.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, December 30, 2005

இங்கிலாந்தை உணவினால் வென்ற இந்தியர்கள்

Your Ad Here

சிங்கப்பூர் ஒலி 96.8க்காக 15 செப் 2002 அன்று தயாரித்தளித்த சிறு செய்திக் கோவை:

ஆங்கிலேயர் இந்தியாவை ஆயுதத்தால் வென்றார்கள். இந்தியர் இங்கிலாந்தை உணவினால் வென்றார்கள்' என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. அந்த அளவு ஆங்கிலேயர்களுக்கு இந்திய உணவு மீது மோகமுண்டு. 'curry' என்ற்தான் அவர்கள் இந்திய உணவைப் பொதுவாகக் குறிப்பிடுவார்கள்.

பெரும்பாலும் வட இந்திய உணவு வகைகள் ஆங்கிலேயருக்கு ஏற்றார் போல சில மாற்றங்களை அடைந்து ஆங்கிலோஇந்திய உணவு வகைகளாகத்தான் இங்கு காணப்படுகின்றன. உதாரணமாக பால்டி எனப்படும் உணவு வகை இங்கு பர்மிங்ஹாமில்தான் கண்டுபிடிக்கப் பட்டது. சிக்கன் திக்கா மசாலா தேசிய உணவாகவே இப்போது கருதப்படுகிறது. இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகள் இன்னும் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.

தொலைக்காட்சிகளில் கூட இந்திய சமையல் நிகழ்ச்சிகள் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.சிறப்பு அங்காடிகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட துரித இந்திய உணவுவகைகளும் விற்பனைக்குள்ளன.

ஒரு அயர்லாந்துப் பெண்மணியை மணந்து இங்கிலாந்து வந்த Sake Deen Mahomed என்ற இந்தியர்தான் 1809 ம் ஆண்டு Hindustani Coffee House என்ற இந்திய உணவகத்தை இலண்டன் போர்ட்மேன் சதுக்கத்தில் முதன்முதலில் ஆரம்பித்தார். 1927-ல் ரம்பிக்கப்பட்ட வீராசாமி என்ற உணவகத்திற்கு டென்மார்க் மன்னர் அடிக்கடி வந்ததாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

விக்டோரியா மகாராணி இந்திய உணவை விரும்பிய காரணத்தால் 100 ண்டுகளுக்கு முன்பே பக்கிங்ஹாம் அரண்மனையில் இந்திய சமையல் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

கடந்த 30 ண்டுகளில் பல இந்திய உணவகங்கள் இங்கு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரிட்டனில் இந்திய உணவு வர்த்தகத்தின் மதிப்பு வருடத்திற்கு 3.5 பில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. உணவகங்களில் செலவிடப்படும் பணத்தில் இது இரண்டில் மூன்று பாகம் என்று தெரிகிறது. 2.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வாரமும் இந்திய உணவகங்களை நாடுகிறார்கள்.

இந்த உணவகங்களை நடத்துபவர்களில் தொண்ணூறு சதவீதம் பங்களாதேசத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய உணவைப் பிரபலப்படுத்துவதறகாக 1962ம் ண்டு Pat Chapman என்ற பிரபல சமையல் கலைஞரால் The Curry Club என்ற சங்கம் தொடங்கப்பட்டது. இன்றும் பல்தரப்பட்ட மக்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து வருகின்றனர்..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home