப்பணம் - காரணம் தெரியும்தானே!)

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தனிப்பட்ட குண நலன்களுண்டு. அந்த குணங்களில் மாற்றம் ஏற்படுத்துவெதன்பது சில வாரங்களிலொ அல்லது மாதங்களிலொ நடத்திவிடக் கூடியதல்ல. இந்த மாற்றங்களை அடுத்த தலைமுறையில்தான் ஏற்படுத்த முடியும். இத்தகைய மறுமலர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் பெற்றொர்களும் ஆசிரியர்களுமே. ஆனால் இந்த முக்கியத்துவத்தை அவர்களும் சரி, சமூகமும் சரி உணராமலிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.

மகிழ்ச்சியான மனிதன்தான் மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க முடியும். வாழ்க்கையின் 10 வயதுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் வாழ்க்கை குறித்த நம் கண்ணோட்டத்தை நிர்ணயிக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள். இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

தனக்கென்று ஒரு பெர்சனாலிடியை 2 வயதிலேயெ குழந்தைகள் உருவாக்கிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இந்த வயதில் இவர்களது ரோல் மாடல்களாக இருப்பது பெற்றோர்களே. பெற்றோரது பழக்க வழக்கங்களும் குண நலன்களும் குழந்தையின் குணநலன்களைச் செதுக்குவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. நீங்கள் ஒரு தந்தையாக, தாயாக இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள கீழ்க்கண்ட கேள்விகள் உதவும்:

1. நான் என் குழந்தைகளை மதிக்கிறேனா?

2. என் குழந்தைகளைப் பற்றி அவர்களிடம் நான் என்ன கூறுகிறேன்?

3. குற்ற உணர்வை அவர்களிடம் தூண்டுவதன் மூலம் நான் விரும்பும் செயலை அவர்களைச் செய்ய வைக்கிறேனா?

4. குழந்தைகளை நான் நடத்தும் விதத்தில் என் குற்ற உணர்வின் உந்துதல் இருக்கிறதா?

5. என் பெற்றோர்கள் எனக்கிழைத்த தவறுகளை நான் என் குழந்தைகளுக்குச் செய்கிறேனா?

6. என்னுடைய தேவைக்காக குழந்தைகளை என் மேல் சார்ந்திருக்கும்படி ஊக்குவிக்கிறேனா?

7. என் குழந்தைகளை அதீத பாதுகாப்புணர்வோடு நடத்துகிறேனா?

8. என் குழந்தைகளுக்குத் தேவையான பங்களிப்பை அவர்களுக்கு நான் அளிக்கிறேனா?

9. என் குழந்தைகளின் நல்ல குணங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறேனா அல்லது தீய குணங்களிலா?

10. என் குழந்தைகளிடம் வன்மம் பாராட்டுகிறேனா?

11. என்னால் என் குழந்தைகளின்டம் 'நான் தவறு செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்' என்று சொல்ல முடிகிறதா?

12 என் உடல் வலுவை குழந்தைகளிடம் காட்டுகிறேனா?

13. என் குழந்தைகளுக்குத் தங்களைப் பார்த்து சிரித்துக் கொள்ளும் பக்குவத்தைக் கற்றுக் கொடுக்கிறேனா? (எ.கா: கீழே விழுந்ததற்கு அடுத்தவர்கள் சிரிப்பார்களே என்று கவலைப்பட்டு அழுவதைவிட தன் கவனக் குறைவைக் குறித்து சிரித்துக் கொள்வது மேலல்லவா?)

14. சரியோ தவறோ அவர்களுக்கென்று உணர்வுகள் இருப்பது தவறல்ல என்பதை என் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறேனா?

15. எனக்கு ஒரு காரியத்தில் என் குழந்தைகள் உதவும்போது அவர்களால் அந்தக் காரியம் முடிய தாமதம் ஆனாலும் கூட, வேலை நல்லவிதத்தில் நடக்கா விட்டாலும் கூட அவர்களை மேலும் உதவும்படி ஊக்குவிக்கிறேனா?

16. எனக்கு என் குழந்தைகள் முக்கியம் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்து கொள்கிறேனா?

17. என் குழந்தைகளுக்கு நான் செவிசாய்க்கிறேனா?

18. என் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் எவ்வளாவு சாய்ஸ் தரமுடியுமோ அவ்வளவு தருகிறேனா?

19. என் குழந்தைகள் எனக்கு ஏமாற்றமளித்தால் என் அன்பையும் அங்கீகாரத்தையும் அவர்கள் இழந்துவிடுவார்களா?

20. என் குழந்தைகளின் வரம்புக்குட்பட்ட சுதந்திரத்தைத் தெளிவாக வரையறுத்திருக்கிறேனா?

21 என் குழந்தைகள் அன் அதிகாரத்தை எதிர்ப்பதில் தவறில்லை என்பதை மனதில் கொண்டிருக்கின்றேனா?

22. என் குழந்தைகள் அழுது அடம்பிடிக்கும் போது அதனை நிறுத்த அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிடுகிறேனா?

23. என் குழந்தைகள் என்னை விமரிசிக்கும்போது அதிலுள்ள நியாயத்தைப் பார்க்கத் தவறுகிறேனா?

24. குழந்தைகள் முன் அடாவடியாக நடந்துகொள்கிறேனா?

25. குழந்தைகளின் முன் புறம் பேசுகிறேனா?

26. என் குழந்தைகளுக்குப் போதிப்பதை நான் கடைப்பிடிக்கிறேனா?

27. என் விருப்பத்தை என் குழந்தைகளின் மேல் திணிக்க முயல்கிறானா?

28. குழந்தைகளிடம் சமூக அக்கறையை விதைக்கிறேனா?

29. ஒழுங்குபடுத்துவதற்கும் தண்டிப்பதற்குள்ள வேறுபாட்டை உணர்ந்திருக்கிறேனா?

30. என் குழந்தைகள் மேல் நான் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் நியாயமானவையா?

பி.கு: 1-21கேள்விகள் டாக்டர் எட் விம்பர்லி அவர்களின் புத்தகத்திலிருந்து. ஏனைய கேள்விகள் நிலவிலிருந்து.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, March 03, 2006

மந்திரச் சிற்பிகள் 2

Your Ad Here

முதல் பாகத்தை படிக்க இங்கே போங்க::
http://nilaraj.blogspot.com/2006/03/1.html

அப்படியாக வேலை வாங்கி முதல் நாள் ஆஃபீஸுக்கு போனா அங்க க்யூட்டா ஒரு மனுஷன் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டுத் திரியிறாரு. நம்ம போரடிச்சு உக்காந்துக்கிட்டிருந்ததைப் பாத்துட்டு, 'கெமிகல் இஞ்சினியரிங் ஹேண்ட் புக் தரட்டுமா?'ன்னு கேக்கறாரு (நான் படிச்சது அதுதான்). 'வேண்டாம். சரியான போர்' அப்படின்னேன். அவர் பார்த்த பார்வையே சரியில்லை. அப்புறம்தான் தெரிஞ்சது அந்த அழகர் அப்ப என்ன நெனச்சாருன்னு (ஹி...ஹி... இப்ப நம்ம ஹஸ்பண்ட்தான்) - 'மக்களெல்லாம் ஹேண்ட் புக்கைக் கரைச்சு குடிச்ச மாதிரி ஃபிலிம் காட்டத்தான் ஆசைப்படும். இது சரியான பேக்கு மாதிரி போரடிக்கும்னு சொல்லுதே. என்னத்தைப் பொழைக்கப் போவுது' ன்னு நெனச்சிருக்கார். சரி, கதாநாயகர் இப்ப திரைக்குப் பின்னால போயிட்டு திரும்ப ரீ-என்ட்ரி கொடுப்பார்.

அடுத்த சிற்பிக்குப் போவோம் நம்ம. அந்த ஆஃபீஸ்ல ஐ.ஐ.டி ப்ரொஃபஸர் டாக்டர் விஜயராகவன் கன்சல்டன்டாக இருந்தார். சேர்ந்த புதுசில கம்பெனில கஸ்டமர்ஸுக்காக ஒரு செமினார் நடத்தினாங்க. அதில நாங்களும் (ட்ரெய்னீஸும்) கலந்துக்கிட்டோம். மறுநாள் ப்ரொஃபசர் 'நேத்திக்கு என்ன கத்துக்கிட்டீங்க?' அப்பன்டீன்னார். மற்ற மக்களெல்லாம் பொறுப்பா
பதில் சொல்லிச்சு. என் முறை வந்ததும் 'அநியாயத்துக்கு போர் அடிச்சது. நான் ஒண்ணுமே கத்துக்கலை'ன்னேன். மனுஷன் என்னை விநோதமாத்தானே பாத்திருக்கணும்? என்னை ஆச்சரியமாப் பார்த்திருக்கார். பிறகு வேலை தொடரத் தொடர ஒவ்வொரு கட்டத்திலயும் என்னோட பலத்தை எனக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான். ஒரு நல்ல இஞ்சினியர்னு பேர் எடுத்தேன்னா (நம்புங்க சாமி :-))) அதுக்கு அடிப்படை அவர் போட்டதுதான். எனக்கு ஒரு மண்ணும் தெரியாதுன்னு நான் நெனச்சப்ப 'உனக்கு எவ்வளவு தெரியும்னு காட்றேன் பார்'ங்கற மாதிரி பதிலை என்கிட்டருந்தே வரவழைப்பார். நல்ல வாத்தியார் - கல்வில மட்டுமில்ல; வாழ்க்கையிலயும்.

அதுக்கப்பறம் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில, சேந்து ஒரு வருஷத்திலேயே திடீர்னு கூப்பிட்டு SWOT Committeeல இடம் கொடுத்தாங்க. அடுத்த 'ஆங்?'. கமிட்டில மக்களெல்லாம் ஜாம்பவான்கள். நான்தான் அதில சின்னது. நம்மளை எதுக்கு எப்படி எடுத்தாங்கன்னு ஒரே ஆச்சரியம். ஒரு நானூறு பேரு வேலை பார்த்த எங்க கம்பெனியோட Strength, weakness, Opportunities, Threats பற்றி அனலைஸ் பண்ற கமிட்டி அது. கமிட்டில மொத்தம் 12 பேருன்னு நினைக்கிறேன். நேர சேர்மனோட கமிட்டி மீட்டிங். எந்த நேரம் நம்மோட கத்துக் குட்டித்தனம் வெளிப்படுமோன்னு திக்திக்குங்குது. திடீர்னு சேர்மன் என்னைப் பாத்து ஏதோ கேக்கறாரு. 'அம்புட்டுதான், உன் வேஷம் கலைஞ்சது''னு ஒரு பக்கம் பதறுது. என்னோட மறுபக்கம் அவருக்கு ஏதோ பதில் சொல்லுது. 'வெரிகுட் சஜஸன்'ங்கறாரு மனுஷன்!

