.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, July 31, 2006

தேன்கூடு - தமிழோவியம் போட்டி: ஆகஸ்டு' 06

Your Ad Here

தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்தும் போட்டிகளில் ஜூலை மாதம் வென்றதன் விளைவாக ஆகஸ்டு மாதப் போட்டியின் தலைப்பை அறிவிக்கும் பாக்யம் (!) பெற்றிருக்கிறேன் :-)

போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php

படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஆகஸ்டு 20, 2006

ஆகஸ்டு 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் ஆகஸ்டு 26 அறிவிக்கப்படும்.


சரி, தலைப்புக்கு வருவோம்

போன போட்டிக்கு மரணம்னு தலைப்புக் கொடுத்து இளவஞ்சி வலைபதிவுலகைக் கொஞ்சம் கனமாக்கிட்டாரில்ல.... அதனால இந்த மாசம் கொஞ்சம் லைட்டான தலைப்பாக் கொடுக்கணும்னு நெனச்சேன்.

எல்லாருக்கும் பரிச்சயமானதா இருக்கணும், அவங்கவங்க வாழ்க்கையில அனுபவிச்சிருக்கணும், ஈசியா கிடைக்கக் கூடியதாகவும் இருக்கணும், தூரத்துக் கானலாப் போகக் கூடியதாகவும் இருக்கணும், சுகமாகவும் இருக்கணும், சுமையாகவும் இருக்கணும்.... இப்படி பல பரிமாணங்களுடைய அம்சம் எளிமையானதா இருக்கமுடியாதே? சிக்கல் நிறைந்ததா இருந்தா அங்கே சுவாரஸ்யமும் இருந்தாகணுமே?

ஆமாமா... ரொம்ப ரொம்ப சர்ப்ரைஸ் தரக்கூடிய அம்சம்தான் இது. எப்போ, எங்கே, எப்படி முளைவிடும்னு சொல்றது ரொம்ப கஷ்டம். சில சமயம் பாத்தீங்கன்னா ஒரு நொடியிலேயே இது ஒரு விருட்சமா கிளையும் விழுதும் பரப்பி விஸ்வரூபம் எடுத்துரும். ஆனா வேற சில சமயங்கள்ல என்னதான் தண்ணி ஊத்தி, உரம் வைச்சு, வியர்வை சிந்தி உழைச்சாலும் கூட சட்டுன்னு கருகிப் போயிரும்.

ஒருவேளை இது நமக்கு ஈசியாவே கிடைச்சிட்டாக்கூட 'அட இவ்வளவுதானா'ன்னு அலட்சியமா இருந்தீங்கன்னு வைங்க - கிடைச்ச வேகத்திலேயே கைநழுவிப் போயிரும். இதை பத்திரப் படுத்தி வைக்கிறதுக்கு மெனக்கெடத்தான் செய்யணும்... ஆனா ஒண்ணு - மெனக்கிடறதால மட்டும் இது நிலைச்சிறாது. அதையெல்லாம் தாண்டின ஏதோ ஒண்ணு இருக்கத்தான் செய்யுது...

இந்நேரம் தலைப்பை ஊகிச்சிருப்பீங்களே!

ஆமா, இந்த மாதப் போட்டியின் கரு 'உறவுகள்'...

உறவுகளுக்கு ஆக்கவும் அழிக்கவும் ஆற்றல் இருக்குங்கறது நம்ம எல்லாருக்குமே தெரியும். சில நிமிஷங்கள்லயே அல்பாயுசுல அழிஞ்சு போற உறவுகள் கூட சில பேரோட வாழ்க்கையின் போக்கையே மாத்திரும்...

ஆனா பாருங்க, இவ்வளவு வீரியமுள்ள உறவுகளை எல்லா சமயமும் தேர்ந்தெடுக்கிற உரிமை நமக்குக் கிடைக்கறதில்லை... சமீபத்தில எங்கேயோ படிச்சது நினைவுக்கு வருது: 'உன்னோட அப்பா ஏழைன்னா அது உன் தப்பில்ல; ஆனா உன் மாமனார் ஏழைன்னா அதுக்கு நீ மட்டுமே பொறுப்பு'

இது ஒரு நகைச்சுவையான கருத்துன்னா கூட பெரும்பாலான உறவுகள்ல ஒருவிதமான சுயநலம் இருக்கறதைச் சுட்டிக் காட்டுதில்லையா?

'நீ அருகிலிருந்தால் தோளில் சுமை; தொலைவிலிருந்தால் நெஞ்சில் சுமை' - இப்படித்தானிருக்கும் பெரும்பாலான பெற்றோருடைய மனநிலை. ஆனா அநேகமான பெற்றோர்கள் இன்னைக்கு வயோதிகத்தில நெஞ்சில சுமையோடதானே வாழவேண்டி இருக்கு? ஒரு வேளை விஞ்ஞானம் வளர வளர, மனித உறவுகளோட வீச்சு சுருங்கிக்கிட்டே வருதோ?

