.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Saturday, May 14, 2005

இணைய இதழ்கள் என்றால் இளப்பமா?

Your Ad Here

'ராமஜெயம் எழுதினால் கூட பிரசுரிக்கின்றன இணைய இதழ்கள்' என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கள். அதென்னவோ தெரியவில்லை - நம்மவர்களுக்குக் குறை சொல்லித் திரிவதென்றால் இனிப்பு சாப்பிடுவது போல. அதே சமயம் நிறையைத் தட்டிக் கொடுக்க ஆயிரத்தில் ஒருவர்தான் முன் வருவார்கள்.

ஒட்டு மொத்தமாய் இணைய இதழ்களென்றாலே படைப்புகளுக்காக அலைகிறவர்கள் என்கிற எண்ணம் கட்டுரையாளருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை. அப்படியே அலைந்து திரிந்து சேகரித்தாலும் கண்டதை எல்லாம் பிரசுரித்தால்தானே தவறு? எங்கோ நடந்த ஒரு சில குற்றங்களுக்காக இணைய இதழ்களை ஒட்டுமொத்தமாய் இப்படி மட்டம் தட்டினால் எப்படி?
இணைய இதழ்கள் வருவாய்க்காகவா நடத்தப்படுகின்றன? நிலாச்சாரல் உட்பட பல சஞ்சிகைகள் கணிசமான நேர முதலீட்டுடன் தன்னார்வத்துடன் நடத்தப்படுபவையே. படைப்புகளைக் கவனமாய்ப் பரிசிலித்து தகுதியானவையாகக் கருதப்படுபவை மட்டுமே நிலாச்சாரலில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் பல படைப்புகள் மெருகேற்றப்பட்டே பிரசுரிக்கப் படுகின்றன. ஒரு இணைய இதழை நடத்திப் பார்த்தால்தான் இதிலுள்ள சிரமங்கள் புரியும்.

அச்சு இதழ்களைப் புதிய படைப்பாளிகள் நெருங்கவே முடியாத சூழலில் அவர்களுக்கு மேடை கொடுத்து அவர்களை வார்த்தெடுக்கும் பணியை இணைய இதழ்கள் செய்து வருகின்றன என்பதை சற்றே மனதில் கொள்வது நல்லது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At May 14, 2005 2:05 AM, Blogger மாயவரத்தான் said...

//'ராமஜெயம் எழுதினால் கூட பிரசுரிக்கின்றன இணைய இதழ்கள்'//
தப்பா ஒண்ணும் சொல்லிடலயே.. நல்ல விஷயம் எது எழுதினாலும் இணைய இதழ்களில் பிரசுரம் செய்கிறார்கள் என்ற கோணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நிலா.. டேக் இட் ஈஸி!

 
At May 14, 2005 5:19 AM, Blogger வானம்பாடி said...

//'ராமஜெயம் எழுதினால் கூட பிரசுரிக்கின்றன இணைய இதழ்கள்'//
ஓ.. இதை நீங்கள் இப்படி விளங்கிக் கொண்டீர்களா? இதை சொன்னவர் தான் எதை எழுதினாலும் பிரசுரிக்கிறார்கள் என்ற ஒரு தற்பெருமையில் சொன்னதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். மற்றபடி 'சிறீ ராமஜெயம், சிறீ ராமஜெயம்' என்று எழுதுவதில் என்ன நல்ல விஷயம் என்று என் மரமண்டைக்குப் புரியவில்லை..

 
At May 14, 2005 6:15 AM, Blogger மாயவரத்தான் said...

கண்டபடி அடுத்தவங்களை திட்டி எழுதறதைவிட ராமஜயம் எழுதறதிலே தப்பேயில்லை! என்ன நான் சொல்றது?!

 
At May 14, 2005 3:13 PM, Blogger Muthu said...

நிலா,
இங்கே எழுத ஆரம்பித்துப் பெரிதானதால் அதை என் பதிவிலே பதித்திருக்கிறேன்.
http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_111610570282592982.html

 
At December 10, 2005 2:00 AM, Blogger Maravandu - Ganesh said...

Hi

naan ippo thaan unga bloagai paarththEn ..

ennai naapagam irukkaa :P

 
At December 11, 2005 7:13 AM, Blogger நிலா said...

mannikkanum Ganesh.

konjam ninaivu paduthungaLeen.

 

Post a Comment

<< Home