ஆஹா... தப்பிச்சோம்னு நெனச்சால் 'இன்னும் ரெண்டு வாரத்தில உங்களோட யோசனையை டீடெய்ல்டா பிரசன்ட் பண்ணுங்க'ங்கறாரு. நம்ம பட்டிக்காட்டு இங்கிலீஷை வச்சுக்கிட்டு ப்ரசன்டேஷன் கொடுத்து எப்படியோ தப்பிச்சோம். அப்புறம் ஆபீஸ்ல எந்த விழான்னாலும் அதில அமைப்பாளரா நம்மமளையும் சேத்துக்கிடுவாங்க. அந்த அனுபவங்கள்தான் ஒரு பட்டிக்காட்டுப் பொண்ணை பட்டணத்துக்குக் கொண்டு வந்திச்சு. கார்ப்பொரேட் கல்சர் அங்கேதான் கத்துக்கிட்டேன். இப்படி அவங்க என்னை அடையாளம் கண்டு அந்த வாய்ப்பை எனக்குத் தந்திருக்காட்டி இதெல்லாம் எனக்குப் பண்ண முடியும்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை. என்னுடைய பல பரிமாணங்கள் இந்த வாய்ப்பில் எனக்குத் தெரிஞ்சது. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமான சிற்பி யாருன்னு தெரியாட்டாலும் அந்த நிறுவனைத்தை நன்றியோட
நினச்சுக்கறேன்.

பொறகு அமெரிக்கா போயிருந்தேன் வேலைக்காக. அங்க, கூட வேலை செஞ்ச ஜிம் ரொம்ப ஃப்ரண்ட் ஆயிட்டாரு. நான் திரும்ப இந்தியா போயிட்ட பெறகும் மெயில்ல தொடர்பு இருந்தது. அப்புறம் நாங்க இங்கிலாந்து வந்து கொஞ்ச நாள் கழிச்சி சர்ப்ரைஸா ஒரு நாள் அவருக்கு ஃபோன் பண்ணினேன். எடுத்தது அவரோட ரூம் மேட் - ஒரு ஜப்பானியர்னு நெனக்கிறேன். நான் 'ஹலோ'ன்னு சொன்ன உடனே அந்த ரூம் மேட், "Is this Nimi?" அப்படீன்னு கேட்டார். நான் அசந்துட்டேன். ஜிம் என்னைப் பத்தி நிறைய சொல்லிருக்கறதா சொல்லிட்டு, "Jim says you are a special person" அப்படீன்னார். எனக்கு ஒரே மிதப்பு. அதே நேரம் யோசிச்சுப் பார்க்கவும் செஞ்சேன் - நான் எத்தனை ஃப்ரண்ட்ஸை இந்த மாதிரி ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சிருக்கேன்னு. பொதுவாவே ஃப்ரண்ஸுன்னா ''taken for granted'னு எடுத்துக்கிட்டிருக்கோம்னு தோணிச்சி. நமக்கு பிரியமான எத்தனை பேர்கிட்ட 'எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்'னு சொல்லிருக்கோம்னு யோசிச்சா பதில் பெரிய பூஜ்யமாத்தான் தெரிஞ்சது. அன்னைக்கு மனசுல பட்டது - நமக்கு பிரியமானவங்க நமக்கு ஸ்பெஷல்னு அவங்ககிட்ட சொல்லணும்னு. இப்போ என் ஃப்ரண்ஸ் எல்லாருக்கும் அவங்க எனக்கு ஸ்பெஷல்னு தெரியும். ஜிம் என்னை ஒரு பெட்டர் ஃப்ரண்டா மாத்திருக்கார். ஒரு பெட்டர் மனுஷியான்னு கூட சொல்லலாம் -
நல்லதை எங்கேயாவது பார்த்தா வாய்விட்டுப் பாராட்டச் சொல்லுது; மனுஷங்களைப் பாத்தா நல்லதா ரெண்டு வார்த்தை சொல்லணும்னு தோணுது - ஏன்னா அப்படிச் சொன்னா எப்படி இருக்கும்னு நமக்குக் காமிச்சிட்டாருல்ல ஜிம்?

அதையும் விட ஒருத்தர் நம்மளைப் பாத்து 'ஸ்பெஷல்'னு ஏத்திவிட்டா அவங்க அப்படி நினைக்கறதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்னு ஒரு பொறுப்பு தானா வருதுல்ல... முயற்சி செய்யறேன்... எங்க முடியுது!

அடுத்து வரப் போற கடைசி எபிசோட்ல நம்ம ஹீரோ ரீ என்ட்ரி. மிஸ் பண்ணிடாதீங்க, சரியா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நாலில்லாமல் நானில்லை

Your Ad Here

கொத்தனார் மற்றும் தேவுக்கு சமர்ப்பணம்

கொத்தனாரும் தேவும் சங்கிலியில இணைச்சு விட்டதால எழுதற பதிவு. எப்பவோ எழுதிருக்கணும். சரி, இப்பவாவது எழுதிடறேன்

பிடித்த 4 பிரபலங்கள்:

சச்சின் டெண்டுல்கர் : எல்லாருக்கும் தெரிஞ்ச காரணங்கள்தான். இன்னொரு ஸ்பெஷல் காரணம் - ஒரு முறை பார்த்த ரசிகர்களின் பெயரைக் கூட அநேகமாக நினைவு வைத்திருப்பாராம் . மனிதர்களை நேசிக்கிறவர்களுக்கே ஆகிற காரியம் இது. மறைந்த என் மகனுக்கு சச்சின் என்று இவர் பேரைத்தான் சூட்டி இருந்தேன்.

மைக்கேல் ஷூமாக்கர் : வெற்றி, வெற்றி, மேலும் வெற்றின்னு F1 ல ஏழு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இவரை இவரின் வெற்றிக்காகவே பிடிக்கும். சென்ற வருடம் அலான்ஸோவிடம் பட்டத்தைப் பறிகொடுத்த பின் குளிர்கால விடுமுறைக்குக் கூடப் போகாமல் பயிற்சி ஆரம்பித்துவிட்டாராம். அவ்வளவு டெடிகேஷன்! அடுத்த மாதம் ஆரம்பிக்கவிருக்கிற சீசனில் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினால் நன்றாக இருக்கும் 37 வயதாகிவிட்டதால் இந்த வருடத்தோடு ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் . புதிதாக ஒரு அணி ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

எஸ் .பி. பி: இவரது தெவிட்டாத குரலுக்கும் தன்னடக்கத்துக்கும் நான் பரம விசிறி . எனக்கு மிகச் சின்ன வயதில் இவர் பாடிய 'அவள் ஒரு நவரச நாடகம் ' பாடல்
மிகவும் பிடிக்கும். பாடகர் பார்த்தெல்லாம் பிடிக்கிற வயதில்லை அது. அதன் பின் தலைவர் என்னை பல முறை அழவைத்திருக்கிறார்; சிரிக்க வைத்திருக்கிறார்; சிந்திக்க வைத்திருக்கிறார் - எல்லாம் பாடல்கள் மூலமாகத்தான். எல்லவற்றையும் விட இவரின் அடக்கமும் எளிமையும் இவரை பிரபலங்களில் தனித்து நிறுத்திவிடுகிறது. நிலாச்சாரல் மூலம் ஒரு சில பிரபலங்களைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலவர்களின் கண்களிலேயே ஒரு மிதப்பு தெரியும். ஒரு விட்டேற்றித்தனம் இருக்கும். அதனாலேயே நேர்முகம் செய்வதை விட்டுவிட்டேன். எஸ் .பி .பியை இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் சந்தித்தவர்கள் சொல்லிக் கேள்வியுற்றிருக்கிறேன் இவர் வித்தியாசமென்று.

அம்மா அமிர்தானந்த மயி: என் தேடல்களினால் நான் சந்தித்த ஒரு ஆன்மீகவாதி. இவரை ஒரு ஆன்மீகவாதி என்பதைவிட மிகவும் மனித நேயமுள்ள மனுஷியாக பிடிக்கும். சந்திக்க வரும் அனைவரையும் கட்டியணைத்து ஆறுதல் சொல்ல்வதால் Hugging Saint என்று உலகளவில் பெயர் பெற்றுள்ளார். பக்கத்தில் அந்நியர் அமர்ந்தாலே மனசு சுளிக்கும் மனிதர்களுக்குள் எந்த பாகுபாடுமின்றி உள்ளன்போடு எத்தனை பேர் வந்தாலும் அணைத்துக் கொள்வதற்கு ஒரு பெரிய மனது வேண்டும்.


நிறைவேறிய 4 கனவுகள்:

1. மேடையில் ஒரு முறையாவது பாடுவது (பெரிய பாடகி என கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.)

2. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது - இதில் காமெடி என்னவென்றால் சிறு வயதிலிருந்த இந்த ஆசை பின்பு போய்விட்டது. ஆனால் பாருங்கள், மிகுந்த வற்புறுத்தலின் பேரில் ஒரு சமயம் செய்தி வாசிக்க நேரிட்டது.

3. இங்கிலாந்தில் வசிப்பது - முதல் முறை இங்கு பணி நிமித்தமாக வந்த போதே மிகவும் பிடித்துவிட்டது .

4. பத்திரிகைகளில் கதைகள் எழுதுவது


(இன்னும்) நிறைவேறாத 4 கனவுகள்

1. கர்நாடக இசை பயில்வது

2. பரதநாட்டியம் பயில்வது

3. ஒரு ம்யூசிக் வீடியோ இயக்குவது

4. Financial Freedom (இதைப் பேராசையில் சேர்த்திருக்கலாமோ?)


பேராசைகள் 4:

1. இந்தியாவை சுத்தம் செய்வது

2. எஸ் .பி. பிக்கு மகளாகப் பிறந்து அவர் தாலாட்டில் உறங்குவது

3. தொலைக்காட்சி சேனல் அல்லது தயாரிப்பு நிறுவனம் நடத்துவது

4. அமைதியும் சமாதானமும் நிறைந்த உலகத்தில் வாழ்வது


நன்றி சொல்ல விரும்பும் 4 பேர்:

1.அத்தம்மா - என் மாமியார் : என்னை வழி நடத்துவதற்காக

2. பெற்றோர் - நான் செய்த சேட்டைகளை எல்லாம் பொறுத்து எதிர்ப்புகளை மீறி படிக்க வைத்ததற்காக

3. ராஜு - ஏகப்பட்ட குறைகளிலிருந்தாலும் அவற்றோடு என்னை நேசிப்பதற்காக

4. நிலாக்குழு - பிரதிபலன் எதிர்பாராமால் எனக்குத் தோள் கொடுப்பதற்காக. (என்ன தவம் செய்தேனோ)



பிடித்த பொழுதுபோக்குகள் 4:

1. Romcom (Romantic comedy) படம் பார்ப்பது

2. CD போட்டுக் கொண்டு சேர்ந்து பாடுவது

3. ஏரோபிக்ஸ் என்ற பெயரில் குத்தாட்டம் ஆடுவது (வீடு பத்திரமாதான் இருக்கு)

4. ஜெஃப்ரி ஆர்ச்சர்/சிட்னி ஷெல்டன் நாவல் படிப்பது


பாடப் பிடிச்ச 4 பாட்டு (சிடி ப்ளேயர் கூடத்தான்)

1. உன்னோடு வாழாத வாழ்வென்ன (அமர்க்களம்)

2. மனம் விரும்புதே உன்னை (நேருக்கு நேர்)

3. எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)

4. எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)


அழைக்க விரும்பும் நால்வர்: (யார் எழுதிட்டாங்க, யாரு எழுதலைன்னே தெரியலை. நம்ம குரு உஷாவைக் கூப்பிடலாம்னு நினைச்சேன். அவங்க கொஞ்ச நாள் வனவாசம் போயிருக்காங்க. தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு உட்டுட்டேன்)

1. மதுமிதா

2. மதி

3. மணியன்

4. அன்பு

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 02, 2006

***மந்திரச் சிற்பிகள் 1***

Your Ad Here

இது நினைவலைகள் இல்லைங்க... ஒரு மாதிரியான நன்றி நவிலல். என்ன இவ்வளவு சீக்கிரம்னு பார்க்கிறீங்களா? இதுவே லேட்டு. அட, உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல இன்னும் நேரம் வரல.