ஒரு மனிதனோட வாழ்க்கையில நீண்ட கால உறவு யாரோட இருக்கும்னு நெனைக்கறீங்க? உடன் பிறந்தவர்களோடதான்...
இன்னைக்கு எத்தனை குழந்தைகளுக்கு அக்கா, அண்ணா, தம்பி, தங்கைன்னு எல்லாவிதமான ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளும் கிடைக்குது?

ஆனா இந்தக் குறை பெரிசா தெரியாமல் போறதுக்கு முக்கியமான காரணம் நண்பர்கள்... நாமே விரும்பிச் சேத்துக்கற உறவுகள்ல முக்கியமானது நட்பு. ரத்த உறவுகளோட நட்பை ஒப்பிட முடியுமா?
......
......
......

இப்படி உறவுகளை உற்றுப் பாக்கப் பாக்க புதுசு புதுசா பற்பல கோணங்கள் தோணிக்கிட்டே இருக்கும்...

அதனால மகா ஜனங்களே, நீங்க புகுந்து விளையாடறதுக்கான களம் ரொம்ப ரொம்பப் பெரிசுங்கறதை உணர்ந்து ஒண்ணுக்கு நாலு படைப்பா போட்டுத் தாக்குங்க... சரியா?

பி.கு: ஒரே ஒரு தலைப்புதான்... 'மிஸ், சாய்ஸ் குடுங்க'ன்னெல்லாம் கேக்கப்படாது...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 28, 2006

சிற்பிகளுக்கு சமர்ப்பணம்!

Your Ad Here

பேச்சி ஆத்தாளையும் பாப்பாளையும் வாசித்து, நேசித்து, வாக்களித்து முதற்பரிசும் வாங்கித் தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.

முதல் நான்கு இடங்களுக்குள் வெறும் 6 வாக்குகளே வித்தியாசம் என்பதால் நீங்கள் எனக்காக நேரம் ஒதுக்கி இட்ட ஒவ்வொரு வாக்கும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. தனக்குக் கூட வாக்களிக்காமல் எனக்கு வாக்களித்த மதுமிதா, நான் வெற்றி பெற்றதற்குத் தானே வெற்றி பெற்றதாய் மகிழ்வுறும் ஜயராமன் போன்றோரின் அன்புதான் முதல் பரிசைவிட எனக்குப் பெரிதாய்த் தெரிகிறது.


அதிக வாக்குகளைப் பெற்றதால் மட்டும் 80 படைப்புகளில் என்னதுதான் சிறந்தது என்பதில்லை. வாக்காளர்கள் அனைவரும் அனைத்துப் படைப்புகளையும் படித்திருக்க வாய்ப்பில்லையே! எனவே, இந்தப் போட்டியின் வெற்றி தோல்வியை படைப்புக்கான உரைகல்லாக எடுத்துக் கொள்ளாமல் இதனை ஒரு பயிற்சிக்களமாகப் பாவித்து தொடர்ந்து பங்கு பெறுவீர்கள் என நம்புகிறேன் (நானும்தான்:-). பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்!

ஆக்கபூர்வமான விமரிசனங்களாலும் கனிவான பாராட்டுக்களாலும் தொடர்ந்து என்னை செதுக்கி வரும் அன்பர்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். உண்மையில் இந்த வெற்றி இந்தச் சிற்பிகளையே சாரும்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 26, 2006

தேவதைத் தோட்டம் கவிதை நூல் பதிவிறக்கம்

Your Ad Here


நிலாரசிகனின் தேவதைத் தோட்டம் மின்னூலை இந்த வாரம் மட்டும் நிலாச்சாரலிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிலாச்சாரலின் உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை. உறுப்பினராவது 30 விநாடி வேலையே.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 25, 2006

தமிழோவியத்தில் நிலாச்சோறு

Your Ad Here

(நான் தயாரித்த தமிழோவியம் சிறப்பிதழின் முன்னுரை)
நன்றி: தமிழோவியம்.காம்

'நான் யார்?' இந்தக் கேள்வியை எனக்குள் நான் கேட்காத நாளில்லை. விடை கிடைத்திருந்தால் ஞானம் பெற்றிருப்பேனே? என்னவென்று என்னை அறிமுகம் செய்து கொள்வது?

நிலா என்றா? நிர்மலா என்றா? நிர்மலா ராஜு என்றா? நிமி என்றா? நிம்மு என்றா...? தெரியவில்லை. இந்த ஒவ்வொரு பெயருக்கும் வெவ்வேறு அடையாளங்கள், பரிமாணங்கள்...

