.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Saturday, May 14, 2005

கருவறைக் கடன் (சிறுகதை)

Your Ad Here

என் படைப்புகளிலேயே அதிகம் பின்னூட்டம் பெற்ற சிறுகதை இது. அநேகமாக பின்னூட்டம் தந்த அனைவருமே கதை படித்துக் கண்ணீர் விட்டதாகச் சொல்லி இருந்தார்கள். சத்தியமாய் அழவைக்க வேண்டும் என்பதல்ல கதையின் நோக்கம். (அந்தப் பாவமெல்லாம் மெகா சீரியல் எடுப்பவர்களுக்கே சேரட்டும்!)
விருப்பமிருந்தால் இந்தக் கதையைக் கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள்:

http://www.nilacharal.com/stage/kathai/kat154.html

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இணைய இதழ்கள் என்றால் இளப்பமா?

Your Ad Here

'ராமஜெயம் எழுதினால் கூட பிரசுரிக்கின்றன இணைய இதழ்கள்' என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கள். அதென்னவோ தெரியவில்லை - நம்மவர்களுக்குக் குறை சொல்லித் திரிவதென்றால் இனிப்பு சாப்பிடுவது போல. அதே சமயம் நிறையைத் தட்டிக் கொடுக்க ஆயிரத்தில் ஒருவர்தான் முன் வருவார்கள்.

ஒட்டு மொத்தமாய் இணைய இதழ்களென்றாலே படைப்புகளுக்காக அலைகிறவர்கள் என்கிற எண்ணம் கட்டுரையாளருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை. அப்படியே அலைந்து திரிந்து சேகரித்தாலும் கண்டதை எல்லாம் பிரசுரித்தால்தானே தவறு? எங்கோ நடந்த ஒரு சில குற்றங்களுக்காக இணைய இதழ்களை ஒட்டுமொத்தமாய் இப்படி மட்டம் தட்டினால் எப்படி?
இணைய இதழ்கள் வருவாய்க்காகவா நடத்தப்படுகின்றன? நிலாச்சாரல் உட்பட பல சஞ்சிகைகள் கணிசமான நேர முதலீட்டுடன் தன்னார்வத்துடன் நடத்தப்படுபவையே. படைப்புகளைக் கவனமாய்ப் பரிசிலித்து தகுதியானவையாகக் கருதப்படுபவை மட்டுமே நிலாச்சாரலில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் பல படைப்புகள் மெருகேற்றப்பட்டே பிரசுரிக்கப் படுகின்றன. ஒரு இணைய இதழை நடத்திப் பார்த்தால்தான் இதிலுள்ள சிரமங்கள் புரியும்.

அச்சு இதழ்களைப் புதிய படைப்பாளிகள் நெருங்கவே முடியாத சூழலில் அவர்களுக்கு மேடை கொடுத்து அவர்களை வார்த்தெடுக்கும் பணியை இணைய இதழ்கள் செய்து வருகின்றன என்பதை சற்றே மனதில் கொள்வது நல்லது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பிறவாத வரம் வேண்டும் (சிறுகதை)

Your Ad Here

என்னதான் மனசு மரத்துப் போகவேண்டும் என்று முயற்சி செய்தாலும் வனிதாவுக்குச் சில நேரங்களில் தொண்டைக் குழிக்குள் அடைக்கிற துக்கத்தை அடக்கத்தான் முடியவில்லை. ...மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, May 13, 2005

இன்னும் கொஞ்சம் ஆங்கிலம்...

Your Ad Here

சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சென்னை வானொலியில் ஒரு பேட்டி தர நேர்ந்தது. சுத்தத் தமிழில் பேச எவ்வளவோ முயற்சித்தும் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகள் கலந்துவிட்டன என்று சற்று சங்கடமாக இருந்தது. பேட்டி முடிந்ததும், "நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆங்கிலம் கலந்து பேசியிருந்தால் ரீச் இன்னும் நன்றாக இருந்திருக்கும்" என்றார்களே பார்க்கவேண்டும்!
தமிழகத் தமிழர்கள் தமிழைக் கெடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எனக்கு நினைவுக்கு வந்தது :-)

எங்கும் எதிலும் ஆங்கிலம் என்பது போலத்தான் சென்னை இருக்கிறது. தமிழில் பேசினால் கேவலமான லுக் விடுகிறார்கள். சூப்பர் மார்க்கெட் செக்யூரிட்டிகள் கூட நாம் தமிழில் வினவினால் ஆங்கிலத்தில் பதிலிறுக்கிறார்கள். குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல் கேசட்டுக்கு கடை கடையாய் அலையவேண்டி இருந்தது. வெறுத்துப் போய்க் கேட்டால், "யார் மேடம் தமிழ் ரைம்ஸ் எல்லாம் கேக்கறாங்க?" என்கிறார்கள். தமிழ் பேசுகிற குழந்தைகள் அரிதாகிவிட்டார்கள்!

சென்னை எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஒரு முறையேனும்...(சிறுகதை)

Your Ad Here

மூன்று மாத அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புகையில் மனசுக்குள் என் பிள்ளையையும் கணவரையும் பார்க்கப்போகிற சிலிர்ப்பும் என் கிராமத்தின் மண் வாசனையும் குப்பென வியாபிக்கின்றன. எத்தனை நாகரீகமும் வசதியும் பார்த்தாலும் அந்தப் புழுதிக்காற்றும் அப்பாவி மனங்களும் தருகிற கிறக்கமே தனிதான்... ...மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.