இப்ப யாராருக்குன்னு தெரிஞ்சிக்க மேலே படிங்க.கூட்டுப் புழுவை வண்ணத்துப் பூச்சியாக்கறது கஷ்டமில்லை. ஆனா ஒரு மண்புழுவை பட்டாம்பூச்சியா ஆக்கறதுக்கு சில மந்திரச் சிற்பிகள் முயற்சி செய்தாங்க; இன்னும் செய்துக்கிட்டு இருக்காங்க. அவங்களைப் பத்தி சொல்றது என் கடமைன்னு நினைக்கிறேன்

அது என்னவோ சின்னதிலருந்தே எனக்கு என் மேல இருக்கிற நம்பிக்கையைவிட மற்றவங்களுக்கு என் மேல அதிகமாவே நம்பிக்கை இருந்திருக்கு. ஏன்னு காரணம் தெரியலை. என் தன்னம்பிக்கையைவிட சுத்தி இருந்தவங்க வச்ச நம்பிக்கைகள்லாம்தான் என்னை உந்தித் தள்ளி நடக்க வச்சிருக்கு.

பொதுவாவே நமக்கு வெளாட்டு ஜாஸ்தி. ரொம்ப சேட்டை, அரட்டை எல்லாம். இப்போவே பாத்திருப்பீங்களே, நிலாச்சாரலோட 250 இதழ் வேலைகள், நட்சத்திர வாரம் எல்லாம் இருந்தும் வெளாட்டு நடத்திக்கிட்டிருந்தோம்ல... அப்பிடித்தேன் எப்பயும்.

பத்தாவது முடிச்சவுடன் பையங்க கூட என்னைத் தொடர்ந்து படிக்க வைக்க விருப்பமில்லாமே (எல்லாம் பசங்களோட சேஃப்டிக்குதான்:-))) பக்கத்து டவுண் பெண்கள் மேல்நிலைப்பள்ளில சேர்த்தாங்க. பழைய ஸ்கூல்ல நம்மதான் தாதா. என்ன ஆட்டம் போட்டாலும் எப்படியோ மார்க் வாங்கிருவேன். அதனால எல்லாருக்கும் செல்லப் பிள்ளை. அப்பாவும் அம்மாவும் வேலை பார்த்த ஸ்கூல் வேற.

புது ஸ்கூல்ல நம்மளை யாருன்னே தெரியாது. கிராமத்துப் பிள்ளைன்னு ஏளனம் வேற. கையெழுத்து வேற கேவலமா இருக்கும். பொதுவாவே பெண்கள் பள்ளிகள்ல கையெழுத்துக்கு நெறைய முக்கியத்துவம் தருவாங்க. நம்ம கிறுக்கலைப் பாத்த உடனேயே டீச்சரெல்லாம் இது சரியில்லைன்னு முடிவு பண்ணீட்டாங்க. மாதத் தேர்வு ரெண்டுல சரியா மார்க் வராததால மனசே விட்டுப் போச்சு. அடப் போங்கப்பான்னு ரொம்ப கேர்ஃப்ரீ ஆயாச்சு. அடுத்த நாள் எக்ஸாம் இருந்தா கூட அசராம சினிமா போற அளவுக்கு வெறுப்பாகிப் போச்சு.

அரையாண்டு முடிஞ்சு அடுத்த மாதத் தேர்வுல பயாலஜில மார்க் ரொம்ப சுமார். பேப்பர்லாம் குடுத்து முடிஞ்சப்பறம் கவலைப் படாம சிரிச்சுக்கிட்டிருந்ததைப் பார்த்த பயாலஜி மிஸ் சுஜாதா 'நீ மனசு வைச்சா நல்லா படிக்கலாமில்லை?' அப்படின்னாங்க ஒரு முறைப்போட. 'ஆங்?... நம்ம ஒருத்தர் இருக்கோம்னு இவங்களுக்குத் தெரியுமா?'ன்னு திகைச்சுப் போயிட்டேன். மத்தப் பிள்ளைங்களும் 'அட...' அப்படின்னு என்னைப் பாத்ததுங்க, ஏன்னா சுஜாதா மிஸ் அப்படி பெர்சனல் ரிமார்க் எல்லாம் பண்ற ஆளில்லை.

'என்னது திடீர்னு' அப்படின்னு யோசிச்ச சில படிப்பாளிங்க அரையாண்டுத் தேர்வு மார்க் எல்லாம் கம்பேர் செய்ய ஆரம்பிசுதுங்க. கடைசில பார்த்தா அரையாண்டுல பயாலஜில நம்மதான் ஃபர்ஸ்ட் மார்க். அது கூடத் தெரியாத அளவுக்கு பொறுப்பின் திலகாம இருந்தோம்! என் கிறுக்கலைப் பொறுமையா படிச்சு திருத்திருத்திருக்காங்களேன்னு ஆச்சர்யம்! நமக்கு என்னமோ பளிச்சுன்னு தலைக்குள்ள அடிச்சது. அதுக்கப்புறம் எப்படி பொறுப்பு வந்து என்ன சாதிச்சோம்னு சொன்னா தற்பெருமையா போயிரும். அதனால விட்டுறலாம்.

அப்புறம் அண்ணா யுனிவர்சிடி வந்து முதல் மூணு செமஸ்டர்லயும் யாரும் எதிர்பார்க்காத அளவு ஓரளவு டீசன்டான மார்க் வாங்கவும் உள்ள தூங்கிக்கிட்டிருந்த வெளாட்டுத்தனம் எந்திருச்சிரிச்சு. அதுக்குப்பிறகு நான் படிச்ச படிப்பை நினைச்சாலே வெக்கமா இருக்கு. அஸைன்மென்டைக் காப்பி அடிக்கறது கூட கடைசி நேரத்திலதான். மகா மகா பொறுப்பான என் க்ளாஸ்மேட் ஒருத்தி அசைன்மென்ட்ல ஏதாவது பிரச்சனைன்னா என்னை இருத்திப் பிடிச்சு உக்கார வச்ச்சு டிஸ்கஸ் பண்ணுவா. 'துப்பறியும் சாம்பு' ஏதோ செய்யப் போயி என்னவோ நடக்குமே அதே போலத்தான் எப்படியோ பிரச்சனை சால்வ் ஆகிப் போகும். 'நீ மட்டும் ஒழுங்கா படிச்சா யுனிவர்ஸிடி ரேங்க் வாங்கலாம்'ன்னு என்னென்னவோ ஆசை வார்த்தை சொல்லி என்னைத் திருத்தப் பார்த்தாள். அந்த மாதிரி வஞ்சப் புகழ்ச்சி எத்தனை பாத்தாச்சுன்னு நெனச்சி எஸ்கேப் ஆயிடறது.

பொண்ணுங்கன்னா பொறுப்பா இருப்பாங்கன்னு பேச்சு. நம்ம பரிச்சைக்கு பத்து நாள் முன்னாலதான் புத்தகத்தை எடுக்கறது. அதிலயும் போரடிச்சுப் போய் ஹாஸ்டல்ல ரூம் ரூமா நாவல் தேடி அலையறது. அண்ணாவில மக்களெல்லாம் செகண்ட் இயர்லயே ஜி. ஆர். ஈ ஆரம்பிச்சிரும். இப்படி எக்ஸாமுக்கு முந்தின நாள் நாவல் கேட்டுக்கிட்டுத் திரிஞ்சா நம்மள புழு மாதிரிதான் பாக்கும். ஃபைனல் இயர்ல இன்னும் மோசம். படிக்கிற ஆசையே இல்லாம போயிருச்சி. வேண்டாத வம்பெல்லாம் வேற வெலைக்கு வாங்கியாச்சு.எனக்கு வந்த (நானா இழுத்துப் போட்டுக்கிட்ட) ஒரு பிரச்சனைனால ஃபிரண்டுன்னு நெனச்சவங்க எல்லாரும் விட்டலாச்சார்யா படத்தில வர்ற மாயமோகினிகள் போலக் காணாமப் போயிட்டாங்க.

அப்ப எங்களுக்கு ஸ்பேஸ் டெக்னாலஜி எடுத்தவர் டாக்டர் வி மோகன். அவர் மேல மக்களுக்கெல்லாம் நல்ல மரியாதை உண்டு. ஒரு தடவை வழக்கம் போல கடைசி ஆளா ஏதோ ரிப்போர்ட் சப்மிட் பண்ணப் போனேன். வச்சுட்டுக் கிளம்பறப்போ, "You know, you have good potential. Are you proud of what you have done?" அப்படீன்னார். கதி கலங்கிடிச்சு. அவர் எதனால அந்தக் கேள்வி கேட்டார்னு நல்லாவே தெரியும். ஆனா உயிர்த் தோழிகளே நமக்கெதுக்கு வம்புன்னு விலகிப் போனப்ப, அவ்வளவு பெரிய மனுஷன் ஒரு பொருட்டா மதிச்சுக் கேட்டது எனக்கு மகா ஆச்சர்யம். ஆனா என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. பரிதாபமா ஒரு முழி முழிச்சுட்டு வந்தாச்சு. “A real friend is one who walks in when the rest of the world walks out.”' அப்படிங்கற பொன்மொழி நினைவுக்கு வந்தது.ஆனா மனம் திருந்தி பொறுப்பு வந்து யுனிவர்சிடி ரேங்க் வாங்கறதுக்கு அது டூ லேட். ஆனா அவ்வளவு பெரிய மனுஷன் சொல்றாருன்னா அதில ஏதாவது அர்த்தம் இருக்கணும்னு மனசில ஆழமா பதிஞ்சிருச்சி.