தவிர,

வேதிப் பொறியியலாளர்
மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர்
எழுத்தாளர்
பத்திரிகையாளர்
பத்திரிகையாசிரியர்
குறும்படத் தயாரிப்பாளர்
வானொலி/தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
பேச்சாளர்
பாடகி
ஃபோட்டோகிராஃபர்
க்ரஃபாலஜிஸ்ட்
நாட்டியக்காரி
போன்ற ஏகப்பட்ட அரைகுறை முகங்கள் எனக்குண்டு. வேதிப்பொறியியல் தவிர வேறு எதையும் முறையாகப் பயின்றதில்லை. எந்த முகமும் இன்னும் முழுமை பெறவுமில்லை... இதற்கு மேல் என்னைப் பற்றிச் சொல்லத் தெரியாததால் என்னை அருகிருந்து பார்ப்பவர்கள் சொல்கிறார்கள் (கரகாட்டக்காரன் செந்தில் போல காசு கொடுத்தெல்லாம் சொல்லச் சொல்லலீங்க... நம்புங்க... :-))):


பெற்றோர்: பேச ஆரம்பித்ததிலிருந்தே உண்மையே பேசுவாள்; அளவுக்கு மீறிய பாசம், மன்னிக்கும் குணம், தகுதி பார்க்காமல் பாகுபாடின்றி பழகும் பண்பு - இவையெல்லாம் விசேஷ குணங்கள். பாலபருவத்திலேயே எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஓய்வில்லா ஆர்வம்தான் இன்று நிலாச்சாரலாய்ப் பொழிகிறது.


கணவர்: A person of commitment, hardwork, perseverance & vision. தப்புன்னா தப்பு... அது கடவுளே ஆனாலும் சரி... no exceptions even for herself. In our hypocritical society, it's difficult to survive this way. But hats off to her... she keeps at it and I am sure she will keep at it. She is very honest - What you see is what you get!

பூங்கொடி (நிலாக்குழு உறுப்பினர்) : என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த எனக்கு எதையும் செய்யலாம் என்ற ஊக்கம் கொடுத்தது நிலாச்சாரலின் நிலா தான். அவரின் வேலை வாங்கும் பாங்கு என்னை எப்பொழுதும் வியக்க வைக்கிறது. ஒவ்வொருவரிடம் மறைந்து இருக்கும் திறமையை அறிந்து அதை வெளிக்கொண்டுவருவதில் அவருக்கு நிகர் அவரே தான். எனக்கு கிடைத்த நண்பர்களில் இவரை ஓர் உற்ற தோழியாக நான் கருதுகிறேன் என்று கூறினால் அது மிகையாகாது. எல்லாவற்றிலும் சிறப்பு நாங்கள் இது வரை நேரில் சந்தித்தது கூட இல்லை.

ராஜி (தோழி) : The Nirmala I knew years back was a confident person, who used to be admired but misinterpreted by many as aggressive and pushy. I used to wonder at her capabilities, admire her hardworking nature and also understand a person who wanted to prove to the world that she can. Some ways of God tested her and moulded her to a person of different nature. The Nirmala I came to know years after was a mature human being with a ear for all and an individual who had risen above the expectations of many (friends and foes alike!!).

சத்தி சக்திதாசன் (எழுத்தாளர்) : திருமதி நிர்மலா ராஜு ஒரு ஆற்றல் கடல். " நிலாச்சாரல் " எனும் அற்புதமான மின்னிதழின் ஆசிரியராக மட்டுமல்ல அனுபவமிக்க ஒரு எழுத்தாளராகவும் திகழ்கின்றார். முழுநேர மென்பொருள் வல்லுனராக பொறுப்புமிக்க பதவி வகித்துக் கொண்டு, நிலாச்சாரல் போன்றதொரு தரமான தமிழ் மின்னிதழின் முதுகெலும்பாக இருந்து அதை வெற்றிகரமாக நடத்துவது என்பது இலகுவான காரியமன்று. அதைத் திறம்படப் புரியும் நிலா என்னும் நிர்மலாவின் ஆற்றலின் ஆழத்திற்கு இதுவே எடுத்துக்காட்டாக அமைகின்றது. மிகவும் சிநேக மனப்பான்மை கொண்ட நிர்மலா இந்த நிலாச்சாரல் எனும் இதழை ஒரு குடும்பம் போல படைப்பாளிகளுடன் இணைந்து நடத்தி வருகின்றார்.

பல சிறுகதைப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசுகள் பெற்றிருக்கும் இவரது கதைகள் ஆனந்த விகடன், திசைகள், பாக்யா, கல்கி ஆகிய முன்னணி இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.

