.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Wednesday, November 30, 2005

காணாமல் போன என் கிராமம்

Your Ad Here

சிவாவின் நெல்லைத் தமிழ் என் சிறுவயது தாத்தா ஊர் நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது. கரிசல் கிராமத்தில் பிறந்துவிட்டு என்னவோ அயல்நாட்டிலிருந்து வந்தது போல் நெல்லைத் தமிழைக் கேலிபேசியதும் பதிலுக்கு என் கூட்டாளிப் பிள்ளைகளிடம் என் கரிசல் தமிழ் கந்தலாகிப் போனதும் சுகமான ஞாபகங்கள். இன்றைக்கு தேம்ஸ் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டிருக்கும் போது அந்த சங்கீதத் தமிழுக்காய் மனதுக்கள் அப்படி ஒரு ஏக்கம். (நெல்லைத் தமிழுக்காகவே டும் டும் டும் படத்தை மூன்று முறை பார்க்கத் தோன்றியது)

புரட்டாசிப் பொங்கல், கொன்றையாண்டி கோவில் படையல், ‘கல்லா மண்ணா’ என்று புழுதியில் புரண்டு விளையாடிய வீதிகள் எல்லாம் இனி நினைவுகளில் மட்டுமே என்ற எண்ணம் எழும்போது மனதை என்னவோ செய்கிறது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த போது தெரியாமல் போன அதன் சுகந்தம் தூர தேசத்தில் இருக்கும் போது வெகுவாய் ஈர்க்கிறது.

உணர்ச்சிகளை முடக்கிக் கொள்ளத் தெரியாத அப்பாவி மனங்கள், மண்ணுக்கேற்றார் போல் வளைந்து கொண்ண்டு கொஞ்சும் தமிழ், உறவுமுறை சம்பிரதாயங்கள், உள்ளூர் வரைமுறைகள்... இப்படி ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தனி கலாசாரமே உண்டல்லவா?

இப்படி நினைத்துக் கொண்டு ஆசையாய் கிராமத்தில் கால்பதித்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. தாவணி அணிந்த பெண்களைப் பார்க்கவே முடிவதில்லை. என்னைப் புடவையில் பார்த்ததும் ‘என்னக்கா இன்னும் பட்டிக்காடாவே இருக்கீங்க’ என்று கேலி பேசுகிறார்கள் என் கிராமத்துப் பெண்கள்!

மூணாங்கிளாசில் ஆங்கிலம் கற்க ரம்பித்தது போய் மூன்று வயசில் ங்கில ரைம்ஸ் சொல்லித்தர ரம்பித்து விடுகிறார்கள். மறந்து கூட ‘அம்மா இங்கே வா வா’ சொல்லித் தருவதில்லை. ‘டாடி, மம்மி’ என்று அழைக்கப் பழக்கியிருக்கிறார்கள் என் சிறு வயதுத் தோழிகள்!

தட்டாங்கல்லயும் பல்லாங்குழியையும் என் கிராமம் மறந்து போய்விட்டது. ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்று பாடிக் கொண்டே விளையாண்டதை எல்லாம் யாரும் பிள்ளைகளுக்குச் சொல்லி இருக்கவில்லை. வேப்பங்கொட்டை பொறுக்கும், புளியங்காய் அடிக்கும், கொடிக்காய் பறிக்கும் அனுபவங்கள் எல்லாம் இந்தப் பிள்ளைகளுக்குக் கிடைக்குமா? பாம்படம் அணிந்த பாட்டிகளை ·போட்டோவிலேனும் இவர்களுக்குப் பார்க்கக் கிடைக்குமா?

சென்னையில் தமிழ் முக்கால்வாசி காணாமல் போய்விட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இனி நெல்லையில் ‘சுகமா இருக்கியளா?’ போன்ற பாச விசாரிப்புகள் தொலைந்து போக எவ்வளவு நாளாகும் என்ற கிலி மனதைக் கவ்வுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கிராமியப் பாடல்களைப் பதிவு செய்வது போல் கிராமிய பேச்சு வழக்குகளையும் நடைமுறைகளையும் கூடப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை உண்டு. நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

அப்படிப் பதிவு செய்யாத பட்சத்தில் இன்னும் இருபது ண்டுகளில் வட்டாரத் தமிழ் வழக்குகளைக் கேட்கிற பாக்கியம் யாருக்கும் இல்லாமல் போய்விடும். ஆனால் டி.வி தமிழ் (?) மட்டும் உயிரோடிருக்கும்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.