என்னதான் பொறுபில்லாமத் திரிஞ்சாலும் ஒரு செமஸ்டர்ல கூட கப் எதுவும் வாங்காம ஒரே அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணினதோட, கேவலம்னு சொல்ல முடியாத அளவுக்கு ஏதோ மார்க் வாங்கி பி டெக் முடிச்சாசு. கடைசிப் பரிச்சை அன்னிக்கு "வாழ்க்கையிலேயே எனக்கு கடைசி பரிச்சை இது"ன்னு சொல்லி பயங்கர கொண்டாட்டம்! ஆனா விதி விட்டதா?

வீட்ல கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னடா இது வம்பா போச்சேன்னு பொறுப்பான பிள்ளையா (வேற வழி இல்லாம) எம்.டெக் அப்ளை பண்ணியாச்சு. ரிலேடிவ்ஸ் எல்லாம் மேல படிக்க வைக்க வேண்டாம்னு அப்பாவுக்கு ஒரே அட்வைஸ். மேல படிச்சா அதுக்கு மேல படிச்ச மாப்பிள்ளை பாக்கணுமாம். (அது என்ன கணக்கோ!). ஆனா அப்பா படிக்க அனுப்பிச்சிட்டாங்க.

திருச்சி ஆர்.இ.சில சேந்தாச்சே ஒழிய, படிக்கறதுல சுத்தமா விருப்பமில்லாம விரக்தியா சுத்திக்கிட்டிருந்தேன். எனக்குக் கிடைச்ச க்ளாஸ்மேட்ஸ் அத்தனை பேரும் சொக்கத் தங்கம். உண்மையான பாசம் இருந்தது எல்லார்கிட்டேயும். அதில வேலைக்கு லீவு போட்டுட்டு எங்ககூட படிச்ச ராமகிருஷ்ணன் என்கிற ராம்கி எங்களைவிட அஞ்சாறு வயசு மூத்தவர். ஆனா வயசு வித்தியாசமெல்லாம் பார்க்காம எங்க கூடத்தான் எப்பவும் சுத்திக்கிட்டிருப்பார். 12 பேருல அநேகமா மற்ற எல்லாம் உண்மையாவே படிக்க ஆசைப்பட்டு வந்தவங்க அல்லது ஒரு குறிக்கோளோட வந்தவங்க - நம்மளை மாதிரி கல்யாணத்திலருந்து தப்பிக்கறதுக்காக வந்தவங்க இல்லை. அதனால பி.டெக் மார்க் எல்லாம் நல்லா இருக்கும். நான் கடைசிக்கு முந்தின மார்க். படிப்பைவிட தமிழ் மன்றத்திலதான் நம்ம ரொம்ப ஆக்டிவ். இப்படி இருக்கும்போதே ராம்கிக்கு எப்படியோ என்மேல அபாரமான நம்பிக்கை. எதோ நான் எல்லாத்தையும் ஊதித் தள்ளிடுவேன்கற மாதிரிதான் பேசுவார்.

முதல்ல ஒரு கதை எழுதி தயங்கித் தயங்கி நம்ம க்ளாஸ்மேட்ஸ் கிட்ட காட்டினப்போ எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சுபோச்சு. கையெழுத்து நல்லா இருக்கறவனைப் பிடிச்சு அதை எழுதவச்சு ஆனந்த விகடனுக்கு அனுப்பி வச்சதில பெரிய பங்கு ராம்கிக்கும் ராஜனுக்கும் உண்டு. அதில பாருங்க, அப்படி அனுப்பிச்ச கதை பிரசுரத்துக்கு தேர்வாயிருச்சி. நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ அவ்வளவு சந்தோஷம் அத்தனை க்ளாஸ்மேட்ஸ்க்கும் இருந்தது. அன்னைக்கு அவங்க அப்படி ஸ்டெப் எடுக்கலைன்னா எந்தக் காலத்திலயும் நான் பத்திரிகைக்கு கதை அனுப்பிருக்கமாட்டேன்.

அதோட முடிஞ்சதா? எம்.டெக்ல நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதத்தில என்னை டிஸ்டிங்க்ஷன் வாங்க வச்சது (நான் படிச்சது பாதிதான். அவங்க படிச்சி சொல்ற கதையைக் கேட்டுட்டுப் போய் எழுதினதுதான் மீதி. ராஜன் நல்ல வாத்யார்), கேம்பஸ் இன்டர்வ்யூல வேலை வாங்க வச்சது அப்படின்னு அவங்களோட பிரதாபங்களை அடுக்கிக்கிட்டே போகலாம். நமக்கு ஸ்டைலான இங்கிலீஸ் கிடையாது; சப்ஜெக்ட்ல பெரிய பிஸ்தா கிடையாது. இன்டர்வ்யூவுக்கு நம்மளை மக்கள் ப்ரிபேர் பண்ணி விடுவாங்க பாருங்க...என்ன கேள்வி கேட்பாங்க, எப்படி பதில் சொல்லணும், எப்படி க்ரூப் டிஸ்கஷன்ஸ்ல பேசணும்... சிம்ப்ளி கிரேட்! இன்றைக்கு நான் இருக்கும் நிலைமைக்கு என் எம்.டெக் க்ளாஸ்மேட்ஸ் - குறிப்பா ராம்கியும் ராஜனும் ஒரு காரணம்ங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை.

சில வருடங்களுக்கு முன்னால ராம்கி என் கணவர்கிட்டே, "ஒழுங்கா க்ளாஸ¤க்கு வரமாட்டா. உக்காந்து படிக்கமாட்டா. ஆனா பாருங்க இன்னிக்கு இங்கிலாந்து, இத்தாலின்னு பறந்துக்கிட்டிருக்கா. நாங்கெல்லாம் இன்னும் இந்த வேலையில குப்பை கொட்ட வேண்டிருக்கு"ன்னார். அப்படி அவர் சொன்னதில துளி கூட பொறாமை இல்லை; பொறாமைப்படற நிலைமையிலயும் அவர் இல்லை. என்னை உயர்த்திச் சொல்லணும்கறதுக்காகவே சொன்னது அது. அன்றைக்கு அவர் முகத்தில நான் பார்த்தது பெருமிதம்தான். 'நான் சொன்னேனில்லை?'ங்கற மாதிரி இருந்தது. இப்போ ராம்கி சிங்கப்பூர்ல இருக்கார். டாக்டர் ராஜன் உலகமெல்லம் சுத்தி வர்றான்(ர்!)

சுருக்கமா எழுதணும்னுதான் நினைச்சேன். ஆனா என் வாழ்க்கையில என்னைவிட அதி முக்கியமான ரோல் பண்ணிருக்கற நிறையபேர் இன்னும் இருக்காங்களே!

அவங்களும் வருவாங்க...

(பொறுமையா படிச்சதுக்குக் கடைசில உங்களுக்கும் நன்றி சொல்லிடலாம், திரும்ப வந்தீங்கன்னா:-)))

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** பூப்பறித்த அனுபவம் ***

Your Ad Here

பூப்பறிக்க வருகிறோம் நடந்து முடிந்து அலை ஓயத் தொடங்கிவிட்டது. பூப்பறித்த அந்த இனிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே அந்த அவசரப் பதிவு.

இப்படி ஒரு விளையாட்டு நடத்தலாம் என்ற எண்ணம் வந்ததும் போட்டியாளர்களாக எப்படிப்பட்ட ஆட்கள் தேவை என சிந்தித்தேன் - உற்சாகமான, இணக்கமான, அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்தாத அதே சமயம் பொறுப்பானவர்களாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணினேன். அப்படி சட்டென்று நினைவில் வந்தவர்களுக்கு அஞ்சல் அனுப்பி விருப்பம் கேட்டேன். (நான் கேட்காதவர்களுக்கு இந்த குணங்கள் இல்லை என்று அர்த்தமில்லை. எனக்கு உடனே நினைவிற்கு வந்தவர்கள் என்று குறிப்பிட்டதை கவனிக்கவும்). 8 பேரில் 7 பேர் உடனே விருப்பம் தெரிவித்து விட்டார்கள். சுந்தர் ஊரில் இல்லாததால் பதில் தர இயலவில்லை என்று பின்பு தெரிந்தது. அதற்குள் கொத்ஸின் உதவியால் கௌசிகனைப் பிடித்தோம்


இந்தப் போட்டியில் பல்வேறு திறமைகளை சோதிக்க விரும்பினேன். அதில் ஒன்று எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்பது. அதனால்தான் ஒரு குழுவில் அமெரிக்காவிலிருந்து ஒருவரும் இந்தியாவிலிருந்து ஒருவருமாய் அமைத்தேன். இந்த நேர வித்தியாசத்தை எவ்வளவு சாதகமாய் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க இந்தியாவிலிருப்போருக்கு சாதகமாய் சில சுற்றுக்களையும் அமெரிக்காவிலிருப்போருக்கு சாதகமாய் சில சுற்றுக்களையும் ஆரம்பிக்க முடிவெடுத்து வேலைகளைத் தொடங்கிவிட்டேன்.

இடையில் நான் போட்ட சில அஞ்சல்களுக்கு போட்டியாளர் கைப்பு பதில் சொல்லாமல் போக, கொஞ்சம் கவலை வர ஆரம்பித்தது. ஆபத்பாந்தவன் கொத்ஸ் HariharanS-ஐ கைப்புவுக்கு standby ஆக ஏற்பாடு செய்தார். இந்த நேரத்தில் ராகவனிடமிருந்து ஒரு அணுகுண்டு வந்தது - பணி காரணமாக போட்டியில் கலந்து கொள்ள முடியாதென்று. உடனே standby ஆக இருந்த கரிகரன்ஸ் ராகவன் இடத்திற்கு வந்து விட்டார். நேரம் கடந்து கொண்டே இருந்தது. கைப்புவை ஆளைக் காணோம். குமரன் இந்தியாவில் இருக்கிறாரா அமெரிக்கவிலிருக்கிறாரா என்ற குழம்பத்திற்கு நடுவே தனக்கு போட்டி பற்றி சரியாகத் தெரியாமல் விருப்பம் தெரிவிக்க யோசிப்பதாக குமரன் சஸ்பென்ஸ் வைத்தார். கைப்பு சனி மாலை வரை அட்டெண்டன்ஸ் கொடுக்காததால் ஆள் தேடி அலைய வேண்டியதாகப் போயிற்று. ஒரு 10 பேர் கதவையாவது தட்டி இருப்பேன். ஒரு வழியாக குமரன் உறுதி செய்ய மூச்சு வந்தது

ஒவ்வொரு சுற்றின் பின்னணியையும் குறிப்பிட்டு விடுகிறேன்:
முதல் சுற்றில் இரண்டு கேள்விகளைத் தவிர அனைத்துமே இரண்டு புதிர்களைக் கொண்டவை. உதாரணமாக, ஒரு கேள்வியில் இருவர் நிற்கும் படத்தை மட்டும் கொடுத்து 'இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு நாடுகள் எவை' என்று கேட்டிருந்தேன். முதலில் அது எந்த சம்பவம் என்று கண்டுபிடிக்க வேண்டும். அது தெரிந்தால்தான் சம்பந்தப்பட்ட நாடுகளைக் கண்டுபிடிக்க முடியும். இதனை ஒரு பொது அறிவு சுற்றெனக் கொள்ளலாம். அதே சமயம் போட்டியாளார்கள் எவ்வளவு விரைவாக சிந்தித்து செயல்பட முடிகிறது எப்பதையும் இது சோதித்தது.