மணியன் (வாசகர்): நிலாவின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மனிதர்களின் உணர்ச்சிகளை படம் பிடிப்பதில் அவரின் எழுத்துக்கள் சிறப்பானவை. வட்டார மொழியில் நல்ல ஆளுமை உள்ளது. அவரின் கட்டுரைகள் நேர்மறையான, தன்னம்பிக்கையைப் பலப்படுத்தும், புதிய கோணங்களை ஆராயும் விதயங்களைக் கொண்டுள்ளன. 'சுகம் செயல்முறை' ,'கையெழுத்தும் தலையெழுத்தும்' 'வெற்றி பெறுவது எப்படி' போன்ற ஆக்கங்கள் வாழ்க்கையில் தளர்ந்தவர்களுக்கு ஒரு கொழுகொம்பு. நிலாச்சாரல் இதழ் பொருளடக்கமும் கட்டமைப்பும் அவரின் மேலாண்மை திறத்தை வெளிப்படுத்துகின்றன.



இவர்களெல்லாம் என் மேல் மலர் சொரிவதால், என்னை வெறுக்கவும் என் மேல் புழுதிவாரித் தூற்றவும் யாருமில்லை என எண்ணிவிடாதீர்கள். எனக்குத் தெரிந்து சிலர் இருக்கிறார்கள்; தெரியாமல் உலகில் அநேகம் பேர் இருப்பார்கள். அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் நல்லவராக இருக்க இயலாதே! மனித மனங்கள் சிக்கல் நிறைந்தவை - இந்தச் சிக்கல்களில்லாவிட்டால் கதைகளுக்குக் கரு ஏது?


எதையும் வித்தியாசமாய்ச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழோவியத்தின் 'சிறப்பு எழுத்தாளராக' அல்லாமல் 'சிறப்பு ஆசிரியராக'ப் பணியாற்ற வேண்டுமென விரும்பினேன். அதனால் எனக்குப் பிடித்த சில எழுத்தாளர்களுக்குத் தலைப்புக் கொடுத்து சிறப்புக் கட்டுரைகள் எழுதச் செய்து இந்த இதழைத் தொகுத்திருக்கிறேன். ஆக்கம் மற்றும் எழுத்தாளர் பற்றிய எனது சிறுகுறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. நான் ஆக்கிய இந்த நிலாச்சோறு உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தக் கூட்டஞ்சோற்றில் இடம் பெற்றிருக்கும் பதார்த்தங்கள்:

செய்யின் ரீயாக்ஷன் - பயங்கரவாதத்தின் ஒரு முகம் : முகமூடி
வைரமுத்து ஏற்றிய மெழுகுவத்தி - கவி ஆய்வு: புகாரி
ரஜினி Vs ரசிகர்கள்: நிலா
ஜபரவின் அலசல்
கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்
காலம் கடந்தும் வாழும் வரலாற்று நாயகனின் வாழ்க்கைப் பதிவு நூல் - நூல் அறிமுகம் : மதுமிதா
வி.ஐ.பிக்களுடன் இ-காணல்: நிலா
வித்தியாசமான வடைகள் - சமையல் குறிப்பு: பிரேமா
ஒளிபடைத்த கண்ணினாய் : நிலா
ஓ போடறேன் : நிலா

அன்புடன்

நிலா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, July 20, 2006

ஆத்தாவ மறந்திறாதீகய்யோவ்...!

Your Ad Here

எய்யா, தேங்கூடு போட்டி இம்புட்டு பலமா இருக்கே... நானும் பாப்பாளும் வார கதய படிச்சீகளா? புடிச்சிருக்குன்னு சொன்னவக மவராசரா ஓட்டுப் போட்ருங்கய்யா... இன்னும் படிக்கலீன்னா எங்களப் பத்தி இவுகள்லாம் என்ன சொல்லுதாகன்னு பாத்துட்டு, ஒரு நடை போயி படிச்சிட்டு, புடிச்சிருந்தா ஓட்டுப் போட்ருங்க:

****

கதை அருமையாக வந்திருக்கு!- இளவஞ்சி

இயல்பான வட்டார வழக்கில் மரணத்தை முதுமை எதிர்கொள்வதை நாட்டுநடப்போடு அழகாக கூறியிருக்கிறீர்கள்.- மணியன்

பல நடப்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்துகிறது உங்கள் கதை. பாராட்டுக்கள் - மா. சிவகுமார்

ஆரவாரமில்லாமல் அரங்கேறிய அருமையான நாடகம்!பிறப்பும் இறப்பும் பற்றிய சிறப்பான சிறுகதை!வட்டார வழக்கில் ஒய்யார நடை போட்டு வரும் பட்டான கவிதை!- பேராசிரியர் பெஞ்சமின் லெபோ (பாரிஸ்)

மிக நல்ல கதை நிலா. ஒவ்வொரு மாதமும் அருமையான படைப்புகளாகக் கொடுக்கிறீர்கள். - குமரன்

பதிவுலகின் பாரதிராஜா நீங்க தான்- தேவ்

படித்து கொஞ்ச நேரம் ஆகிறது மனது படபடக்காமல் இருப்பதற்கு.- ஜயராமன்

****
என்னய்யா செய்தது, இந்தக் காலத்தில வெளம்பரம் இல்லன்னா வெட்டியா பொயிருமாமே....

ஆத்தாவ மறந்திறாதீக, ராசா....