இரண்டாவது சுற்று அட்சர சுத்தமாக க்ரியேடிவிடியையும் ஒரிஜினாலிடியையும் சோதிப்பதற்காகவெ அமைத்து சுற்று. அதே சமயம் எப்படி தங்கள் ஐடியாக்களைப் பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்து வெளிக்கொணர்கிறார்கள் என்பதையும் கணிக்கும் விதத்தில் அமைந்திருந்தது

மூன்றாவது சுற்றும் பொது அறிவென்றாலும் அணியினர் இருவரும் இணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்தத் தகவல் யுகத்தில் தகவல்களை எவ்வளவு விரைவில் எவ்வளவு சமயோசிதமாகக் கண்டறிகிறார்கள் என்பதற்கு சவாலாக அமைந்தது 4வது சுற்று. சந்தோஷ் கூட இதில் என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஜோசப் அவர்களின் கதவிலக்கத்தைக் கொத்ஸ் கண்டறிந்த முறையைப் படித்தீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு சமயோசித புத்தி வேண்டும் என்று தெரியும். மதியிடமும் சிவாவிடமும் அஞ்சல் அனுப்பி பதில் பெற்றாலும் அதற்கு ஒரு இனிடிஅடிவெ வேண்டும். 4 பேர் அதே கேள்விகளை அவர்களிடம் கேட்கும்போது தங்களுக்கு பதில் சொல்ல வைக்கும் சுமுக உறவு இருக்கவேண்டும். Getting things done என்பதுதான் இந்த சுற்றின் நோக்கம்.

மற்ற சுற்றுகளிலாவது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் தாங்களாகவே பதில் சொல்லி விடலாம். 5வது சுற்றில் அது சாத்தியமே இல்லை ஏனெனில் அது இரு அணி உறுப்பினர்களின் தனிப்பட்ட குறிப்புகளையும் இணைத்துத் தரப்பட்ட புதிர். இதற்கான பதிலைக் கண்டுபிடிப்பது சிரமமில்லை. ஆனால் இருவரும் எவ்வளவு விரைவாக தொடர்பு கொள்கிறார்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் இருக்கிறது என்பதை சோதிக்கவே இந்த சுற்று. இந்த சுற்றில் வேகத்துக்கு அதிக மதிப்பெண்கள் தந்தது ஏன் என்ற கௌசிகனின் கேள்விக்கு இது பதிலளித்திருக்கும் என்று நம்புகிறேன்

ஐந்தாவது சுற்று அறிவித்த உடனேயே ஆறாவது சுற்று அறிவிக்கக் காரணம் இந்தியாவிலிருப்போருக்கும் இதில் செயல்பட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே. ஆனால் போட்டியாளர்கள் 5வது சுற்றில் அதிகம் கவனம் செலுத்தியதால் நேரம் கடந்துவிட்டதென நினைக்கிறேன். இந்த சுற்றிற்குக் குறைந்த கால அவகாசம் அளிததற்குக் காரணம் நேர நெருக்கடியில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைக் கணிக்கவே. அதில்தான் குமரனும் கொத்ஸும் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். ஒருவருடைய இல்லம் தேடிச் சென்று வாக்கு கேட்க தன்னம்பிக்கை வேண்டும்.

குமரனும் கொத்ஸும் தாங்கள் பிரபலங்கள் என்று எண்ணி வாளாவிருந்திருந்தால் ஜெயித்திருக்க மாட்டார்களே? பாபுலாரிடியோடு பெரும் முயற்சியும் சேர்ந்துதான் அவர்களுக்கு வெற்றி தந்தது. செல்வனின் முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும். என்னிடம் வாக்குக் கேட்டது மட்டுமின்றி கொத்ஸின் பதிவில் பொய் வாக்குக் கேட்ட புத்திசாலித்தனத்திற்கு ஒரு ஷொட்டு. அதையும் அனுமதித்த கொத்ஸுக்கு சபாஷ் - எவ்வளவு ஸ்போர்டிவ் என்று பாருங்கள்!

இந்த சுற்று விளையாட்டோடு பொருந்தவில்லை என்ற கௌசிகனின் கருதை மதிக்கிறேன். ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த இனிய அனுபவத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில:

1. போட்டியாளர்களின் உற்சாகம் - முக்கியமாக ரோஜா அணியினரின் உற்சாகம் விளையாட்டைத் தூக்கிப் பிடித்தது

2. பார்வையாளர்களின் ஆர்வம் - முதல் சுற்றுக்கு மிக நல்ல வரவேற்பு

3. கொத்ஸின் நகைச்சுவை உணர்வு

4. தருமியின் கிராஃபிக்ஸ் திறமை

5. தேவின் விடா முயற்சி

6. சாமந்தி அணியினரின் க்ரியேடிவிட்டி

7. குமரனின் பிரசார வேகம்

8. Selvan's approach

9. வாக்காளப் பெருமக்களின் ஆர்வம். இறைவனே வந்து வாக்குக் கேட்டாலும் சோம்பல் படாமல் சாவடி சென்று ஓட்டுப் போடவேண்டுமல்லவா?

10. ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது.


பாடங்கள்:

1. அலுவல்களுக்கிடையில் பங்கேற்பது சிரமமாக இருந்தது என்ற கௌசிகனின் கருத்தை வழிமொழிகிறேன். நடத்தவும் சிரமமாக இருந்தது. அடுத்த முறை விடுமுறைநாளில் நடத்தலாம்

2. போட்டியாளர்களை நானே தேர்ந்தெடுத்து அணி சேர்ப்பதை விட அவர்களாகவே அணி சேர்ந்து விண்ணப்பித்தால் என் நேரத்தை சேமிக்கலாம்

3. போட்டிகளுக்கு தயார் செய்ய கணிசமான நேரம் ஒதுக்க வேண்டும்.

4. மணியன் அவர்களின் யோசனையின்படி பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கலாம்.

நன்றி:

இந்தப்போட்டிக்கு உற்சாகத்தைக் கொண்டுவந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் பார்வையாளார்களுக்கும்

தங்கள் பதிவில் இந்தப் போட்டி பற்றிக் குறிப்பிட்ட அனைத்து அன்பு நண்பர்களுக்கும் (தருமி, கொத்ஸ், செல்வன் உட்பட)

புதிய யோசனைகள் தந்த மணியனுக்கும் கௌசிகனுக்கும்

இதனை நடத்தியதற்கு கணிசமான் நேரம் செலவிட்டாலும் முகம் சுளிக்காத அன்புக் கணவருக்கும்

அறிவிப்பு:

1. கொஞ்சம் இடைவெளிவிட்டு அடுத்த விளையாட்டைத் துவங்கலாம் என்றிருக்கிறேன். பூப்பறிக்க விருப்பமுள்ளவர்கள் கூட்டாளியுடனோ இல்லாமலோ உங்கள் வலைபதிவின் உரலோடு விண்ணப்பிக்கலாம்.

2. விளையாட்டுக்கு ஆதரவு தர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: nila at nilacharal dot com

ஆதரவு போட்டியாளர்களுக்கான பரிசுகளாக இருந்தால் போதுமானது - புத்தகங்கள், குறுந்தகடுகள் அல்லது பொற்காசுகள், யானைகள் என்று என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, March 01, 2006

***கல்கியில் என் சிறுகதை***

Your Ad Here

சென்ற வாரம் கல்கியில் வெளியான என் சிறுகதை இங்கே:

குலதெய்வம்
(மீள் பதிவு)

"நானு நாண்டுக்கிட்டுச் செத்துப்போறம்ல. ஒங்க அய்யாவைக் கொன்ன பயலுக இன்னும் உசுரோட திரியரானுகன்னு நெனைச்சாலே ஈரக்கொல நடுங்குது. ஒண்ணுக்கு நாலு ஆம்பளப் புள்ளைகளப் பெத்து என்ன பிரயோசனம்?" சீனியம்மா வாசல்ல உக்காந்து சத்தம் போட்டுக்கிட்டிருந்தா.

(படத்துக்கு நன்றி: படம் வரைந்த மாருதி, வெளியிட்ட கல்கி, வெப் காமெராவில் படமெடுத்து அனுப்பிய தோழி)
உள்ளர்ந்து மூத்த மவன் அழகர்சாமி எட்டிப்பாத்து, "எம்மா, அரவம்* போடாம இரு. நாங்க என்ன செய்யுதோம்னு ஊருக்கெல்லாம் தண்டரா போட்டுக்கிட்டு இருக்க முடியாது. கமுக்கமா காரியத்தை முடிக்கிற ஆளுக நாங்க" அப்பிடீன்னு அவள அடக்கப் பாத்தான்.


ஆனாலும் மனசு ஆறாம, "எவன் எவன் எப்பிடி எப்பிடி வெட்டுனாம்னு பக்கத்திலர்ந்து பாத்தவல்ல நானு. வேண்டாம்யா வேண்டம்யான்னு அந்தச் சின்னப் பயலுக காலைப் புடிச்சு கெஞ்சினம்ல. உங்க அய்யா தலைய சீவிப்புட்டு என்னயும் வெட்டிப்பிட்டு கொக்கரிச்சிட்டுப் போனானுகலே அந்த எடுபட்ட பயக. அன்னக்கிலருந்து இன்னம் ஒறக்கம் வராம சங்கடப்பட்டுக் கெடக்கேன்"ன்னு சீனியம்மா பொலம்பிக்கிட்டுத்தானிருந்தா.

சீனியம்மாவின் புருசன் அய்யனாரு எவருக்கும் பயப்படாதவரு. ஊருக்குள்ள பங்காளிக பண்ண அக்குறும்ப* தட்டிக் கேட்டாருன்னு அவரு அண்ணன் மவன் சிவராசும் பேரன் ராசகோவாலுந்தேன் கூட்டாளிக கூட வந்து அவர வெட்டிப்பிட்டாங்கெ. சீனியம்மா ஆராரு* கூட வந்ததுன்னு வெவரமா போலீசுகிட்ட சொல்லிப்பிட்டா. ஆனா வெட்டின பயக ஒரு மாசமா இன்னம் தலமறவாதேன் திரியறானுக. அவங்கெ பொண்டு புள்ளக எல்லாம் எங்கன போச்சுன்னெ தெரியல. அதுகளயும் காணல.

சீனியம்மா மகங்கெளும் அருவாளோட ஊரூராத் தேடிக்கிட்டுதேன் இருக்கானுக. அம்பிட்டானுகன்னா* அத்தன பேரும் மொத்தமா கெழக்கால* போகவேண்டியதுதேன்.

திடுதிப்புன்னு ஒரு நாளு வெரசு வெரசா* சீனியம்மா மகங்கெ நாலுபேரும் அருவாள சட்டையில சொருகிக்கிட்டு வண்டிய எடுத்துக்கிட்டு பறந்தானுக. என்ன ஏதுன்னு அம்மாட்ட மூச்சுடல. சீனியம்மா லேசுப்பட்டவளா? அவளுக்குத் தெரிஞ்சு போச்சு இன்னக்கி அவ சபதம் நெறவேறப் போவுதுன்னு. பழிக்குப்பழி வாங்கறவரயும் கஞ்சித் தண்ணியத் தவுத்து வேறெதும் சாப்புட மாட்டம்னு ஒத்தக்கால்ல நின்னுப்பிட்டாள்ல!

பயலுக போயி அரநாளுக்கு மேல ஆயிப்போச்சி. சேதி ஒண்ணும் காணுமேன்னு உள்ளுக்கு ஒக்கார முடியாம திண்ணயிலயே ஒக்காந்து கெடக்கா சீனியம்மா.

ஒரு வழியா மகங்கெ திரும்பிவந்தானுக. ஆனா அவனுக மொகம் தொங்கிக் கெடக்கு. "என்னலே, வெட்னீகளா இல்லியா?"ன்னு சீனியம்மா ஆத்திரத்தோட கேக்கா.

"எப்பிடியோ துப்பு கெடச்சி போலீசு வந்து அவனுகள பிடிச்சிட்டுப் பொயிருச்சும்மா"ன்னான் சின்னப்பய செல்லத்துரை.

சீனியம்மாளுக்கு வெளம்* ஏறிப்போச்சு. பயகள நல்லா வஞ்சு* போட்டா.

ரெண்டு நா* கழிச்சி ரெண்டாவது பய சுந்தரம் ரொம்ப சந்தோசமா வீட்டுக்கு ஓடியாந்தான். "எம்மா, பேரங்காரன் செயிலுல செத்துப் போயிட்டானாம். நாயம்தேன் செயிக்கும்னு சாமி காட்டிருச்சி பாத்தியா?" ன்னு சீனியம்மாட்ட நறுக்குன்னு நாலு வார்த்தைல சொன்னானே ஒழிச்சு மேல வெவரமேதும் சொல்லல.

மகங்கெ நாலுபேரும் பெரிய வெளா* எடுக்காததுதேன் கொறை. அம்புட்டு சந்தோசம் அவனுகளுக்கு. அண்ணன் தம்பிக எல்லாம் சேந்து வேட்டு வெடிக்கக் கெளம்பிட்டாங்கெ.


"எப்பிடி செத்தானாம்தா?" ன்னு மூத்த மருமவ முத்துமாரிகிட்ட கேட்டா சீனியம்மா. "எனக்கென்னெளவு தெரியும்? எப்பிடிச் செத்தா என்ன? பாதிப்பழி தீந்து போச்சில்ல"ன்னு சொல்லிப்பிட்டு சுடு சோத்துல கருவாட்டுக் கொழம்பூத்தி வட்டில்ல* மாமியார்காரிகிட்ட குடுத்தா முத்துமாரி.


வாசன நல்லாத்தேன் இருந்துச்சி. ஆனா சீனியம்மாளுக்கு என்னமோ சாப்புடப் புடிக்கல. தட்ட வாங்கினவாக்கில ஒக்காந்துக்கிட்டே இருந்தா. வெளிய வேட்டுச் சத்தம் கேட்டுக்கிட்டே இருந்திச்சி.

சீனியம்மா சோத்துல கைவைக்காததப் பாத்துட்டு மருமவ, "ஒத்த ஆம்பளப்புள்ள செத்துப் போயிட்டான். பொண்டாட்டிக்காரி மூணு பொட்டைகளை வச்சுக்கிட்டு சீரழியப்போறா. நீங்க ஆசப்பட்டாக்ல* கொலமே வெளங்காமப் போனாப்லதான். சந்தோசமா சாப்பிடவேண்டியதுதான?"ன்னா.

மருமவ சொன்னதுந்தேன் சீனியம்மாளுக்கு சடக்குன்னு ஒறச்சது - ஆத்தீ... ஒரு வம்சமில்ல போயிருச்சு! சீனியம்மாளுக்கு நெஞ்சுக் குழிக்குள்ள என்னமோ அடச்சிக்கிட்டாக்ல இருந்திச்சு . சுடு சோத்தக் கையில அவ தொடவே இல்ல. மூலைல சுருட்னாக்ல படுத்துக்கிட்டா. சிவராசும் செத்தாத்தேன் அம்மா வெரதத்த முடிப்பா போலுக்குன்னு மகங்கெ நெனச்சிக்கிட்டானுக.

கேசு கோர்ட்டுக்கு வர அந்தா இந்தான்னு ரெண்டு வருசம் ஓடிப்பொயிருச்சி. கேசுல சீனியம்மாதேன் மெயினான சாச்சி*. அவ ஒருத்திதான நடந்தத நேர்ல பாத்தவ. அவளுக்கு என்னமோ அப்பைக்கப்ப* மேலுக்கு முடியாமப் போயிருது. அவ போயிச் சேந்துட்டா கேசு நிக்காதுன்னு சிவராசு குடும்பமுச்சூடும் எதிர்பாத்துக் காத்துக்கெடக்கு. ஆனா அவ எல்லாத் தரமும் எந்திச்சு வந்துக்கிட்டுதேன் இருக்கா.

ஒரு வழியா சீனியம்மாள கோர்ட்டுல வெசாரிக்கக் கூப்புட்டாகளாம். அடுத்த வாரம் அவ போவணுமாம். மகங்கெ அவளுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லாமப் போயிறக் கூடாதுன்னு பதட்டமாத்தேன் திரிஞ்சிக்கிட்டு இருக்கானுக.

அன்னக்கி வீட்டுல ஆம்பளையாளுக ஒருதரும்* இல்ல. சீனியம்மா திண்ணையில ஒக்காத்துக்கிட்டிருந்தா. அப்ப சிவராசு பொண்டாட்டி சந்திரா ஓடியாந்து சீனியம்மா கால்ல உழுந்தா. கூடவே மூணு பொட்டப்புள்ளைகளும் திருதிருன்னு முழுச்சிக்கிட்டு நிக்குதுக.

"அத்த நீங்கதேன் எப்பிடியாவது மனசு வைக்கணும். அவக பண்ணுனது தப்புதேன். பெரிய குத்தந்தேன். இந்த மூணு பொட்டப்புள்ளைக மொகத்துக்காவது நீங்கதேன் மன்னிக்கணும். உங்கள கொல தெய்வமா* நெனச்சு கும்புடறேன், அத்த. எங்க உசுரு ஒங்க கையிலதேன் இருக்கு"ன்னு காலப் புடிச்சிக்கிட்டு அழுவுதா.

அம்மா அழுவுதான்னு புள்ளக்காடும் அழுவுதுக. சீனியம்மா தெகச்சுப் போயி ஒக்காந்திருக்கா. என்னதோ ஏதோன்னுபோட்டு வெளிய வந்த முத்துமாரி சந்திராவப் பாத்ததும் ஆங்காரமா வைய ஆரம்பிச்சிட்டா. சந்திரா அழுதுக்கிட்டே புள்ளைகள இழுத்துக்கிட்டுப் போயிட்டா.

சீனியம்மாவுக்கு நெஞ்சில பாராங்கல்ல சொமக்கறாப்பிலதேன் இருக்கு. இது இன்னக்கி நேத்தில்ல; ரெண்டுவருசமா இப்படித்தேன் கெடக்கு. பழிக்குப்பழி வாங்கிப்புட்டா, உசுருக்கு உசுரு பொயிருச்சுன்னா பாரம் கொறையுமின்னுதான் நெனச்சா. ஆனா ராசகோவாலு செத்ததுலருந்து இன்னும் பாரம் சாஸ்தியானாக்லதேன் இருக்கு. இப்ப சந்திரா வந்துட்டுப் போனதுங்கூட சங்கடமாத்தேன் கெடக்கு. சீனியம்மாளுக்கு ஒண்ணுமே வெளங்கமாட்டங்குது. சீக்கிரம் செத்துட்டா நல்லதுன்னுதேன் அடிக்கடி நெனச்சிக்கிடுதா.

மூத்தவன் அழகரு வந்ததும் முத்துமாரி சொன்னதக் கேட்டு பேயாட ஆரம்புச்சுட்டான். "அவா வந்து அழுதான்னு நீ பாத்துக்கிட்டு இருந்தியாக்கும்ளா. எங்கம்ம உசிரு போவணும்னு தேங்கா ஒடச்சவளா அவ. நாலு எத்து எத்தி வெளிய தள்ளிருக்கணும். இல்லன்னா அருவாமணைய எடுத்து சொருகிருக்கணும்”னு முத்துமாரிக்கு வசவு கெடச்சது.

“எம்மா, நீ எதுக்கும் கவலப்படாத. நம்ம கேசு வலுவா இருக்கு. நீ மட்டும் கோர்ட்டுக்கு வந்து சாச்சி சொல்லிட்டீன்னா நம்மள ஒரு பய அசச்சுக்க முடியாது”ன்னான் பெத்தவளப் பாத்து.

சீனியம்மா கூண்டில நின்னுக்கிட்டிருக்கா. ஒடம்பெல்லாம் வெடவெடன்னு நடுங்குது. வக்கீலய்யா சீனியம்மாட்ட, “ஒங்க புருசனை வெட்டிக் கொன்னது யாருன்னு ஜட்ஜ் ஐயாகிட்ட சொல்லுங்கம்மா”ங்கறாரு.

வெட்டுன காச்சி இப்பதேன் நடந்தாக்ல கண்ணு முன்ன ஓடுது. கண்ணீரு கரகரன்னு ஊத்துது.

“தைரியமா சொல்லுங்கம்மா”ங்கறாரு வக்கீலு.

சீனியம்மாவுக்கு ஒரே ரோசனையா கெடக்கு. அத்தன சனமும் அவளத்தேன் பாக்குது.

அவா பேசாம நிக்கதப் பாத்துட்டு, “பயப்படாம பதிலச் சொல்லுங்கம்மா”ன்னு மறுக்காவும்* கேக்காரு வக்கீலு.

சீனியம்மா கண்ண மூடி புருசன நெஞ்சில நெனச்சிக்கிட்டு, “வெட்டுனது யாருன்னு சரியா தெரியலைய்யா”ன்னு திக்கித் திக்கிச் சொல்லுதா.

“எம்மா”ன்னு அலறுதானுக மகங்காரனுக.

சீனியம்மாவப் பாத்து தலமேல கைய குமிச்சு கும்பிட்டுக்கிட்டே அழுவுதான் சிவராசு.