- பேச்சி ஆத்தாள்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 17, 2006

ரஜினி ரசிகர்களின் கவனத்திற்கு

Your Ad Here

சமீபகாலமாக ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அது குறித்து ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். வலைபதிவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு கருத்துத் தெரிவித்தால் உதவியாக இருக்கும்:

- ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு சரிதானா? ஏன்?

- ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒதுங்கிவருகிறாரா? அது சரிதானா?

- ரஜினி தன் ரசிகர்களின் பலத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா?

- ரஜினிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ரஜினி ரசிகர்களாக இருக்க முடியுமா?

- ரஜினி ரசிகர் மன்றங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

உதவிக்கு நன்றி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, July 09, 2006

ஜனனம் - தேன்கூடு போட்டிக்காக

Your Ad Here


தெருவோட பொம்பளையாள்கெல்லாம் அரக்கப்பரக்க ஓடுததப் பாத்ததுமே ஊருக்குள்ள பெரிய சாவுன்னு புரிஞ்சிருச்சி பேச்சி ஆத்தாளுக்கு.

அடுத்தது தாந்தான்னு எப்பயும் போல அவளுக்குப் பீதி கெளம்புது. லபக்குன்னு வவுத்த ஓநாய் கவ்வுதாப்ல கிலி. கிறுகிறுன்னு தலைய சுத்துது. உக்காந்திருந்த திண்ணைலயே மெள்ளப் படுக்த்துக்கிடுதா.

இப்பக்கி ஆத்தாவுக்கு எப்பிடியும் ஒரு எம்பத்தச்சு வயசுருக்கும். குடும்பத்தில ஏழெட்டு சாவு பாத்திருப்பா. அவ மூத்த மவன் சம்முவம் கூட போய்ச் சேந்து ஒரு ரெண்டு மூணு வருசம் இருக்கும். ஆனா ஆத்தாவுக்கு வயசாவ ஆவ சாவு பயம் சாஸ்தியாகிட்டே இருக்கு. செத்தாள் கொட்டு கேட்டுச்சின்னா நெஞ்செல்லாம் கலங்கிரும்.

கிறுகிறுப்பு கொஞ்சம் அடங்குனதும் கண்ணத் தொறந்து பாக்கா. தெருவில வெக்கு வெக்குன்னு ஆரோ நடந்து போறது தெரியுது. "ராசா.. எந்த வீட்லய்யா எளவு?"ன்னு கேக்கா முடிஞ்சளவு சத்தம் போட்டு...

"கீழ வீட்டு தேவானைப் பாட்டிதேன். அடுத்து நீதேன்னு ஊருக்குள்ள பேசிக்கிடுதாங்க ஆத்தோவ்... " சொல்லிப்புட்டு கெக்கேகெக்கேன்னு சிரிக்கான் அந்த எடுபட்ட பய.

இந்த நக்கலெல்லாம் கொஞ்ச காலமா நடந்திக்கிட்டுதேன் இருக்கு. ஆத்தாவுக்கு மூஞ்சிலடிச்சாப்ல ஆயிப்போச்சி. 'நான் பாத்து பொறந்த பயக... என்ன எகத்தாளம் பேசுதான்க'

இந்த ஊருல முக்காவாசிப் பேரு ஆத்தா பேறுகாலம் பாத்து பொறந்தவகதேன். இப்ப ஒரு பத்து வருசமாத்தேன் பாக்கப் போறதுல்ல. ஒடம்பு தளந்து போச்சில்ல...

6 புள்ள பெத்த மவராசி. இப்ப ஒத்தையிலதேன் இந்த வீட்டுல கெடக்கா. முந்தி தொழுவா இருந்ததில ஒரு சின்ன ரூம்பும் ஒரு சிலாத்தனான திண்ணையும் கட்டிக்குடுத்து இங்கன குடிவச்சிருக்காங்க மவங்காரங்க. கடைசி மருமவ வவுத்துக்கு வஞ்சகம் பண்ணாம சோறு குடுத்துட்ருவா. ரெண்டாவது மவன் வாராவாரம் வெத்தல பாக்குக்கு காசு குடுத்துட்டுப் பொயிருவான். எப்பயாச்சும் கடையிலருந்து காப்பித்தண்ணி வாங்கி குடிச்சிக்கிடுவா.