சீனியம்மாளுக்கும் கண்ணீரு அடங்க மாட்டாமத்தேன் கொட்டுது. ஆனா நெஞ்சு பஞ்சு கணக்கா லேசானாப்பல இருக்கு.
********************************************************************
* எங்கூருத் தமிழுக்கு அர்த்தம்:

· கொலதெய்வம் - குலதெய்வம்
· அரவம் - சத்தம்
· அக்குறும்பு -அக்கிரமம்
· அம்பிட்டானுகன்னா - அகப்பட்டார்களென்றால்
· வெரசு வெரசா - விரைவாக விரைவாக
· ஆராரு - யார்யாரென்று
· கெழக்கால - கிழக்கே (சுடுகாட்டுக்கு)
· வெளம் -சினம்
· வஞ்சு - வைது
· நா- நாள்
· வெளா - விழா
· வட்டில் - தட்டு
· ஆசப்பட்டாக்ல - ஆசைப்பட்ட வாக்கில்
· சாச்சி - சாட்சி
· அப்பைக்கப்ப - அவ்வப்போது
· ஒருதரும் - ஒருவரும்
· ரோசனை - யோசனை
· மறுக்கா - மறுபடியும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** சந்தோஷம் பொங்குதே - 75வது பதிவு ***

Your Ad Here

'உங்களிடம் அபரிமிதமான பணம் இருக்கிறதென்றும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் வைத்துக் கொண்டால் என்ன செய்ய விரும்புவீர்கள்?' என்று நான் கேட்கிற போது பலர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பின்னுட்டத்தில் சொல்லுங்கள்)

வேலை செய்வதும் பணம் சம்பாதிப்பதுமே வாழ்க்கையின் குறிக்கோள் என்கிற ஒரு வரையறை சின்ன வயதிலேயே நமக்குள் விதைக்கப்பட்டுவிடுகிறது. நமக்குத் தெரியாத எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு நமக்குத் தெரிந்த கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நிகழ்காலத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். இது கடந்த
காலத்தில் வாழ்வதற்குச் சமம். நிகழ்காலம் மட்டுமே நிஜம். நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் எதிர்காலத்தின் மகிழ்ச்சிக்கு வித்திட்டதாக அர்த்தம். மாறாக, நிச்சயமற்ற எதிர்கால மகிழ்ச்சிக்காக நிஜமான நிகழ்கால மகிழ்ச்சியை ஒத்தி வைப்பதில் அர்த்தமில்லை

நமது சமூகத்தைப் பொறுத்தவரை நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையில் நூறில் ஒரு பங்கு கூட நாம் நமக்குக் கொடுத்துக் கொள்வதில்லை. இதில் தமிழ்ப்பெண்கள் தியாகச் செம்மல்கள் - திருமணமாகிவிட்டாலே தன் வாழ்க்கை முடிந்துவிட்டதான ஒரு பிரம்மையில் கணவர், குடும்பம் என்று அடுத்தவருக்காக
வாழ்வது மட்டுமே பெரும்பாலான பெண்களுக்கு வாழ்க்கையாகிப் போகிறது. இப்படி நமக்கென்று ஒரு முக்கியத்துவமில்லாமல் வாழ்வதில் நம் சுயம் நமக்கே மறந்து போகிறது. சுயத்தைத் தொலைத்துவிட்டு வாழ்வில் மகிழ்வோடு இருக்கமுடியுமா? ஒன்று விரக்தி வந்துவிடும் இல்லையென்றால் மரத்துப் போய்விடும்.

விரக்தியான 5 மனிதர்களோடு ஒரு அறையில் உங்களை ஒரு நாள் அடைத்துவைத்தால் எப்படி இருக்கும்? அடுத்த நாள் விரக்தியின் திரு உருவமாக வெளிவருவீர்கள்தானே? அப்படியென்றால் விரக்தியும் இயந்திரத்தனமும் நிறைந்த மனிதர்கள் வாழும் உலகில் எப்படி நம்பிக்கை நிலவும்? அன்பு பெருகும்? சமாதானம் திளைக்கும்?

மகிழ்ச்சிக்கு பெரும்பாலும் நிபந்தனை வைத்திருக்கிறோம் - வீடு வாங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும், அயல்நாடு போனால் மகிழ்ச்சி வரும், அங்கீகாரம் கிடைக்கும் வரை மகிழ்ச்சி கிடையாது - இது போல நிறைய நிபந்தனைகள் ஒவ்வொருவரிடமும். இப்படி மகிழ்ச்சியை எதனுடனும் இணைத்துப் பார்க்காமல் சந்தோஷமாக இருக்க முயலலாமே - Whatever happens, Enjoy என்பார் சுவாமி சுகபோதானந்தா. முயன்று பார்க்கலாமே!

மகிழ்ச்சியான மனிதர்களால்தான் மகிழ்ச்சியான சமூகம் அமையும். எனவே நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வது நமக்கு மட்டுமல்ல, உலக நன்மைக்கும் அவசியம். அதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் தொலைக்காட்சியில் அமிழிந்துவிடவேண்டும் என்பதோ அல்லது உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் முழு நேரமும் ஈடுபடவேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.

அவ்வப்போது நமக்கென்று நேரம் ஒதுக்குதல் அவசியம். அப்படி ஒதுக்குகிற நேரத்தில் நமக்கு மகிழ்ச்சி தருகிற அல்லது நிறைவு தருகிற செயல்களைச்
செய்யவேண்டும். அப்படி நேரம் ஒதுக்க முடியாதவர்கள், பணிக்கிடையில் கிடைக்கும் சிறு சிறு இடைவேளைகளில் பிடித்தமான சிறு சிறு செயல்களைச் செய்யலாம் - உதாரணமாக பிடித்த பாடலை முணுமுணுக்கலாம், இரண்டு வரிக் கவிதை எழுதலாம், ஒரு கார்ட்டூன் போடலாம், ஜன்னல் வழியே வெறுமனே வேடிக்கை பார்க்கலாம்
அல்லது பக்கத்து சீட்டுப் பெண்ணையோ பையனையோ பார்த்துப் புன்னகைக்கலாம் :-). ஆனால் இப்படிப் பிடித்த எதைச் செய்தாலும் அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவசியம். பாடலை ஹம் செய்யும்போது சம்பள உயர்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் அதில் பயனேதுமில்லை. எதையும் முழுமையாக ஒன்றிச் செய்வதே ஒருவித தியானம்தான்.

இப்படி சிறுகச் சிறுக நம்மை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ளும்போது மகிழ்ச்சி பல்கிப்பெருகும் வாய்ப்பு அதிகமாகிறது. மகிழ்ச்சி நமது இயல்பாக மாறிப்போகிறது.

தினமும், அன்று நமக்குக் கிடைத்த நன்மைகளை பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்க்கையின் பாஸிடிவான பக்கத்தைப் பார்க்கிற பக்குவம் படிப்படியாக வளரும். முயன்று பாருங்கள். முதலில் 5 நன்மைகளை எழுதுவதற்குக் கடினமாக இருக்கும். மெதுவாக நாள் முழுவதும் நடக்கிற நன்மைகளை மனதில் குறித்துக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். நாளுக்கு நாள் பட்டியல் வளரும் - கூடவே உற்சாகமும்.

இத்தொற்று நோயை விரைவாய்ப் பரப்பி சந்தோஷம் பொங்கும் புது உலகம் படைக்கும் ஆற்றல் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அதை உணர்ந்தால் போதும்!

உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை அறிந்து கொள்ள சில கேள்விகள் இங்கே: (கேள்விகளின் மூலம் நினைவில்லை. நிலாச்சாரலுக்காக அன்புடன் மொழி பெயர்த்துத் தந்தவர்: வி.ராமசாமி)

எந்த விஷயம் பற்றிப், படிப்பதற்குப் மிகப்பிடிக்கும்?

ஊடகங்களில் எந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்க்கப் பிடிக்கும்?

எவ்வகையான திரைப்படங்கள் பிடித்தமானவை?

தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் யாவை?

மற்றவர்களுக்காக, நீங்களே முன்வந்து செய்யும் காரியங்கள் யாவை?

நண்பர்களுடன் எவ்விஷயங்கள் குறித்து அலச விரும்புகிறீர்கள்?

எவ்விஷயங்கள் குறித்துப் பகற்கனவு காண்கிறீர்கள்?

தங்களுக்குப் பிடித்த வேலைகள் யாவை?

பள்ளிப்படிப்பின் போது, பிடித்த பாடங்கள் யாவை?

வேறு விஷயங்கள் என்னென்ன பிடிக்கும்?

பொழுது போக்கப் படங்கள் வரைவதுண்டா அல்லது வெறுமனே கிறுக்கவாவது செய்வீர்களா? எதைப்பற்றி?

உலகை ஆளும் வாய்ப்புக் கிடைத்தால், என்னென்ன மாற்றங்கள் செய்வீர்கள்?

லாட்டரியில் கோடி கிடைத்தால், அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

தங்களுக்குப் பிடித்தமானவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்கள்?

தாங்கள் இறந்தபின், தங்களை நினைவுபடுத்துபவை எவையாயிருக்க விரும்புகிறீர்கள்?

தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருட்கள் யாவை?

தங்கள் அரசியல் கருத்துக்களை எப்படி விவரிப்பீர்கள்?

தாங்கள் புகழும் நபர் யார்; ஏன் அவரைப் புகழ்கிறீர்கள்?

தங்கள் முன்னேற்றத்திற்குக் காரணமான வேலைகள் யாவை?

தாங்கள் இன்னும் செய்யாத, சிறப்பாகச் செய்யக்கூடிய, வேலைகள் யாவை?

தங்கள் நீண்டகால அபிலாஷைகள் யாவை?

தங்கள் பதில்களைச் சோதியுங்கள். தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒன்றிற்கும் மேற்பட்ட பரிமாணத்தில், தனிப்பட்ட ஒரு நம்பிக்கையையோ, நடத்தையையோ அடையாளம் காணமுடிகிறதா? எந்த ஒரு பதிலும், திரும்பத் திரும்ப வந்து, தங்களை உருவகப்படுத்துகிறதா?

இந்தப் பதில்களைக்கொண்டு, கீழ்க்காணும் தொடர்களைப் பூர்த்தி செய்தால் உங்களைக் குறித்த ஒரு உருவம் கிடைக்கும்

எனக்கு மிகப் பிடித்தது ...

நான் மிக நம்புவது ...

நான் மிக மதிப்பது ...

என்னால் மிக நன்றாகச் செய்யக்கூடியது ...

வழமான வாழ்வுக்கு வேண்டியதாய், நான் நம்புவது ...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

***பூப்பறிக்க வருகிறோம் - இறுதி முடிவுகள்!***

Your Ad Here

6வது சுற்று:
6வது சுற்றுக்கு முந்தைய நிலவரப்படி, போட்டி ரோஜாவுக்கும் சாமந்திக்கும்தான். அதனால் மல்லிகை அணிக்கு விழுந்த செல்லாத ஓட்டுக்களும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
(வாக்கு எண்ணிக்கையில் துணைபுரிந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி)

வாக்குகள் விபரம்:
தாமரை :0
ரோஜா :24
மல்லிகை:8
சாமந்தி:2

ஆக, 6 சுற்றுகளிலும் சேர்த்து மொத்தம் 94 மதிப்பெண்கள் பெற்று 9 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் சாமந்தி அணியைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடுவது பாப்புலர் பாண்டி நாட்டு தங்கம்s! வாழ்த்துக்கள்!