எப்பயும் போல காலைல இந்த திண்ணல வந்து ஒக்காந்தான்னா போற வாற எல்லார்ட்டயும் பேச்சுக்குடுப்பா. முக்காவாசிப்பேரு கேக்காதகணக்கா பொயிருவாக. ஒண்ணு ரெண்டு நக்கலா பதில் சொல்லிட்டுப் போவும். எப்பயாவது ஒருத்தவுக நின்னு 'ஆத்தா நல்லாருக்கியா?'ன்னு வெசாரிச்சிட்டா அன்னைக்கு பூரா ஆத்தா ரொம்ப சந்தோசமா இருப்பா.

என்னத்துக்கு இருக்கோமுன்னு தெரியலன்னாலும் என்னன்னு தெரியாத சாவ நெனச்சு ஆத்தா எந்நேரமும் பயந்துகிட்டேதேனிருக்கா. போன வருசம் இழுத்துப் பறிச்சிக்கிட்டுதேன் கெடந்துச்சி ஆத்தாளுக்கு. உறவு சனமெல்லாம் கூடிருச்சி. திடீர்னு 'என்னிய அதுக்குள்ள சாவச் சொல்லுதீகளா'ன்னு எந்திச்சி உக்காந்துட்டா ஆத்தா.

ஆத்தாளுக்கு நல்லா கூனு போட்ருச்சி. கண்ணு கூட லேசு லேசாதேன் தெரியும். ஒத்தப் பல்லு கூட கெடையாது. ஆனா காது மட்டும் நல்லா உசாரா கேக்கும். வாயிக்கும் குறைவு கெடையாது.

செத்தாள் கொட்டு கேக்க ஆரம்பிச்சிருச்சி... ஆத்தா வீட்டுக்குள்ள போவலாமுன்னு மெதுவா எந்திக்கா... அப்பப் பாத்து நாலாம் வீட்டு லச்சுமி வவுத்தப் புடிச்சிக்கிட்டே திண்ணையில வந்து உக்காருதா. 'ஆத்தா, வலி வந்திருச்சி... வீட்ல யாருமில்லை'ன்னு அழுவுதா...

ஆச்சிக்கு பதறுது. தாக்கல் சொல்லி உடுததுக்குக் கூட ஆரையுங் காணும்... "நிறை மாசமா இருக்க பொம்பளைய இப்பிடி ஒத்தையிலையா உட்டுட்டுப் போவாக?"

"இன்னும் ஒரு வாரமிருக்குன்னு நெனச்சோம் ஆத்தா" திணறுதா லச்சுமி

அவ சீலையெல்லாம் ஈரமா கெடக்கு. வவுத்தில கைய வச்சுப் பாக்குதா ஆத்தா...

"தாயி... மெள்ள மெள்ள இந்த சுவத்தப் பிடிச்சிக்கிட்டே உள்ள வந்திருத்தா... "


****


"பொட்டப் புள்ள தாயி" ஆத்தா புள்ளையைத் தூக்க முடியாம தூக்கி லச்சுமிகிட்ட குடுக்கா.... அதக் கேட்டதும் லச்சுமி ஓன்னு அழுவுதா... "மூணாவதும் பொட்டையாப் போச்சே ஆத்தா... புள்ள வேண்டாம் வேண்டாமின்னாரு ஆத்தா. நாந்தேன் ஆம்பளப் புள்ளக்கி ஆசப்பட்டு பெத்தேன். "

கொஞ்ச நேரம் கழிச்சி லச்சுமியோட மாமியாக்காரி வந்து லச்சுமிய நல்லா வஞ்சு போட்டுப் போனா. மவன் மூணு பொட்டப் புள்ளைகளை எப்பிடிக்
கரையேத்துவானோங்கற கவலை அவளுக்கு.

'வீட்டுப் பக்கம் வந்திராத'ன்னு வேற சொல்லிட்டுப் போறா அந்தப் புண்ணியவதி. புருசங்காரன் எட்டியே பாக்கலை. சாயங்காலமா குடிச்சிப்போட்டு வந்து ஆத்தா வீட்டுக்கு முன்னால சத்தம் போட்டுக்கிட்டிருந்தான்.

நல்ல வேள... பக்கத்துவீட்டு வேணிதேன் பத்தியச் சாப்பாடெல்லாம் செஞ்சு குடுத்து லச்சுமிக்கு ஒத்தாசையா இருக்கா. லச்சுமி அம்மாவுக்கு தாக்கீது சொல்லி உட்ருக்கதா சொன்னா. அவுக ரொம்பத் தொலவுலருந்து வரணும்...

மணி ராத்திரி ஒம்பதரை ஆயிப்போச்சு. சாப்புட்ட சாமான் சட்டியெல்லாம் எடுக்க வந்த வேணிட்ட "அந்தப் புள்ளய கொஞ்சம் இப்டி மடில வை தாயி"ன்னு கேட்டு வாங்கிக்கிடுதா ஆத்தா.

எத்தனப் புள்ளைகள மடில போட்டுக்கிட்டாலும் ஆச அடங்கமாட்டங்குது ஆத்தாவுக்கு. பூப்பந்து கணக்கா சம்முன்னு மடில படுத்திருக்கு பாப்பா. ஆத்தாளுக்கு சத்தம்போட்டு தாலாட்டுப் படிக்கணும்னு ஆசைதேன். முடியமாட்டங்குது...

புள்ள ஆத்தா மடில ஒண்ணுக்குப் பொயிருச்சி. 'எத்தா லச்சுமி, புள்ள துணிய மாத்துத்தா'ங்கா ஆத்தா. அழுதுக்கிட்டே பேசாம படுத்துக் கெடக்கா லச்சுமி. அவா பாடு அவளுக்கு பாவம்...

இன்னும் ரெண்டு தரம் சத்தம் குடுத்திருந்தா எந்திச்சு மாத்திருப்பா. ஆனா ஆத்தாளுக்கு பாவமா இருந்திச்சி. புள்ளைய மடில வச்சுகிட்டே நவண்டு நவண்டு துண்டை எடுத்து துடைச்சிட்டு பழைய வேஷ்டித் துணிய கிழிச்சி பாப்பாளோட இடுப்பச் சுத்திக் கட்டி உடுதா.

பாப்பா கைய கால ஆட்டிக்கிட்டே பளிச் பளிச்சின்னு முழிக்கி. ஆத்தா கண்ணச் சுருக்கி கூர் பண்ணிக்கிட்டுப் புள்ளய நல்லா பாக்கா. புள்ள ஆத்தா மூஞ்சயே பாக்கது போலத் தெரியுது. நெஞ்சுக்குள்ள சிலுசிலுன்னு ஊத்துத் தண்ணி ஓடுத கணக்கா இருக்கு ஆத்தாளுக்கு.

"எங்கிட்ருந்துத்தா வந்த நீயி? யாரு உன்னிய இங்கிட்டு அம்ச்சது தாயி?" ங்கா புள்ளகிட்ட

புள்ள லேசா உதட்ட சுழிக்கி. அந்த சுழில ஆத்தாளோட நெஞ்சு சிக்கிக்கிட்டாக்ல இருக்கு. கண்ணுல தண்ணி ஒழுகுது. சொரசொரன்னு இருக்க கையால புள்ளையோட கன்னத்த தடவுதா ஆத்தா.

"எதுக்கு தாயி இங்கிட்டு வந்த? என்னதான் இருக்குன்னு பாக்க வந்தியாக்கும்?" புள்ளக்கி உறக்கம் சொக்குது. ஆனா ஆத்தா பேச்சை உடுததா இல்ல.


"உன்னிய வேண்டான்னு நெனக்க மக்க மத்தில எம்புட்டு தெகிரியமா வந்திருக்கத்தா நீயி? இந்த ஆத்தாளுக்குத்தேன் இங்கிட்டிருந்து போவதுக்கு பயமாவே கெடக்கு. செத்துட்டா உன்னியப் போல ராச்சத்திமாரையெல்லாம் இப்பிடி மடில வச்சிருக்க முடியாதுல்ல தாயி..." ஆத்தாளுக்கு மேல பேச முடியமாட்டங்குது. சீலைல கண்ணயும் மூஞ்சையும் நல்லா தொடச்சிக்கிடுதா.

புள்ள அரைத் தூக்கத்தில ஆத்தாளப் பாக்கு.

"ஆனா என்னிக்கின்னாலும் போயித்தானத்தா ஆவணும்? ஏந்தாயி, இம்புட்டுக்காணம் இருந்துக்கிட்டு எம்புட்டுத் தெகிரியம் வச்சிருக்க நீயி... அதுல இந்தா இம்புட்டூண்டு குடேன் ஆத்தாளுக்கு" நரம்பாக் கெடக்க கையைக் குமிச்சு புள்ள கண்ணு முன்னால ஆட்டுதா ஆத்தா. சரிங்காப்ல புள்ள இன்னொருக்கா ஒண்ணுக்குப் போச்சு.

ஆத்தாளுக்குத் துணி மாத்த தெம்பு இல்ல. எம்புட்டு வேல பாத்திருக்கு இன்னைக்கு? ஆயாசமா இருக்கு. கண்ணக் கட்டுது.

இறுக்கி மூடிக்கெடக்க பாப்பாளோட பிஞ்சுக் கையைப் பிரிச்சு உள்ளங்கைல ஒத்த விரலால லேசா தடவுதா ஆத்தா. புள்ள அவ விரலை கிச்சின்னு பிடிச்சிக்கிடுது. ஆத்தாளுக்குத் திரும்பியும் அவங்காத்தா வயித்துக்குள்ள போயிட்டாப்ல நிம்மதியா இருக்கு.