நேரப் பிரச்சனை அவர்களுக்கு பாதகமாக இருந்தாலும் கொத்தனார் - குமரன் அணி வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணங்கள் அவர்களது டீம் ஸ்பிரிட்டும் ஸ்போர்டிங் ஸ்பிரிட்டும்தான். சாமந்தி அணி நன்றாக விளையாடினாலும் 6வது சுற்றில் கவனம் செலுத்தவில்லை. அதுவே அவர்களது தோல்விக்கு முக்கியக் காரணம்.

குமரனுக்கும் இலவசக் கொத்தனாருக்கும் நிலா ஷாப் வழங்கும் சோ (அ) கிரேசி மோகனின் நாடக டிவிடி வழங்கப்படும். (போய் பார்த்து எது வேணும்னு சொல்லுங்க)
மின் நூல் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் அனுப்பிவைக்கப்படும்

கலந்து கொண்ட பார்க்கவந்த அனைவருக்கும் நன்றி.
இந்த அனுபவம் குறித்த விரிவான பதிவு விரைவில்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

*** சந்தோஷம் பொங்குதே - 75வது பதிவு ***

Your Ad Here

'உங்களிடம் அபரிமிதமான பணம் இருக்கிறதென்றும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் வைத்துக் கொண்டால் என்ன செய்ய விரும்புவீர்கள்?' என்று நான் கேட்கிற போது பலர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பின்னுட்டத்தில் சொல்லுங்கள்)

வேலை செய்வதும் பணம் சம்பாதிப்பதுமே வாழ்க்கையின் குறிக்கோள் என்கிற ஒரு வரையறை சின்ன வயதிலேயே நமக்குள் விதைக்கப்பட்டுவிடுகிறது. நமக்குத் தெரியாத எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு நமக்குத் தெரிந்த கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நிகழ்காலத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். இது கடந்த
காலத்தில் வாழ்வதற்குச் சமம். நிகழ்காலம் மட்டுமே நிஜம். நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் எதிர்காலத்தின் மகிழ்ச்சிக்கு வித்திட்டதாக அர்த்தம். மாறாக, நிச்சயமற்ற எதிர்கால மகிழ்ச்சிக்காக நிஜமான நிகழ்கால மகிழ்ச்சியை ஒத்தி வைப்பதில் அர்த்தமில்லை

நமது சமூகத்தைப் பொறுத்தவரை நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையில் நூறில் ஒரு பங்கு கூட நாம் நமக்குக் கொடுத்துக் கொள்வதில்லை. இதில் தமிழ்ப்பெண்கள் தியாகச் செம்மல்கள் - திருமணமாகிவிட்டாலே தன் வாழ்க்கை முடிந்துவிட்டதான ஒரு பிரம்மையில் கணவர், குடும்பம் என்று அடுத்தவருக்காக
வாழ்வது மட்டுமே பெரும்பாலான பெண்களுக்கு வாழ்க்கையாகிப் போகிறது. இப்படி நமக்கென்று ஒரு முக்கியத்துவமில்லாமல் வாழ்வதில் நம் சுயம் நமக்கே மறந்து போகிறது. சுயத்தைத் தொலைத்துவிட்டு வாழ்வில் மகிழ்வோடு இருக்கமுடியுமா? ஒன்று விரக்தி வந்துவிடும் இல்லையென்றால் மரத்துப் போய்விடும்.

விரக்தியான 5 மனிதர்களோடு ஒரு அறையில் உங்களை ஒரு நாள் அடைத்துவைத்தால் எப்படி இருக்கும்? அடுத்த நாள் விரக்தியின் திரு உருவமாக வெளிவருவீர்கள்தானே? அப்படியென்றால் விரக்தியும் இயந்திரத்தனமும் நிறைந்த மனிதர்கள் வாழும் உலகில் எப்படி நம்பிக்கை நிலவும்? அன்பு பெருகும்? சமாதானம் திளைக்கும்?

மகிழ்ச்சிக்கு பெரும்பாலும் நிபந்தனை வைத்திருக்கிறோம் - வீடு வாங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும், அயல்நாடு போனால் மகிழ்ச்சி வரும், அங்கீகாரம் கிடைக்கும் வரை மகிழ்ச்சி கிடையாது - இது போல நிறைய நிபந்தனைகள் ஒவ்வொருவரிடமும். இப்படி மகிழ்ச்சியை எதனுடனும் இணைத்துப் பார்க்காமல் சந்தோஷமாக இருக்க முயலலாமே - Whatever happens, Enjoy என்பார் சுவாமி சுகபோதானந்தா. முயன்று பார்க்கலாமே!

மகிழ்ச்சியான மனிதர்களால்தான் மகிழ்ச்சியான சமூகம் அமையும். எனவே நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வது நமக்கு மட்டுமல்ல, உலக நன்மைக்கும் அவசியம். அதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் தொலைக்காட்சியில் அமிழிந்துவிடவேண்டும் என்பதோ அல்லது உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் முழு நேரமும் ஈடுபடவேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.

அவ்வப்போது நமக்கென்று நேரம் ஒதுக்குதல் அவசியம். அப்படி ஒதுக்குகிற நேரத்தில் நமக்கு மகிழ்ச்சி தருகிற அல்லது நிறைவு தருகிற செயல்களைச்
செய்யவேண்டும். அப்படி நேரம் ஒதுக்க முடியாதவர்கள், பணிக்கிடையில் கிடைக்கும் சிறு சிறு இடைவேளைகளில் பிடித்தமான சிறு சிறு செயல்களைச் செய்யலாம் - உதாரணமாக பிடித்த பாடலை முணுமுணுக்கலாம், இரண்டு வரிக் கவிதை எழுதலாம், ஒரு கார்ட்டூன் போடலாம், ஜன்னல் வழியே வெறுமனே வேடிக்கை பார்க்கலாம்
அல்லது பக்கத்து சீட்டுப் பெண்ணையோ பையனையோ பார்த்துப் புன்னகைக்கலாம் :-). ஆனால் இப்படிப் பிடித்த எதைச் செய்தாலும் அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவசியம். பாடலை ஹம் செய்யும்போது சம்பள உயர்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் அதில் பயனேதுமில்லை. எதையும் முழுமையாக ஒன்றிச் செய்வதே ஒருவித தியானம்தான்.

இப்படி சிறுகச் சிறுக நம்மை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ளும்போது மகிழ்ச்சி பல்கிப்பெருகும் வாய்ப்பு அதிகமாகிறது. மகிழ்ச்சி நமது இயல்பாக மாறிப்போகிறது.

தினமும், அன்று நமக்குக் கிடைத்த நன்மைகளை பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்க்கையின் பாஸிடிவான பக்கத்தைப் பார்க்கிற பக்குவம் படிப்படியாக வளரும். முயன்று பாருங்கள். முதலில் 5 நன்மைகளை எழுதுவதற்குக் கடினமாக இருக்கும். மெதுவாக நாள் முழுவதும் நடக்கிற நன்மைகளை மனதில் குறித்துக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். நாளுக்கு நாள் பட்டியல் வளரும் - கூடவே உற்சாகமும்.

இத்தொற்று நோயை விரைவாய்ப் பரப்பி சந்தோஷம் பொங்கும் புது உலகம் படைக்கும் ஆற்றல் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அதை உணர்ந்தால் போதும்!

உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை அறிந்து கொள்ள சில கேள்விகள் இங்கே: (கேள்விகளின் மூலம் நினைவில்லை. நிலாச்சாரலுக்காக அன்புடன் மொழி பெயர்த்துத் தந்தவர்: வி.ராமசாமி)

எந்த விஷயம் பற்றிப், படிப்பதற்குப் மிகப்பிடிக்கும்?

ஊடகங்களில் எந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்க்கப் பிடிக்கும்?

எவ்வகையான திரைப்படங்கள் பிடித்தமானவை?

தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் யாவை?

மற்றவர்களுக்காக, நீங்களே முன்வந்து செய்யும் காரியங்கள் யாவை?

நண்பர்களுடன் எவ்விஷயங்கள் குறித்து அலச விரும்புகிறீர்கள்?

எவ்விஷயங்கள் குறித்துப் பகற்கனவு காண்கிறீர்கள்?

தங்களுக்குப் பிடித்த வேலைகள் யாவை?

பள்ளிப்படிப்பின் போது, பிடித்த பாடங்கள் யாவை?

வேறு விஷயங்கள் என்னென்ன பிடிக்கும்?

பொழுது போக்கப் படங்கள் வரைவதுண்டா அல்லது வெறுமனே கிறுக்கவாவது செய்வீர்களா? எதைப்பற்றி?

உலகை ஆளும் வாய்ப்புக் கிடைத்தால், என்னென்ன மாற்றங்கள் செய்வீர்கள்?

லாட்டரியில் கோடி கிடைத்தால், அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

தங்களுக்குப் பிடித்தமானவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்கள்?

தாங்கள் இறந்தபின், தங்களை நினைவுபடுத்துபவை எவையாயிருக்க விரும்புகிறீர்கள்?

தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருட்கள் யாவை?

தங்கள் அரசியல் கருத்துக்களை எப்படி விவரிப்பீர்கள்?

தாங்கள் புகழும் நபர் யார்; ஏன் அவரைப் புகழ்கிறீர்கள்?

தங்கள் முன்னேற்றத்திற்குக் காரணமான வேலைகள் யாவை?

தாங்கள் இன்னும் செய்யாத, சிறப்பாகச் செய்யக்கூடிய, வேலைகள் யாவை?

தங்கள் நீண்டகால அபிலாஷைகள் யாவை?

தங்கள் பதில்களைச் சோதியுங்கள். தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒன்றிற்கும் மேற்பட்ட பரிமாணத்தில், தனிப்பட்ட ஒரு நம்பிக்கையையோ, நடத்தையையோ அடையாளம் காணமுடிகிறதா? எந்த ஒரு பதிலும், திரும்பத் திரும்ப வந்து, தங்களை உருவகப்படுத்துகிறதா?

இந்தப் பதில்களைக்கொண்டு, கீழ்க்காணும் தொடர்களைப் பூர்த்தி செய்தால் உங்களைக் குறித்த ஒரு உருவம் கிடைக்கும்

எனக்கு மிகப் பிடித்தது ...

நான் மிக நம்புவது ...

நான் மிக மதிப்பது ...

என்னால் மிக நன்றாகச் செய்யக்கூடியது ...

வழமான வாழ்வுக்கு வேண்டியதாய், நான் நம்புவது ...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.