மறுநா காலைல ஆத்தா வீட்டுல செத்தாள் கொட்டு கேக்கு. ஆத்தா சாவுக்கு ஆருமே அழல - பாப்பாளத் தவித்து.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 04, 2006

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற ஒரு எளிய வழி

Your Ad Here

வெற்றியை விரும்பாத மனிதர்கள் எவரேனும் உண்டா? வெற்றியைத் தேடிப் போகாத மனிதர்கள் இருக்கலாம். ஆனால் வரும் வெற்றியை வேண்டாம் என்று சொல்பவர்கள் இருக்க வாய்ப்பில்லை. சுய முன்னேற்றக் கட்டுரைகளில் 'வெற்றி'க்குத் தரப்படும் முக்கியத்துவம் அதிகம். Affirmations கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஊக்கம் தரும் வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஆழ்மனம் அதனை நம்ப ஆரம்பித்து பின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்கிறது என்பது நிபுணர்களின் கருத்து.

வெற்றியைத் தேடித் தரும் வாக்கியங்கள் சிலவற்றை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அவற்றைக் கீழே தருகிறேன்: (தேவைப்பட்டவர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளவும்)


Nila is chosen for success.
Nila's personal power is enormous.
Nila, your life is a miracle in the making.
That's right, Nila, you are far more than enough.
Nila, you believe in yourself.
Nila, your higher self believes in you.
Nila, you are destined for happiness, achievement and complete fulfilment.


Nila என்பதற்கு பதில் உங்கள் பெயரைப் போட்டுக் கொண்டு மேற்கண்ட வாக்கியங்களை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்:

1) ஒரு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும்

அல்லது

2) ஒரு நாளில் மூன்று முறை வாசிக்க வேண்டும்

அல்லது

3) மும்மூன்று முறையாக ஒரு நாளில் 4 முறை வாசிக்க வேண்டும்.


எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் வாசிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு விரைவில் வெற்றியை அடைவீர்கள் என்கிறார் Wiseman Eromosele (அந்த வாக்கியங்களின் சொந்தக்காரர்)

அப்புறம் தேன்கூடு போட்டியென்ன, நோபல் பரிசே கூட வெல்லலாம்!

காசா பணமா? உற்சாகமூட்டும் வார்த்தைகள்தானே! முயன்று பாருங்கள்!

(வெற்றி பெற்றால் மறக்காமல் கமிஷனையும் வெட்டிவிடுங்கள் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 03, 2006

'மரணம்'...ம்ம்ம்ம்.....

Your Ad Here

இளவஞ்சி தந்த போட்டிக் கருவான 'மரணம்' எனது பல கதைகளில் வந்துவிட்டது. திரும்பவும் இதே கருவில் சிறுகதை எழுத வேண்டுமா என யோசனையாக இருக்கிறது. கட்டுரை எழுதலாமாவென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

போட்டிக் கருவில் அமைந்த வெள்ளை மனிதர்கள் இங்கே:

அப்பா என்னை இப்படி அனாதரவாய் விட்டு விட்டுப் போயிருக்கக் கூடாது. என்னைப் பிள்ளை மாதிரியா வளர்த்தார்? விபரம் தெரிந்ததலிருந்தே ஒரு தோழன் போலத்தானே நடத்தினார்? அம்மா இல்லாத குறை தெரியக் கூடாது என்று தானே எல்லாமாய் இருந்து வளர்த்து விட்டார். அதற்குரிய பலனை அனுபவிக்கிற காலத்தில் சட்டென்று போய் விட்டார். இருபத்தேழு வயதில் யாருமில்லாமல் ஒற்றையாய் நிற்கிறேன் நான்.

அடுத்த வாரம் அப்பா வரப் போகின்றாரென்ற மகிழ்ச்சியில் சிகாகோ வீட்டைப் பார்த்துப் பார்த்து அலங்கரித்துக் கொண்டிருந்தவன் இப்படிச் சத்திரப்பட்டியில் அவருக்குக் காரியம் செய்து விட்டிருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

காரியம் முடிந்து ஒரு வாரமாயிற்று, வீடு வெறிச்சென்றிருக்கிறது. உள் முற்றத்தில் குருட்டு யோசனையில் இருந்தவனைப் பிஞ்சுக் குரல் கலைக்கிறது,

"சித்தப்பா, அம்மா சாப்பிட வரசொன்னாக." காலில் செருப்பில்லாத ஐந்து வயது அஞ்சலி சொல்லி விட்டு ஓடிப் போனது. கல்லூரியில் படிக்கும் போது கூட ஊட்டி விட்ட அப்பா! நான் திரும்பவும் சூன்யத்தில் அமிழ்கிறேன். மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.